​கண்ணின் மொழி👀👀——————–

​கண்ணின் மொழி👀👀

—————————–

1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது 

2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது

3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது

4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது

5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது.

6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது. 

7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது

8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது

9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.

10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது

11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது

12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.

13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்

14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்

15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது

16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது

17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது

18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது

19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது.

20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது. 

21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது

22. கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது

23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது. 

24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.

25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது 

26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை. 

27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்
நன்றி.

வாழ்க வளமுடன்.

முருங்கைகீரை சூப் செய்யும் முறை

​தலை முடி நன்கு வளர…தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.
முருங்கைகீரை சூப் செய்யும் முறை:
முருங்கைகீரை – 2 கப்

வெண்ணெய் 1 – டீ ஸ்பூன்

கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்

உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

​புயல் எச்சரிக்கை கூண்டு குறித்த விவரம்

​புயல் எச்சரிக்கை கூண்டு குறித்த விவரம்
புயல் எச்சரிக்கைக் குறித்து அந்தந்த துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். இதன்படி, 
புயல் எச்சரிக்கை கூண்டுகள் எண் – 1 மற்றும் 2 – புயல் தொலைதூரத்தில் இருப்பதை குறிக்கும்.
 கூண்டு எண் -3 – துறைமுகங்களில் வழக்கத்தைவிட அதிகமாக காற்று வீசுவதை குறிக்கும். 
கூண்டு எண் – 4 – கடலில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும். 
கூண்டு எண் – 5, 6, 7 – புயல் தீவிரமடைவதை குறிக்கிறது. மேலும் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
 கூண்டு எண் – 8, 9, 10 பெருத்த அபாய எச்சரிக்கை – மணிக்கு 120 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதை குறிக்கும்.

புயல் மற்றும் மழை

​*நாடா’ புயல் தமிழகத்தை என்ன செய்யும்?*

_வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் தமிழக வட கடலோர பகுதியை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மழை போல இருக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. வரும் இரண்டு நாட்களில் எவ்வளவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004-ம் ஆண்டு பின்பற்றப்படுகிறது. அது முதல் பெயர்வைக்கப்படும் 45-வது புயல் நாடா புயலாகும். இந்த புயலுக்கு நாடா என பெயர் தந்தது ஓமன் நாடாகும்.

நாடா புயலினால் இன்று மாலை முதலே மழை இருக்கக் கூடும். புயல் வலுவாக இருப்பதால் கியாண்ட் புயலைப் போல யூ டர்ன் போட வாய்ப்பில்லை. டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை வேதாரண்யம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும். குறிப்பாக கடலூருக்கு அருகில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை முதல், மழை தீவிரமடைந்து டிசமப்ர் 2-ம் தேதி வரை கன மழை பெய்யும். மேலும் தமிழகத்தின் 75% இடங்களுக்கு மழை கிடைக்கும். டிசம்பர் 5-ம் தேதி வரை மழை எதிர்பார்க்கலாம்.

எவ்வளவு மழை பெய்யும்:

மழையின் வீரியத்தை பொறுத்து வானிலை ஆய்வு மையத்தின் மழை அளவீடு:

மழை நாள்: 2.5 மி.மீ மேல் மழை பெய்தால் அது மழை நாள்

லேசான முதல் மிதமான மழை: 2.5 மி.மீ முதல் 35.3 மி.மீ மழை

கன மழை: 64.5 மி.மீ முதல் 124.4 மி.மீ மழை

மிக கன மழை: 124.5 மி.மீ முதல் 200.4 மி.மீ மழை

மிக மிக கன மழை: 200.5 மி.மீ மேல்

நாடா டைம்லைன்:

நவம்பர் 30: தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 1 & 2: தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அனேக இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் மிக கன மழைக்கும் வாய்ப்புள்ளது. சுமார் 65 முதல் 200 மி.மீ அளவுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம். தமிழகத்தின் 75% இடங்களில் மழை இருக்கும். உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மற்றும் மிக கன மழை இருக்கும். காவிரி டெல்டா விவசாயிகள் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். தென் தமிழகத்தில் பெரிய அளவு மழை இருக்க வாய்ப்பில்லை.

டிசம்பர் 3&4: கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நல்ல மழையும் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

புயலின் தாக்கம்:

45 முதல் 65 கி.மீ அளவுக்கு டிசம்பர் 1&2-ம் தேதி மழை காற்றின் வேகம் இருக்கும். குடிசை, ஓட்டு வீடுகள் பாதிக்கப்படலாம். மரங்கள் முறிந்து விழவும் பாதிப்பு இருப்பதால் தொலை தொடர்பு சேவை சிறிய அளவில் பாதிக்கப்படலாம்.

எச்சரிக்கை:

மீனவர்கள் நவம்பர் 30-ம் தேதி மாலை முதல் அடுத்து 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி ஏற்பட்ட முதல் வெள்ளத்தின் போது 246.5 மி.மீ மழை பதிவாகியிருந்தது. டிசம்பர் 1-ம் தேதி 12 மணிநேரத்தில் மட்டும் 272 மி.மீ மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பெருத்த சேதம் ஏற்படுத்துவது போல மழை இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இருந்தபோதும், சாதாரண மழைக்கே தேங்கி நிறுகும் சாலைகள் கொண்ட சென்னை, கன மழைக்கு தயாராகத்தான் இருக்க வேண்டும். கடலூருக்கு மிட்புப் படைகள் தயார் நிலையில் சென்றிருப்பது நல்ல செய்தி.

சொர்க்கம் நரகத்திற்க்கும் உள்ள வேறுபாடு.

​பால.ரமேஷ்.

தினம் ஒரு குட்டிக்கதை.

சொர்க்கம் நரகத்திற்க்கும் உள்ள வேறுபாடு.

கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.

கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், ” இங்கு நீங்கள்

சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை

உருவாக்கி வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள்

சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்றும் ,

கெட்டவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்றும்

பூமியில் பேசிக் கொள்கிறார்களே” என்று கேட்டார்.

மேலும் நான் அதனை பார்க்கலாமா? “அது இரண்டும்

எப்படி இருக்கும் என்று கேட்டார்?” என்றும் கடவுளிடம் கேட்டார்.

கடவுளும் முதலில் நீங்கள் அந்த இரண்டையும் பாருங்கள்,

பின்னர் நான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலைச்

சொல்கிறேன் என்று அந்த நண்பரை முதலில் நரகத்திற்கு

அழைத்துச் சென்றார். நண்பர் நரகத்தை பார்வையிட

சென்ற நேரம் மதிய வேலை சாப்பாடு நேரம். நரகத்தில்

உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்க்கான அழைப்பு

விடுக்கப்பட்டது. அனைவரும் வந்து சாப்பாடு மேசையில்

அமர்ந்தனர். அவர்களுக்கு சாதம், அப்பளம், பாயசம், கூட்டு,

பொரியல், அவியல், இனிப்பு எல்லாம்

வழங்கப்பட்டது.

அனைவரும் மிக தாராளமாக அமரும் வகையில் இட வசதி

இல்லாமையால், சற்று நெருக்கியே அமர்நது இருந்தனர்.

முறையாக சாப்பிட முடியவில்லை. ஒருவர் சாப்பாடு எடுத்து

வாயில் வைக்கும் போது அவரின் கையானது மற்றவரை இடித்தது.

அவரது சாப்பாடு கீழே விழுந்தது. அவர் கோபம்

கொண்டு இடித்தவரை அடித்தார். அவர் அருகில்

இருந்த மற்றவரின் மேல் விழுந்தார். அவர் இவரை அடிக்க,

இவ்வாறாக ஒருவர் மேல் ஒருவர் மேல் விழுந்து அந்த இடமே

போர்க்களமானது. சாப்பாடு எல்லாம் தரையில்

கொட்டி யாரும் சாப்பிட வில்லை. பட்டினியாக

இருந்தனர்.

இதனை பார்த்த நண்பர், கடவுளிடம் என்ன இப்படி இருக்கிறது

நரகம், சொர்க்கத்தில் எப்படி வைத்து இருக்கிறீர்கள்?,

அங்கு தாராளமான இட வசதி,

ஒவ்வொருவருக்கும் தனி தனி மேசை, இதை விட

அதிகமான, தரமான சாப்பாடு என்று வைத்து இருப்பீர்கள்

தானே என்று கேட்டார்.

கடவுள், சிரித்துக் கொன்டே சரி, வாருங்கள் அதையும்

பார்த்து விடலாம் என்று அழைத்து சென்றார். அங்கு

சாப்பாட்டிற்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கும் அதே

மாதிரி இட வசதி இல்லாத மேசை, அதே சாதம், அப்பளம்,

பாயசம், கூட்டு, பொரியல், அவியல், இனிப்பு ஒன்றும்

பெரிய வித்தியாசம் இல்லை. இதனை பார்த்து அதிர்ந்த

நண்பர் என்ன கடவுளே, சொர்க்கத்திற்கும் –

நரகத்திற்கும் நீங்கள் எந்த ஒரு வித்தியசமும் வைக்க வில்லையே?.

அப்படி என்றால் இரண்டிலும் இருப்பதும் ஒன்றுதானா?.

என்று கேட்டார். மேலும் நீங்கள் கண்டிப்பாக

சொர்க்கத்திற்கும்-நரகத்திற்கும்

கொஞ்சமாவது வேறுபாடு வைத்து இருக்க வேண்டும்

என்று உரிமையுடன் நண்பர் கடிந்து கொண்டார்.

கடவுள் அவரிடம், சற்று பொறுங்கள் நடப்பதை

பாருங்கள் என்றார். சொர்க்கத்தில் அனைவரும்

சாப்பிட வந்தனர். ஒருவர் எடுத்து சாப்பாட்டை வாயில்

வைத்தால் அருகில் உள்ளவரை இடிக்கும் நிலை. இரண்டு இரண்டு

பேராக திரும்பிக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஊட்டி

விட்டனர். யாரும் யாரையும் இடிக்க வில்லை, சண்டையும் இல்லை,

உணவும் கீழே விழ வில்லை. அனைவரும் எந்த வித பிரச்சினையும்

இன்றி பசி அமர்ந்தனர்.

இப்போது கடவுள் நண்பரை பார்த்து சொன்னார்,

இங்கு சொர்க்கம்-நரகம் என்று எதுவுமில்லை,

எல்லாமே ஒன்றுதான், மனிதர்கள்தான் தங்கள்

சுயநலத்தால் ஒரு இடத்தை சொர்க்கமாகவும்,

நரகமாகவும் மாற்றுகின்றனர். எங்கு அன்பு உள்ளவர்கள்

அதிகமாக உள்ளார்களோ, எங்கு விட்டுக்கொடுக்கும்

மனப்பான்மை அனைவரிடமும் இருக்கிறதோ அந்த இடமே

சொர்க்கம் என்றார். நீங்கள் இருக்கும் இடத்தை

சொர்க்கமாகவோ இல்லை நரகமாகவோ வைத்துக்

கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது என்றும்

கூறி முடித்தார் கடவுள்.

எந்தெந்த உணவுப் பொருட்கள் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும்.

எந்தெந்த உணவுப் பொருட்கள் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும்.

அரிசி சாதம் – 1 மணி நேரம்பால் – 2 மணி நேரம்தயிர் – 3 மணி நேரம்நெய் – 3 அரை மணி நேரம்பழச்சாறு – 15 – 20 நிமிடங்கள் பருப்பு – 2 அரை மணி நேரம்வேகவைத்த முட்டை- 3 அரை மணி நேரம்மீன் உணவு – 2 அரை மணி நேரம்கோழி இறைச்சி – 4 மணி நேரம்மாட்டு இறைச்சி – 5 மணி நேரம்

இதயத்தை பதம்பார்க்கும் உப்பு கலந்த நொறுக்குத்தீனிகள்.

இதயத்தை பதம்பார்க்கும் உப்பு கலந்த நொறுக்குத்தீனிகள்.

பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டு, விற்கப்படும் உப்பு கலந்த நொறுக்குத்தீனிகளை உட்கொள்வதால், இதயத்தில் பாதிப்பு ஏற்படும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்றும், அதுவும் எண்ணெயில் பொறித்த உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் இருதயத்திற்கு ஆபத்தானது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.இது குறித்த ஆய்வு ஒன்றை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலாளர் ஆய்வு குழுமம் மேற்கொண்டது.இந்த ஆய்வில், 16 ஆரோக்கியமான நபர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் பாதி நபர்களுக்கு குறைந்த அளவு உப்பு உபயோகப்படுத்தப்பட்ட தககாளி சூப் 10 முறை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உப்பு அதிகம் பயன்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக உப்பு பயன்படுத்தப்பட்ட பின்னர் ரத்தமானது இருதய அறைகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரத்த அழுத்தமும் அதிகரித்திருந்தது.இதனை தொடர்ந்து மீதமுள்ள 8 நபர்களிடம் குறைந்த அளவு உப்பு பயன்படுத்தும் போது இருந்த ரத்த ஒட்டத்தின் அளவானது, அதிக அளவு உப்பு பயன்படுத்தியவுடன் இரண்டு மணி நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தது தெரியவந்தது. எனவே அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் தங்களின் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.மேலும் உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ஸைட்டை வெளியிடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருதய பாதிப்பு உடனடியாக ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எண்ணெயில் பொறித்து அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் அதிக அளவில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளது. இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.எனவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பது ஆயுளை குறைக்கும் என்றும் ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளிவரும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உப்பு கலந்த நொறுக்குத்தீனிகளையும், எண்ணெய்யில் பொறித்த பலகாரங்களையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கிய வளமோடு வாழுங்கள்….. 

துறைமுகங்கள் பற்றிசில தகவல்கள் :-

​பால. ரமேஷ்.

தினம் ஒரு தகவல்.

துறைமுகங்கள் பற்றிசில தகவல்கள் :-
இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகம் -13
மேற்கு கடற்கரை துறைமுகம் -6 
1. கண்ட்லா (குஜராத்)

வரியில்லா துறைமுகம்

 உயர் கடலலை துறைமுகம்

ஒதத் துறைமுகம்
2. நவசேவா (மகாராட்டிரா)

ஜவஹர்லால் நேரு துறைமுகம்

மிகப்பெரிய நவீன செயற்கை துறைமுகம்
3. மும்பை (மகாராட்டிரா)

மிகப்பெரிய இயற்கை துறைமுகம்

இந்தியாவின் கடல்வழி நுழைவாயில்
4. மர்மகோவா (கோவா)

இயற்கை. துறைமுகம்

அழகிய கடற்கரை கொண்ட துறைமுகம்
5. மங்களூர் (கர்நாடகா)

குதிரை மூக்கு துறைமுகம்

டைடல் போர்ட் எனப்படும் துறைமுகம்
6. கொச்சி (கேரளா)

 நறுமண துறைமுகம்

அரபிக் கடலின் ராணி 

மும்பை அடுத்து மேற்கு கடற்கரை பெரிய துறைமுகம்
கிழக்கு கடற்கரை துறைமுகம் -6
7. தூத்துக்குடி (தமிழ்நாடு)

 தமிழ்நாட்டின் கடல்வழி நுழைவாயில்

ஆழமற்ற பெரிய துறைமுகம்

 1974 ல் பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.

 முத்து குளித்தல் நடைபெறும் துறைமுகம்

தமிழ்நாட்டின் பழைமையான துறைமுகம்

வேறு பெயர் – கொற்கை

வ.உ.சி. துறைமுகம் 
8. சென்னை (தமிழ்நாடு)

தென்னிந்திய நுழைவாயில்

செயற்கை துறைமுகம்

இந்தியாவின் 3வது பெரிய துறைமுகம்
9. எண்ணூர் (தமிழ்நாடு)

12வது பெரிய துறைமுகம்

 காமராசர் துறைமுகம்
10. விசாகப்பட்டினம் ( ஆந்திரா பிரதேசம்)

டால்பின் மூக்கு துறைமுகம்
ஆழம் அதிகமான துறைமுகம்

இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்
11. பாரதீப் (ஒடிசா)

சீனாவுக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி
12. கொல்கத்தா (ஹூக்ளி) (மேற்கு வங்காளம்)

வைர துறைமுகம்

நதித் துறைமுகம்

இந்தியாவின் இரண்டாம் பெரிய துறைமுகம்

காடர்ன் ரிச் கப்பல் கட்டும் தறம்
 13வது பெரிய துறைமுகம் – போர்ட் பிளேயர் (அந்தமான் தீவு)

கோபம் 

​🌺🌺🌺இவை உங்களுடையவை அல்ல!-

து.ராமராஜ்
🌷ஜென் குரு பான்காய் என்பவரிடம் அவர் சீடர் ஒருவர் வருத்தத்துடன் சொன்னார். “குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைப் போக்க நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்”
🌷ஜென் குருக்கள் வித்தியாசமானவர்கள். அவர்கள் புனித நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவதோ, மணிக்கணக்காய் புத்தி சொல்வதோ இல்லை. பான்காய் சொன்னார். “உன்னுடைய கோபத்தை நீ கொஞ்சம் காட்டினால் அதைப் போக்க என்னால் வழி சொல்ல முடியும்”
🌷சீடர் சொன்னார். “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. எனவே கோபத்தை என்னால் காட்ட முடியாது”
பான்காய் பொறுமையாகச் சொன்னார். “பரவாயில்லை. உன்னிடம் கோபம் இருக்கும் போது நீ அதை என்னிடம் கொண்டு வந்து காட்டுவாயாக”
🌷சீடருக்கு ஒரே தர்மசங்கடம். கோபத்தை எப்படி ஒருவரிடம் கொண்டு போய் காட்ட முடியும்? திடீரென்று வந்து திடீரென்று போகும் கோபம் குருவிடம் வருகிற வரை இருக்குமா? அவன் தன் பிரச்னையைச் சொன்னான். “குருவே, கோபத்தை என்னால் கொண்டு வர முடியாது. கோபம் திடீரென்று ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் கோபம் உங்களிடம் வரும் வரை இருக்காது. காணாமல் போய் விடும்” 
🌷பான்காய் சொன்னார். “அப்படியனால் அது உன்னுடைய கோபமாக இருக்க முடியாது. அது உன் உண்மையான இயல்பாக இருந்தால் அது உன்னிடம் எப்போதும் இருக்கும். அதை நீ எப்போது வேண்டுமானாலும் அடுத்தவருக்குக் காண்பிக்க முடியும். கோபம் நீ பிறந்த போது இல்லை. உன் பெற்றோர்கள் அதை உனக்குத் தரவில்லை. எனவே அது வெளியே இருந்து தான் உன்னிடம் வர வேண்டும். உன்னுடையதல்லாததை, வெளியே இருந்து வருவதை விரட்டியடிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? இனி அப்போது உன்னுள்ளே நுழைய முயன்றாலும் கவனமாக இருந்து அதைப் பிரம்பால் அடித்துத் துரத்து”
🌷பான்காய் மிக அழகாக ஒரு பேருண்மையை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார். சீடர் ‘என் கோபத்தைப் போக்க வழி சொல்லுங்கள்’ என்று கேட்டதறகு ‘என் கோபம்’ என்று சொல்வதே தவறு என்று மிக அழகாகச் சொல்கிறார். பிரச்னையே கோபத்தை தன்னுடன் இணைத்து தன்னுடையதாக பாவிப்பதில் தான் உருவாகிறது என்று கூறுகிறார்.
🌷பான்காய் சொல்வதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் கோபத்துடன் பிறக்கவில்லை. நம் கை, கால்களைப் போல, கண் காது மூக்கு போல நாம் பிறக்கும் போதே அது தரப்பட்டதல்ல. நம் உறுப்பு போல அது நம்முடன் ஒட்டி நாம் பிறந்திருந்தால் அதை நம்மிடம் இருந்து பிரிப்பது இயலாது. உடன் பிறந்தவற்றைத் துண்டித்து எறிவது கஷ்டம். அது பிரிவதே உடலுக்கு ஆபத்து அல்லது ஊனம் என்பதே உண்மை. ஆனால் இடையில் வந்து போகிற உணர்ச்சிகளை எல்லாம் நம்முடையது என்று பாவிப்பதனால் தான் அதனால் நாம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறோம். 
🌷இது கோபத்திற்கு மட்டுமல்ல நம்மை அலைக்கழிக்கும் வெறுப்பு, பொறாமை, வருத்தம் போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் பொருந்தும். இது போன்ற உணர்ச்சிகள் எல்லாம் துன்பத்தைப் பெருக்குபவை. அவற்றை நம்முடையதாக பாவிக்கும் போது, அவற்றை நம்மை அறியாமல் வளர்த்து வலுவாக்குகிறோம். அவை வலிமையாகும் போது அதன் விளைவுகளும் வலிமையாக நம்மைத் தாக்குகின்றன. அந்தத் தாக்குதலால் பாதிக்கப்படும் போது நாம் மூன்று உண்மைகளை நினைவில் வைத்தால் அவற்றின் பிடியில் இருந்து விலகி விடுதலையாகலாம். 
💥1. இந்த உணர்ச்சிகள் என்றுமே என்னுடைய மன அமைதிக்கோ, மகிழ்ச்சிக்கோ வழி வகுப்பதில்லை. மாறாக இவை கவலைக்கும், துக்கத்திற்குமே வழி வகுக்கக் கூடியவை.
💥2. இந்த உணர்ச்சிகள் தவறான அபிப்பிராயங்களாலும், கணிப்புகளாலும் ஏற்படுபவை. இவை என்னிடம் வர முயற்சிக்கும் உணர்ச்சிகள். ஆனால் இவை என்னுடையவை அல்ல. 
💥3. இவற்றை என்னுடையவை என்று நான் அங்கீகரித்தால் ஒழிய, அப்படி நினைத்து பற்றிக் கொண்டிருந்தால் ஒழிய இவை என்னைப் பாதிக்க முடியாது. 
🌷இந்த உணர்ச்சிகளை பான்காய் கூறுவது போல புறத்தில் இருந்து வருபவை என்று உணருங்கள். இதற்கெல்லாம் கோபப்பட வேண்டும், இதையெல்லாம் வெறுக்க வேண்டும், இதற்கெல்லாம் பொறாமைப் பட வேண்டும் என்று நாம் யாரோ போட்ட பாதையில் போக வேண்டியதில்லை. அதை நம் பாதையாக முட்டாள்தனமாய் ஆக்கிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் அப்படி போய் அவதிப்பட வேண்டியதில்லை. 
🌷இது போன்ற உணர்ச்சிகள் வரும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள். அவை வரும் போது வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுங்கள். உங்களுக்குள்ளே விடாதீர்கள். “எனக்கு இயல்பானவன் போன்ற தோற்றத்தில் வந்தாலும் நீ அன்னியன். என்னுடையவன் அல்ல. எனவே போய் விடு” என்று அனுப்பி விடுங்கள். 
🌷இந்த உணர்ச்சிகளை உங்களுடையது என்று நீங்களாகப் பற்றிக் கொண்டு இருந்தால் மட்டுமே உங்களுக்கு தீய பாதிப்புகள் ஏற்படும். அவற்றை உங்களுடையது அல்ல என்று கை விட்டு விடுங்கள். உதறித் தள்ளி விடுங்கள். அவை உங்களை கஷ்டப்படுத்துவது தானாக முடிந்து விடும்.

💥🌺அன்புடன்-து.ராமராஜ்🌺💥

​2500 ல் உலகம் எப்படி ஒரு சிறிய கற்பனை..

​2500 ல் உலகம் எப்படி ஒரு சிறிய கற்பனை..

 🌟
👉தன் வீட்டு மொட்டை. மாடியில்

பழங்கால பயிர்களை. பயிரிட்டு இளைஞர்

சாதனை .(அரிசி. கம்பு. சோளம்.)  😛
👉 உலகத்தில் அதிக (30)வருடம் உயிர் வாழ்ந்த

மனிதர் கின்னஸ் சாதனை . 😀

🌍 வேங்கைமான் அருகே பூமிக்கு அடியில் தண்ணீர் இருப்பதை மஸ்ரோ செயற்க்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது..
👉புளூட்டோவில் இருந்து பூமிக்கு பனி நீர்

எடுக்கும்

திட்டத்தை நவீன மத்திய அரசு முடிவு செய்தனர் . 😂😂
👉இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த

பாக்கிஸ்தான் ரோபோக்களை இந்திய

ரோபோக்கள்.

சுட்டதில் ஐந்து ரோபோக்கள் பழுதடைந்தன.  😀😃😄
👉செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும்

இடையே ரயில் பாலங்கள் கட்ட உலக நாடுகள்

முடிவு செய்தனர்.😄😄

👉 கும்பகோணம் அருகில் மிக பழமையான 500

வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய

இரண்டு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது

அதற்கு சைக்கிள் என்று பெயர் இருந்ததாக

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 

😅 தேர்தலில் வாக்குப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன் கிரகத்தில் வாழும் இந்தியர்கள் அங்கிருந்து1000 G இண்டர்நெட் மூலம் வாக்களிக்களாம்.

🎒சனிக்கோளில்  வாழும்’ இந்தியர்களுக்கு பணம் கொடுப்பதற்காக  ராக்கெட் மூலம் எடுத்துச்சென்ற 1 கோடி ரூபாய் பணத்தை  தேர்தல் பறக்கும் படையினர் பறந்து சென்று பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த ராக்கெட்டின் RC Book, Insurance யை விண்வெளி போலிஸார் பறிமுதல்  செய்து செய்வாய் கிரகத்தின் உச்சநீதி மன்ற கிளையில் ஒப்படைத்தனர்.

👉செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன்

கோவில் திருவிழாவில் பக்தர்கள்

குண்டம்

இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர்.😃😀
👉நேற்று இரவு திடிரென்று விண்ணில்

இருந்து பொழிந்த நீர் துளிகளாள்

மக்கள் அஞ்சி நடிங்கினர் பிறகு விஞ்ஞானிகள்

அதற்கு மழை என்றும்

10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும் என்றும் கூறினர்…
save our nature…

Important news..

பேஸ்புக்கை கலக்கி வரும் ஒரு நகைச்சுவை ்