அப்பா ஏன் எப்போதும் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி
யிருக்கிறார் என்று தெரியவில்லை…..

  1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
  2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
  3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.
  4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை..
  5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
  6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கென்று ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை.
    இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.
  7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.
  8. அம்மா கூறுகிறார், “நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்” என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார். குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
  9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது, ​​குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
    அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்?

அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும் காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.
இருந்தாலும் அப்பா
ஏன் பின்தங்கியே இருக்கிறார் என்றுதான்
தெரியவில்லை…,…

தந்தையைப் போற்றுங்கள்.

படித்ததில் வலித்தது.
🔥அப்பா🔥

நாட்காட்டியாய் கிழிபடுவார் வழிகாட்டியாய் வலம் வருவார்✍️

மொழிபெயர்க்கவே முடியாத கவிதை அப்பா மட்டுமே✍️

தந்தையின் கண்ணீரை இரவுகள் மட்டுமே அறியும்✍️

ஆசைகள் அனைத்தையும் துறந்த துறவி✍️

பிள்ளைகளுக்காக எதை வேண்டுமானாலும் தொல்லைகள் என எண்ணாது வரமாய் ஏற்றுக் கொள்ளும் பெரும் வரம்✍️

கண்ணீரால் அழுது கவலையை கூட கழுவாமல் தண்ணீராய் பாயும் நதி ✍️

புகழையும் பதவியையும் தனக்காக்காமல் தன் பிள்ளைக்கு விளக்காக — கிழக்காக உதிக்கின்ற கதிரவன்✍️

பல நூறு வடிவாக அன்பை பகிரத் தெரிந்தும் பேரன்பின் மெளனத்துள் வசிக்கின்ற
தெய்வம்✍️

தந்தையின் வலியை உணர மகன் தந்தையானாலும் முழுமையாய் உணரவே முடியாது✍️

தாயன்பு கூட தோற்பது தந்தையின் பேரன்பின் அமைதியில் தான்✍️

ஒவ்வொருவரின் முதல் கதா நாயகன் அப்பா மட்டுமே✍️

கருவறை சுமக்காத இரண்டாம் தாய்✍️

அப்பாவின் கோபம் எனப்படுவது நடுச் சாமத்தின் முத்தம்✍️அப்பாவின் சூடான வார்த்தைகள் அதிகாலை தேநீர் ✍️ அப்பாவின் புரியா மொழியை புரிந்த அகராதி அம்மா✍️

அம்மாக்களை உலகமே கொண்டாடும்- ஆனால் அம்மாக்களே உலகம் என கொண்டாடுவது அப்பாக்களை மட்டுமே ✍️ மட்டுமே ✍️

ஆண் பிள்ளைகளுக்கு அப்பப்போ நினைவில் மட்டுமே பெண் பிள்ளைகளுக்கு அப்பா நினைவு தினமும் ஓடோடி வந்து முட்டுமே

அப்பாவின் இறப்பின் பின் மகன்கள் அப்பா போல் வாழ ஆரம்பிப்பார்கள்

மகள்கள் மட்டும் அப்போது தான் அழவே ஆரம்பிப்பார்கள்

✍️அப்பா – ஆண் குழந்தைகளுக்கு வானம் பெண் குழந்தைகளுக்கு அணைக்கட்டு✍️
✍️
பிள்ளைகளிடம் எத்தனை முறையும் தோற்று போகும் அப்பா பிள்ளை ஒரு தடவை கூட தோற்பதை தாங்கவே மாட்டார்✍️

🙏கால் நடையை விட காயப்பட்ட பாதம். அப்பாவின் கால்கள் வெறும் கால்கள் அல்ல
காலத்தின் வேதம்🙏

♥️❤️ ❤️♥️

12th – Bio Zoology – Reduced Portion Full Study Materials

🔵❇️ 12th – Bio Zoology – Reduced Portion Full Study Materials

  • Mr. S. Thiyagarajan

📌 Unit 1
https://bit.ly/3ERPJxj

📌 Unit 2
https://bit.ly/3eJjghV

📌 Unit 3
https://bit.ly/3zmFy2B

📌 Unit 4
https://bit.ly/3Jveinc

📌 Unit 5
https://bit.ly/3qGO60h

📌 Unit 6
https://bit.ly/3qCoDFm

📌 Unit 7
https://bit.ly/3HAHW8Z

📌 Unit 8
https://bit.ly/3sT3hpT

📌 Unit 9
https://bit.ly/3sTBwNR

📌 Unit 10
https://bit.ly/3pOtwvJ

📌 Unit 11
https://bit.ly/3qMjn1U

📌 Unit 12
https://bit.ly/3EQPv9N

🧶🧶 1st – 12th – Assignments – All Subjects – Set 2
https://bit.ly/3zrAfy6

🧶🧶 Assignments Set 1
https://bit.ly/38rAZrc

💥💥 Join District Wise WhatsApp Groups
https://bit.ly/3f2HVwe

🔯🔯 Join Telegram Group
https://t.me/joinchat/8I3aQMj6gzYzNmJl

போகர் மகரிஷியும்அருட்தந்தையும்.

போகர் மகரிஷியும்
அருட்தந்தையும்.

சில வருடங்களுக்கு முன்,
ஒரு Whatsapp groupல்,
(Admin திருமதி.ரேவதி சிவகுமார்
என்று ஞாபகம்), மகரிஷி அவர்களுக்கு
போகமகரிஷி காட்சி தந்தார் என்று
ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

உடனே நான் “இது போன்ற கற்பனை செய்திகளை பதிவிடுவது தவிர்த்தல் நலம் ” என்று Comment செய்தேன்.

உடனே திருமதி ரேவதி அவர்கள் “அது உண்மை. மகரிஷியே அந்த நிகழ்வை
ஒரு கவியாக எழுதி இருக்கிறார்”
என்று கூறினார்.

மகரிஷியின் கவிதை தொகுப்புகளில்
தேடியபோது அந்த கவி கண்ணில் பட்டது.

கவியின் சாராம்சம்:

மகரிஷி அவர்கள் ஆழ்ந்து துரிய தவம் செய்யும்போது ஒரு சித்தர் தோன்றினாராம்.

நான் யார் தெரியுமா? என்று வினவ, மகரிஷிக்கு பேச நாக்கு எழவில்லையாம்.

இவர் போகரோ ? என்று நினைத்தாராம்.

அந்த சித்த பெருமகனார் நறுக்கென்று பேசினாராம்.

உன் நான்கு நற்பணிகளுக்கு உதவுவேன்” என்றாராம்.

1) கர்மயோகம் வாழ்க்கை நெறியை பரவுவதற்கு.
2) அறிவுத் திருக்கோவில் நிறைவு பெற.
3) உன் வயிற்றுப் புண் ஆறுவதற்கு
4 ) ஊக்கமுடன் தொண்டாற்றும் உனக்கு உலகப்பரிசு வர ( அங்கீகாரம்) உதவிடுவேன்.

என்று கூறிவிட்டு ஒரு நொடியில் மறைந்து விட்டார் என்று அருட்தந்தை அக்கவியில் குறிப்பிடுகிறார்.

நான் பழனி மலையில் பல வருடங்களுக்கு முன் மெளனசாமியை சந்தித்த போது கூட ஒரு முறை என்னிடம் எழுதி காட்டி இருக்கிறார்.

போக மகரிஷியின் இருப்பை இன்றும்
நடு இரவு நேரங்களில் மலையில்
இங்கு உணரலாம். நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்” என்று குறிப்பிடுவார்.

இதெல்லாம் சாத்தியமா என்று
நான் வியந்ததுண்டு.

தியானத்தில் தெளிவு பெற பெற, காந்த தத்துவமும், இயற்கையின் தத்துவங்களும் புரிய புரிய, வான் காந்த பிரபஞ்சகளம் தெளிவு கிடைத்த பிறகு, இவை எல்லாம் சாத்தியம்தான் என்று உள்ளுணர்வு கூறுகிறது.

எல்லோரிடமும் சித்தர் பெருமக்கள்
காட்சி தர மாட்டார்கள்.

நம் கர்ம வினைகளின் தூய்மை, நமது எண்ணம் சொல் செயல்களில் நேர்மை, அன்பும் கருணையும் இணைந்த குணாதிசயங்கள், சுருக்கமாக
இறையே நான் என்ற பிரம்மஞானத் தெளிவு, இவை எல்லாம் ஒருங்கிணைந்தால்,சித்தர் தரிசனம் வாய்ப்பு கிடைக்கலாம்.

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

(1) வெட்கம் :- (Shyness )

ஒரு தொழிலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு செயலை செய்யும் பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா அதற்கு நமக்கு தகுதி இருக்கா அதில் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப்பட்டால்
முன்னேற முடியாது…

(2) பயம் :- (Fear)

இதனை நம்மால் செய்ய முடியுமா அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது…

(3) தாழ்வுமனப்பான்மை :- (Poorself-image)

அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை அவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை என நம்மை நாமே தாழ்த்தி கொள்ளல்…

(4) நாளையவாதி :- (Procrastination)

எந்த செயலையும் நாளை நாளை என தள்ளி போட்டு கொண்டே செல்லுதல்…

(5) சோம்பல் :- (Lazyness)

சோம்பல் பட்டுக்கொண்டு எந்த செயலையும் செய்யாமல் இருப்பது…

(6)பிற்போக்கு பழக்க வழக்கம் :- (Negative Habits)

பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள் ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க வழக்கங்கள்…

(7) எதிர்மறை எண்ணம்:- (negative thoughts)

எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும் அதை நீக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம்…!!!

உறவினை மதிப்போம்

உறவின் இழை

ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.

சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள்.

ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்…

மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம் தரும்படி கேள் என்றாள்.

மகன் அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான். அவனது மாமா அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார்.

அவனிடம் கூறினார்… என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று..

பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார்.

மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக்கொள் என்றார்.

எனவே, அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான்.

எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டான்.

விரைவிலேயே, அவன் ஒரு சிறந்த அறிவாளியாக என்று மாறினான்.

வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் ஒரு வல்லுநராக மாறினான்.

நெடுந்தொலைவில் இருந்தும் கூட, மக்கள், இவனிடம் வைரத்தைப் பரிசோதிப்பதற்காக வந்தார்கள்.

ஒரு நாள் அவனது மாமா கூறினார்… மருமகனே, அந்த நெக்லஸை உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா! அவளிடம் கூறு… அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.

அவன் அம்மாவிடம் இருந்து நெக்லஸை பெற்றவுடன், அந்த வாலிபன், அவனாகவே அதனைப் பரிசோதித்தான்.

அது ஒரு போலி என்பதைக் கண்டு பிடித்தான்.

அவனுடைய மாமா, ஒரு சிறந்த வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம் தெரிவிக்கவில்லை? என்று அவன் ஆச்சரியம் அடையத் தொடங்கினான்.

நெக்லஸை வீட்டில் விட்டு, விட்டு அவன் கடைக்குத் திரும்பினான்.

மாமா கேட்டார், நெக்லஸை கொண்டு வரவில்லையா?

அவன் கூறினான், மாமா இது போலியானது. ஆனால், இதை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்?

பிறகு அவன் மாமா கூறினார்… நீ முதன் முதலில் நெக்லஸை என்னிடம் கொண்டு வந்த போது, “அது போலியானது” என்று நான் உன்னிடம் கூறியிருந்தால், நான் வேண்டுமென்றே இதைக் கூறுவதாக நீ நினைத்துக் கொள்ளக் கூடும். ஏனென்றால், அப்போது நீ ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாய்.

இன்று நீ, நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லஸ், “உண்மையிலேயே போலியானது” என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.

அந்த நேரத்தில், “உண்மையைக்” கூறியாக வேண்டும் என்பதை விட… “உறவு இழையை அறுந்து விடாமல் காப்பது “மேலானது” மற்றும் “முக்கியமானதாக” எனக்கு தோன்றியது.

நண்பர்களே! “எந்த வித பட்டறிவும்” இல்லாமல், நாம் இந்த உலகில் “பார்ப்பது,” “நினைப்பது,” “தெரிந்து கொள்வது” எல்லாமே “தவறு” என்று கூறுகின்றோம்.

“தவறான புரிதல்களால்” நம்முடைய உறவு முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது.

பிறகு “முறிவுக்கு” இட்டுச் செல்கிறது.

நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று “வீழ்ச்சியும்” அடைகின்றது.

*நம் “உறவின் இழைகளை” அறுந்து விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்