அசைவம் சாப்பிடலாமா?

*அசைவம்சாப்பிடலாமா?
இறை நம்பிக்கை உள்ளவர்கள் ???
அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????

இந்த கேள்வியை
கேட்காத மனிதர்கள் இல்லை
இதற்கு பதில் தராத குருவும் இல்லை
ஆயினும் கேள்வி தொடர்கிறது

இதோ ஓஷோ அவர்களின் பதில்…
உணவுக்கும் இறைவனுக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை..

உணவுக்கும்
கடவுள் கோபிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை…

உணவுக்கு
கடவுள் தண்டிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை.

உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு

உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு

உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு

உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு…

உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு…

உணவுக்கும் மனித மனதிற்கும் சம்மந்தம் உண்டு..

மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..

  1. கர்மாவின் காரணமாக
    பிறவி எடுத்தவன் மனிதன்..
    அந்த அதைக் கரைக்கவே
    மனித பிறவி…*
  2. தாவர உயிரினங்களுக்கு
    கர்ம குறைவு
    மாமிச உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் அதிகம்…*
  3. எந்த உணவை மனிதன் உண்டாலும்
    அந்த உயிர்களின் பாவ கணக்கை அந்தமனிதனே அடைக்க வேண்டும்.*
  4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள்
    தாயின் மனம் மற்றும்
    அந்த குட்டியின் மனம்
    எவ்வாறு தேடி தவித்து இருக்கும்? அதன் தாயை கொன்று தின்னும்
    மனிதன் உணரவேண்டியது
    இதுதான்.அதிக பாசம் உள்ள
    ஆடு கோழி மீன் இவைகளை
    மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்.
    அந்த தோஷத்தை மனிதன்
    அடைந்தே தீருவான் அந்த
    கர்மாவையும் சேர்த்து கரைக்க
    ஒருவன் தைரியமாக முன்வந்தால்
    அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம் இதில்
    கடவுளுக்கு என்ன பிரச்சனை ???

ஒருவர் வங்கியில்
ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்
மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார்
இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை
கடன் வாங்கியவனே
கடனை கட்ட வேண்டும்.*

  1. சில நேரங்களில் விரதம் இருப்பது
    உடலுக்கு மட்டும் நல்லதல்ல
    பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம்
    அந்த விரத நாளில் மனிதனால்
    எந்த உயிரும் பாதிக்காததால்…*
  2. காட்டில் கூட ஆடு மாடு
    யானை குதிரை ஒட்டகம்
    இவைகளைமிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.
    புலி சிங்கம்போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று கூறுகின்றோம்.
    ஆக, சைவ உண்ணிகளுக்கு
    மிருகம் என்ற பெயர்
    காட்டில் கூட இல்லை..
  3. உடலால் மனித பிறவி சைவம்…
    உயிரால்மனித பிறவி சைவம்…
    குணத்தால்மனித பிறவி
    அசைவம் மற்றும் சைவம்.
    9.ஆடு, மாடு, மான், யானை
    போன்றவை உடலால் சைவம்
    உயிரால் சைவம் மனதாலும் சைவம்.

ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது.என்பதால்
அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.

ஓஷோ அவர்களின் விளக்கம். மேலும் இறைவன் மனிதனுக்காக உண்பதற்கு படைத்தான் என சொல்வது அபத்தம் ஏமாற்றி மதநூல்களில் மதவாதிகளால் சொருகப்பட்ட வரிகள்.

கர்மா பொல்லாதது..

கர்மா பொல்லாதது..
அதை வெல்ல யாராலும் முடியாது
இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன்!! ..

மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாக பயிற்சி பெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்

எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார்.

சசிகலாவும், வைகோவும் 30 வருடங்களாக முதல்வர் கனவில் இருந்தாங்க… ஆனால்… ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள்…

எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் மூவரும் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே…

ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்… அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்

ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்… ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் சுற்றித்திரிந்தார்…

ஜெயலலிதா சிறைக்கு போக வேண்டுமென கருணாநிதியும்…. கருணாநிதி பவர் இல்லாமல் நான்கு சுவருக்குள் மடங்கணும்னும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள்…

ஆனால், கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறைசென்றபோது அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை. ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.

மெத்தப் படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார்.. ஆனால், ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்… ஆனால், பூமி இன்று உலகத்தையே முடக்கி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது….

கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை…

உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்ற
தவறுவதும் இல்லை….

உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்துவிடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.

யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்.. .

கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில்
நன்மையை மட்டுமே விதைப்போம்.

நல்லவர்களாக வாழ்வோம்.
கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்…..

பாவமன்னிப்பு என்ற மதச்சடங்கு, இந்து மதத்தில் இல்லாதது ஏன் தெரியுமா?

பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.

உணர்ந்தவன் பாக்கியசாலி…. கட்டுப்பட்டவன், புத்திசாலி.. நீங்கள் பாக்கியசாலியா… புத்திசாலியா?.. உங்களுக்கான மதிப்பெண்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்…..

வாழ்வில் மறப்போம் மன்னிப்போம் என்று வாழ பழகுவோம்.

🙏 இறைவனின் ஆசீர்வாதத்தையும் விட பெரியது தர்மத்தின் வாழ்த்து. அது நம் வம்ச வழியையும் நல் வழி அழைத்துச் செல்லும் இன்று இருப்போர் நாளை இல்லை வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்.அன்பே சிவம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

ஏதோ நல்லதாக மனதிற்கு பட்டதால்
பதிவு செய்கிறேன் சொந்தங்களே …. 🙏🙏🙏🙏

மவுனம்

“மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் “மவுனம்” (Silence)”

“ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும்.

அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள். ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம்.

மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்டக் கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம்.

இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்? நாம் கொடுக்கிறோம். நமக்கு இறைவன் கொடுத்த மௌனம் ஒன்று இருக்கிறது. அதுதான் ராத்திரியில் தூக்கம். அங்கே மறந்து விடுகிறோம். அதனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.

எனக்கு வேலையில்லை. அதனால் ஒரு மாதம் மௌனத்தில் உட்கார்ந்தேன்.

முடிந்தவர்கள் ஒருநாள் இரண்டு நாள் உட்கார்ந்தார்கள். சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது. அதற்காக வருந்தவே வேண்டியதில்லை.

யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள். அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா? இதற்கு நேரம் தேவையில்லை. இந்த மவுனத்தை எல்லோரும்பண்ண வேண்டும்.

ஒரு நாளைக்கு மௌனம் என்று சொல்லிவிட்டு வீட்டிலேயே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பத்துப்பேர் இருக்கிற வீட்டில் நீங்கள் மௌனமாக இருந்தீர்களானால் அவர்களுக்கு அது பொருந்தாது. ஒருத்தர் உட்கார்ந்து மௌனமாக இருக்கிறார்களே இருக்கட்டும் என்று அவர்களால் இருக்கவும் முடியாது.

எப்படியாவது தொந்திரவு (disturbance) வரும். அப்போது ஒருவர் வந்து “ஐயா இருக்கிறார்களா?” என்று கேட்பார். “அதோ உட்கார்ந்து கொண்டு இருக்கு பாருங்கள்” என்பார்கள் !. ஏன் என்றால் அவர்களுக்கு சுயகவனம் (attention) வேண்டும். அங்கே சுயகவனம் (attention) இல்லை.

ஆகையால் அனேகருக்கு வீட்டில் மௌனம் இருக்க முடியாது என்று எல்லோரும் சேர்ந்து “அறிவுத் திருக்கோயில்” என்று ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள்.

சந்தர்ப்பம் வரும்போது ஒருநாளைக்கு இங்கு வந்து மௌனம் இருக்கலாம். இந்தக் காலத்தில்தான் இருக்கலாம் என்று இல்லை. இருப்பதற்கு இங்கு இடம் இருக்கிறது. என்றைக்கு வந்தாலும் மவுனம் இருக்கலாம்.

நீங்கள் இரண்டு மூன்று நாள் மௌனம் இருக்கும் வரைக்கும் மேலாக இருக்கிற அலையெல்லாம் வந்து கொண்டிருக்கும். போகப் போக ஆழமாகவுள்ள பதிவுகளெல்லாம் வரும்.

அதற்கும் மேலே போனால் இயற்கை உண்மைகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.

ஏனென்றால் நீங்கள் பேசாதிருக்கும் போது இறைவன் பேசுகிறான்.

இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை. எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை.

அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் அதற்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக மௌனம் இருக்க வேண்டும்.

மௌனத்தை உணர்ந்து, அதன் பெருமையை, நன்மையை உணர்ந்து செய்யுங்கள். பிறர் கருத்தை ஒத்துக் கொள்ள முடியாதபோது அவர்களிடம் எரிந்து விழாமல் அந்த இடத்தில் மௌனமாக இருப்பது நல்லது.

எல்லோரும் தூங்கும்போது மௌனமாகத்தான் இருக்கிறார்கள். தூங்கும்போது மௌனமாக இருந்தால் அமைதி வந்துவிடுகிறதே தவிர அந்த அமைதியினால் அறிவு விருத்தி ஆவது இல்லை. எனவே இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் மவுனத்தில் அதன் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.

எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல மவுனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய ஜீவகாந்த சக்தி (Bio-Magnetic force) அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும்.

அந்த மைய ஈர்ப்பு அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும். எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.

இத்தகைய பெருமையெல்லாம் தரக்கூடியது மௌன நோன்பு. இரண்டு நாள், மூன்றுநாள் என்று புள்ளி விபரம் (statistics) கொடுக்காமல் மவுனத்தில் சாதித்தது என்ன? என்று பாருங்கள். வீட்டிற்குச் செல்லும்போது மௌனத்தின் பயனை அனுபவிக்க வேண்டும்.

அப்படியில்லாமல் “நீங்க எங்கே போய்விட்டு வந்தீர்கள் எட்டு நாளா?.. என்றால், ‘நான் மௌனத்திற்காக அறிவுத் திருக்கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன்”… “ஆமா, அறிவுத் திருக்கோயிலில் என்ன பண்ணினீர்கள்?”.. “ஆ, அதையெல்லாம் உனக்கு சொல்லிக் கொண்டு இருக்க முடியாது”. உனக்குத்தான் ஒன்றும் புரியாது” என்று கூறி உடனே ஒரு சண்டை,

இது என்ன மவுனம்?

அமைதியாக இருந்து இன்னும் இரண்டு தடவை யார் கேட்டாலும் சரி. அதற்கு நல்ல பதிலைச் சொல்லி, முடிந்தவரைக்கும் சொல்ல வேண்டும்.

முடியாதபோது நான் இன்னும் விளக்குகிறேன். மீண்டும் விளக்குகிறேன். என்று சொல்லலாம் அல்லவா?,

மௌனத்தின் பயனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். மௌனத்திலே ஒரு பெரிய ஆத்ம சக்தி உருவாவதை உணர வேண்டும்.

மனிதனுடைய கருமையத்தை தூய்மையான எண்ணங்களால் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஆயிரமாயிரம் பங்கு விளைவுகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் “மவுனம்”

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

கவலை, ஸ்ட்ரெஸ் & மனஅழுத்தம் ஆகியவற்றை சரி செய்தல்!

கவலை, ஸ்ட்ரெஸ் & மனஅழுத்தம் ஆகியவற்றை சரி செய்தல்!

5000 ஆண்டுகள் பழைமையான இந்த ஞானம், கூறுவது என்னவென்றால் மனநோய்கள் ஏற்படுவதன் காரணம் மனரீதியான காரணிகளான சத்வா, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவை நிலையின்றி இருப்பதால் தான். இவை மூன்று ஒரு நேர்க்கோட்டில் ஒன்றிணைந்தால் அவை குணா எனப்படும். எனினும், ரஜஸ் (ஸெயல்) மற்றும் தமஸ் (இருட்டு) ஆகிய இரண்டும் ஒரு நிலையில் இல்லாமல் போனால் அவை தோஷங்கள் எனப்படுவதாகும்.

இப்போது, நமது உடலின் மூன்று தோஷங்கள் (கபம், பித்தம் மற்றும் வாதம்) மற்றும் மனதின் தோஷங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. எனவே ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவை நிலையற்று இருந்தால் அது மூன்று தோஷங்களையும் நிலை தடுமாற செய்து உடல் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அதனால் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றை நிலை தடுமாற செய்து ஒரு முடிவற்ற தீய வட்டத்தை ஏறப்டுத்துகிறது.

எனவே, மனநோய்களை சரி செய்ய, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய இரண்டையும் கட்டுக்குள் கொண்டு வந்தபடியே ஒருவர் இந்த தோஷங்களை சமன் செய்ய வேண்டும். ஆயுர்வேத ஏடுகளில் இருந்து கீழ்கண்ட குறிப்புகள் நேரடியாக எடுக்கப்பட்டுள்ளன.

  1. உங்களது உணவு பழக்கத்தை முன்னேற்ற வேண்டும்

ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும் என்பதை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஏனெனில் உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொண்டால், உங்களது செரிமானப்பாதையில் அமா எனப்படும் மூலப்பொருள் உருவாகி ஆரோக்கியத்தை பாதிக்கும். அமாவை சரி செய்ய அதன் தன்மையை பொருத்து லங்கணம், லங்கண பஞ்சனா மற்றும் சம்ஷோதனா ஆகியவை உதவும். உங்களது உணவுப்பழக்கத்தை கீழ்கண்ட முறையில் சரி செய்யலாம்:

பசியெடுக்கும் முன் சாப்பிடுவதோ அல்லது அதிகமாக உண்பதோ கூடாது.

புதிதாக சமைத்த உணவுகளையே உண்ண வேண்டும்.

காலையில் பாதியாக சுண்ட காய்ச்சிய நீரை அருந்த வேண்டும்.

ஆயுர்வேத மருத்துவரை கலந்தாலோசித்து தோஷங்களை சமம் செய்யும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

  1. உங்களது உடல்வாகுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்ய வேண்டும்

முன்பு குறிப்பிடப்பட்ட 3 தோஷங்களின் கலவைக்குட்பட்ட 7 விதமான உடலமைப்புகள் அல்லது பிரக்ரித்திக்கள் உள்ளன. ஒருவரின் உடல் வலுவை பொருத்து அவர் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆயுர்வேதம் கூறுகிறது. எனவே வாத உடம்புக்காரர்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது, அதற்கு பதில் நடை பயிற்சி மற்றும் ஜாகிங் செய்யலாம். பித்த உடலமைப்பு கொண்டவர்கள் மிதமான உடற்பயிற்சிகளிலும் கப உடம்புக்காரர்கள் ஏரோபிக்ஸ் மற்றும் கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

  1. மூலிகைகளை உட்கொள்ள வேண்டும்

மூலிகைகள் மற்றும் ஸ்பைஸ்களின் கலவையை ஆயுர்வேதம் தனது மருந்துகளாக பயன்படுத்தி பல்வேறு வியாதிகளை குணப்படுத்துகிறது என்பதை அனைவரும் அறிவோம். அது போலவே பல வகையான ,மனவியாதிகளையும் இதை கொண்டு குணப்படுத்த முடியும். கவலை, ஸ்ட்ரெஸ் மற்றும் மன அழுத்தம் தீர பயன்படுத்தப்படும் மூலிகைகள் பின்வருமாறு:

அஷ்வகந்தா – மனதுக்கு புத்துணர்ச்சி தரும் இந்த மூலிகை உறக்க சுழற்சியை சீர் செய்கிறது, ஸ்ட் ரெஸை குறைத்து மனநிலையை முன்னேற்றுகிறது.

வாச்சா – பிராம்மி, த்ரிபலா, லிகோரைஸ் மற்றும் ஷங்க்புஷ்பி ஆகியவற்றுடன் இணைந்து பயன்படுத்தப்படும் இம்மூலிகை சில குறிப்பிட்ட மன ரீதியான குறைபாடுகளை நீக்குகிறது.

பிராம்மி – நரம்பு மண்டலத்துக்கு புத்துணர்வூட்டி புத்தி கூர்மையை அதிகரிக்கிறது.

ஷங்க்புஷ்பி – மன நிம்மதியும் நிம்மதியான உறக்கமும் தருகிறது.

  1. உடலை தூய்மைப்படுத்த – பஞ்சகர்மா மற்றும் சில நடைமுறைகள்

உடலை தூய்மையாக்க ஐந்து ஆயுவேத முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒன்றாக பஞ்சகர்மா என அழைக்கப்படுகிறது. அவை

வாமனா – மருந்து மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல்.

விரேச்சனா – மருந்து மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தூய்மைப்படுத்தல்.

பாஸ்டி- மூலிகை எனிமா.

நஸ்யா – மூக்கு வழியே தைலங்களை செலுத்துதல்.

ரக்தமோக்க்ஷணா – கட்டுப்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம்.

பஞ்சகர்மா தவிர, வேறு சில ஆயுர்வேத சிகிச்சை முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.அவை:

ஷிரோதாரா அல்லது பரிஷேகா – திரவங்கள், பொதுவாக தைலங்கள் தலையில் ஊற்றப்படும்.

அபியங்கா – வாமனா மற்றும் விரேச்சனா போன்ற பஞ்சகர்மா நடைமுறைகளுக்கு முன்னர் ஆயில் மசாஜ் செய்யப்படும்.

5.சரியான பழக்க வழக்கங்களை பின்பற்றவும்.

நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றுவதால் உடல் மற்றும் மனம் இரண்டின் ஆரோக்கியத்தையும் பேணலாம். உதாரணமாக:

பிரம்ம-முகூர்த்த வேளையில் விழித்தெழ வேண்டும். அதாவது சூர்ய உதயத்துக்கு 45 நிமிடங்கள் முன்பு
பசி மற்றும் அக்னியை பொருத்து தேவையான உணவினை மூன்று வேளை உண்ண வேண்டும்
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒய்வாக பொழுதை கழிக்க வேண்டும்.

🍃Sri Yoga & Naturopathy🍃

யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415

தற்சோதனை எப்படி செய்ய வேண்டும்.

தற்சோதனை எப்படி செய்ய வேண்டும்.

மகரிஷி

எண்ணம், சொல், செயல் என்ற மூன்று பிரிவுக்குள் மனிதன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் அடங்கும்.

புலன் கவர்ச்சியில் சிக்கி நிற்கும்போது விளளவறியாமல் எண்ணுதலும், பேசுதலும், செயல் புரிதலும் இயல்பு.

இவை பழக்கத்தால் திரும்பத் திரும்ப எழுச்சி பெற்று இயங்கும்.

காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப தவறான எண்ணம், பேச்சு, செயல் இவற்றால் பல தீமைகள் எழுகின்றன, துன்பங்கள் விளைகின்றன.

தன்னிடமிருந்து அவ்வப்போது எழும் எண்ணம், சொல், செயல் இவற்றை ஆராய்ந்து தவறானவற்றை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.

பிறகு தவறுகளைத் திருத்தி நலம் தரும் முறையில் எண்ணம், சொல், செயல்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

இதற்கான உளப்பயிற்சியே தற்சோதனையாகும்.
➖➖➖➖➖➖➖➖
எண்ணம் ஆராய்தல்
➖➖➖➖➖➖➖➖
முதலில் எண்ணங்களைத் திருத்தி அமைக்க ஒருவாரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

காலை, மாலை அமைதியான ஒரு இடத்திலமர்ந்து உங்களிலிருந்து எழும் எண்ணங்களின் தன்மைகளை ஆராயுங்கள்.

தவறானவற்றை — துன்பம் விளைக்கும் எண்ணங்களைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

“இந்த எண்ணம் எனக்கு இந்த வகையில் துன்பம் அளிக்கும். ஆகவே இது தவறு.

இதற்கு நான் இடங் கொடுக்க மாட்டேன்”

என்று பல தடவை அந்த எண்ணத்தோடு இணைப்பு எண்ணத்தைச் சேர்த்து விடுங்கள்.

➖➖➖➖➖➖➖➖➖
சொல் ஆராய்தல்
➖➖➖➖➖➖➖➖➖
இதுபோன்றே அடுத்த வாரம் சொற்களைப் பற்றி ஆராயுங்கள்.

உங்களின் எந்தச் சொற்களால் உங்களுக்கோ பிறர்க்கோ வருத்தம் உண்டாகுமோ அவற்றைக் குறித்துக் கொண்டு மீண்டும் அத்தகைய சொற்களைப் பயன்படுத்தாதிருக்க மன உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிறரோடு பேசும்போது அத்தகைய சொற்கள் எழாமல் விழிப்போடு காத்துப் பழகுங்கள்.
➖➖➖➖➖➖➖➖
செயல் ஆராய்தல்
➖➖➖➖➖➖➖➖
மூன்றாவது வாரம் செயல்களைப் பற்றி ஆராயுங்கள்.

தவறான செயல்களைக் குறித்துக் கொண்டு அச்செயலை மீண்டும் அந்த முறையில் செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள்.

நாள் தோறும் அத்தகைய செயல்களுக்குத் தொடர்பான நபரோ, தேவையோ, சூழ்நிலையோ வரும் போது மிகவும் விழிப்பாக இருங்கள்.

தவறு புரியாதபடி உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

✅இவ்வாறு உங்களை நீங்களே தற்சோதனை என்ற புடத்திலிட்டு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் அழுக்குகளை நீக்கிக்கொள்ளுங்கள்.

✅இந்த மூன்று வாரத்திய தற்சோதனைப் பயிற்சி உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு விழிப்போடு இருக்கும் பழக்கத்தை அளிக்கும்.

வாழ்வைத் தூய்மை ஆக்கும்.

வெற்றியளிக்கும்.

மகிழ்ச்சியும் அமைதியும் ஓங்கும்.

வாழ்க வளமுடன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மழையை அளப்பது எப்படி.?


மழையை அளப்பது எப்படி.?

மழை பெய்யும் போதெல்லாம் நாம் செய்திகளில் 10மில்லி மீட்டர் பெய்தது, 15 மிமீ பெய்தது என்று படிக்கிறோம். அப்படி என்றால் எவ்வளவு மழை பெய்திருக்கும் என்று தெரியுமா.?

உண்மையில் ஒரு மில்லி மீட்டர் மழை என்பது எவ்வளவு.?

ஒரு மில்லி மீட்டர் மழை பெய்தது என்றால்… ஒரு சதுர மீட்டருக்கு ஒரு லிட்டர் என்று பொருள். அதாவது ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் சதுரப் பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் நிரம்பியிருக்கிறது என்று அர்த்தம்.

இதுவே உங்கள் வீட்டு மொட்டைமாடி ஆயிரம் சதுர மீட்டர் போன்ற தொட்டி போல் இருக்கிறது என்றால் அந்த மொட்டை மாடியில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேர்ந்திருக்கும். அதுவே பத்து மில்லி மீட்டர் மழை பெய்திருந்தால் பத்தாயிரம் லிட்டர். தோராயமாக அந்தத் தண்ணீரை வைத்து ஒரு தண்ணீர் லாரியை நிரப்பிவிடலாம்.
இந்த ஒரு மில்லிமீட்டர் உங்கள் மொட்டை மாடி தாண்டி உங்கள் காலனி மொத்தமும் பெய்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது உங்கள் காலனி ஒரு லட்சம் சதுர மீட்டர் என்றால் அங்கே ஒரு லட்சம் லிட்டர் சேர்ந்திருக்கும், உங்கள் ஊர் பத்து லட்சம் சதுர மீட்டர் என்றால் உங்கள் ஊர் மொத்தமும் சேர்ந்து பத்து லட்சம் லிட்டர் கிடைத்திருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.
இது ஒரு மில்லி மீட்டருக்கு. இதுவே பத்து மில்லி மீட்டர் என்றால் பத்து மடங்கு அதிகரிக்கும்.
இதுவும் ஒரு இடத்தில் ஒரு சமயத்தின் அளவை வைத்து மழை அளவைச் சொல்வார்களா என்றால்…. மாட்டார்கள்..

சுமார் 20 முதல் 30 கிமீ இடையிலான மொத்தப் பரப்பில் பெய்த மழையின் அளவுகளை பல்வேறு இடங்களில் மழைமானியைக் கொண்டு 24 மணிநேரம் மணிக்கு ஒருமுறை எடுத்து, அவற்றின் மொத்தத்தின் சராசரி தான்.. உங்களுக்கு இத்தனை மில்லிமீட்டர் பெய்தது என்று மழையின் அளவாகச் சொல்லப் படுகிறது.
இந்த மழை அளக்கும் மழை மானிக்கும் அளவு வரையறைகள் உண்டு.

சாதாரணமாக ஒரு ஒன்றரை அடி உயரம், 200 மிமீ விட்டத்தில் உள்ள ஒரு குடுவையின் வாய்ப்பகுதியில் ஒரு புனல் வைத்து அது சேகரிக்கும் அளவே மழையின் அளவாகக் கொள்கிறார்கள்.
அப்படியென்றால் விடாமல் மழை பெய்யும் போது மழைமானி நிரம்பினால் எப்படி எவ்வளவு மழை பெய்தது என்று தெரியும்.?
அதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

நாம் மேலே சொன்னது சாதாரண மழை மானி. இதன் கீழேயே ஒரு ஐந்து லிட்டர் கேனை இணைத்து மழை மானி நிரம்பியதும் கீழே சேகரித்துக் கொண்டு இது காலியாகி அடுத்த அளவீடைத் துவங்கும் வகையில் செய்திருப்பார்கள்.
இதுபோக மழையின் அளவை மணிக்கொரு முறை கிராஃப் ஷீட்டில் வரையும் தானியங்கி மழைமானி, செயற்கோளுக்குத் தகவல் சொல்லும் மழை மானிகளும் உண்டு.

மழையை முதன்முதலில் அளந்ததவர் யார் என்று பார்த்தால்… கி.மு. 340 ல், மழை, மேகம், பனி, குளிர் என அனைத்தையும் பற்றித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அரிஸ்டாட்டில், மழையை அளப்பது பற்றி எதுவும் கூறவில்லை.
மண்ணைத் தோண்டி மழை ஈரத்தின் ஆழத்தை வைத்து உழவு செய்த தனது நாட்டு மக்களுக்காக, முதன்முதலாக மழை மானியை உருவாக்கியவர் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கொரிய மன்னர் “செஜான்” (Sejong) என்பவர்தானாம்.
அதுவும் அதைக் கொண்டு, எந்த ஊரில் எவ்வளவு மழை பெய்தது என்பதை வைத்து யாருக்கு எவ்வளவு வரி தீட்டலாம் என்று திட்டமிடுவதற்காகத்தான் உண்மையில் இந்த முறையைக் கொண்டு வந்தாராம்..

ஆனால், தற்போது உலகெங்கும் பயன்படுத்தப்படும் மழை அளமானியை 1662ல் கண்டுபிடித்தவர், ஐரோப்பாவைச் சேர்ந்த “கிறிஸ்டோபர் ரென்” என்பவர்..

இருபத்து நான்கு மணி நேரத்தில், 7.4மில்லி மீட்டர் வரை பெய்தால் அது சாதாரண மழை என்கிறார்கள்.
அதுவே 34.9.மி.மீ வரை பெய்திருந்தால் அது சுமாரான மழை.
56.5 மி .மீ வரை சற்றே கனத்த மழை என்றும் அதற்கும் மேல் 120 மி.மீ வரை பெய்தால் கனத்த மழை என்கிறார்களாம்.
இதற்கு மேல் எவ்வளவு பெய்தாலும் அது மிகக் கனத்த மழைதானாம்.

இதுபோக வெள்ளம் தனி.

இதெல்லாம் இப்படி இருக்க…
கோவைப் பகுதியில், சிறுவிவசாயிகள் மழையை
ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என்று மழையளவைக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன்.

அது என்ன ஒரு உழவு மழை என்றால் பெய்த மழையில் பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அதுதான் ஒரு உழவு மழை.

அப்படி என்றால் மண்ணின் தன்மையைப் பொறுத்து இந்த உழவு மழையின் அளவு மாறும் அல்லவா.? அப்போது உழவு மழை என்பதற்கான உண்மையான அளவுதான் என்ன.?

சரி….நமக்குப் புரிகிற மாதிரி சொன்னால்… ஒரு உழவு மழை என்பது சதுர அடிக்கு நாலரை லிட்டர் தண்ணீர் என்பதுதான் என்று சொல்கிறார்கள். உத்தேசமாக ஒரு சதுரமீட்டருக்கு ஐம்பது லிட்டர் என்பது ஒரு உழவு மழை எனக் கொள்ளலாம்.
தோராயமாக நம்மிடம் 25 ஏக்கர் நிலமிருந்தால், அதற்கு இரண்டே முக்கால் ஏக்கர் அகலத்தில் ஏழு அடி ஆழத்துக்கு ஒரு குட்டையை வெட்டினால், அதில் தேங்கும் நீர் 10 மாதங்களுக்குப் பயன்படும் என்பது நம் விவசாயிகளின் உழவு மழைக் கணக்கு.

நன்றிஎன்பது என்ன?

🟣ந🟣ன்🟣றி.

நன்றிஎன்பது என்ன?

1.அன்புதான்…

2.பாராட்டுதான்..

3.இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதுதான்.

நன்றி ஏன் சொல்ல_வேண்டும்?

  1. பெற்றுள்ளதை உணர்வதற்காக.
  2. இன்னும் தேவையானதை, பெறுவதற்காக.
  3. இருக்கும் நல்லதை தக்க வைப்பதற்காக.

நன்றியைஎப்படி எல்லாம் #வெளிப்படுத்தலாம்?

  1. மனப்பூர்வமாக/உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.
  2. நல்ல வார்த்தைகளாலும், நல்ல செயல்களாலும் வெளிப்படுத்தலாம்.
  3. நன்றி உணர்வையும் உங்களையும் பிரிக்க முடியாதபடி, நீங்கள் பெறப்போகும் ஒன்றிற்கு, பெற்றுவிட்ட உணர்வோடு… வெளிப்படுத்தலாம்.

நன்றியைஎதற்குஎதற்கெல்லாம் #சொல்லலாம்?

  1. பிறந்ததிலிருந்து இதுநாள்வரை வளமோடு வைத்திருக்க உதவும் இயற்கைக்கும், மனிதர்களுக்கும்.
  2. நம் உயிரை வைத்திருக்கும் ஆரோக்கியமான உடலுக்கும், உடலிலுள்ள உறுப்புகளுக்கும்.
  3. இதுநாள் வரை பெற்ற ஆசீர்வாதங்களுக்கும், இனி… பிரபஞ்சப் பேராற்றல் தரப்போகும் நன்மைகளுக்கும்.

நன்றியுணர்வோடு_ இருப்பதால்

என்ன பலன்கள் கிடைக்கும்?

  1. முதலில் அமைதியும், திருப்தியும் கிடைக்கும்.
  2. நீங்கள் தேவையானதாக நினைப்பதைவிட, உங்களுக்குத் தேவையானது எதுவோ அதுவெல்லாம் கிடைக்கும்.
  3. வாழ்வின் வளங்கள் அனைத்தும் பெற்றதான மனம் உணர்கின்ற வாய்ப்பு கிடைக்கும்.

நன்றியுணர்விற்கான,.. அவசியம்
(நேரம் இருந்தால்) காணவேண்டிய காணொளி👇👇