உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும் பட்டினத்தார் சொன்னது.

⚜️⚜️⚜️⚜️🔱🔱🔱⚜️⚜️🙏🏼
பட்டினத்தார் சொன்னது
உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது?
உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?

மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?

இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டதா?

பெருத்தன சிறுக்கும்!!
சிறுத்தன பெருக்கும்!!
என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?

“இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே” என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.

இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன்!!

நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருந்தது!!

இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி விட வேண்டும்!!

அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்!!

அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன்.
காலம் கடந்த ஞானம்.!!

பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்!!

இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?

பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?

சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?

கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,
காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்,
பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள்!!

பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு,
மண் என்னைப்பார்த்து, “மகனே!!! நானிருக்கிறேன்….
என் மடியில் வந்து உறங்கு” என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது….

அருந்தின மலமாம்
பொருந்தின அழுக்காம்
வெறுப்பன உவப்பாம்
உவப்பன வெறுப்பாம்
உலக பொய் வாழ்க்கை நீ நீயாக இரு…

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது….

அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்….

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது….

எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை…

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன…

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்….

நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்…..

முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்…..

நான்… நான்… நான்…
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான்தான்உதவிசெய்தேன்,
நான் பெரியவன்,
நான் தான் வேலைவாங்கி கொடுத்தேன்,

நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!

நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

“நான்” தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே “நான்” என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.

உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்..!
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்…!

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.🙏🏼🙏🏼
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️🔱🔱🔱

கல்வி தொலைக்காட்சி கால அட்டவணை பத்தாம் வகுப்பு

கல்வி தொலைக்காட்சி கால அட்டவணை பத்தாம் வகுப்பு

காலை
8.00 – 8.30 – தமிழ்
8.30 – 9.00 – English
10.00-10.30-கணிதம்
10.30-11.00-அறிவியல்
12.00-12.30pm-சமூக அறிவியல்.

சனிக்கிழமை மேற்கண்ட பாடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அதே நேரத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.(பத்தாம் வகுப்பிற்கு மட்டும்)


ஒன்பதாம் வகுப்பு

காலை
9.00-9.30-தமிழ்
9.30-10.00-English
11.00-11.30-கணிதம்
11.30-12.00-அறிவியல்
12.30-1.00 pm-சமூக அறிவியல்.


எட்டாம் வகுப்பு

காலை
1.30-2.00 pm-தமிழ்
2.00-2.30 pm-English
3.00-3.30 pm-கணிதம்
3.30-4.00 pm-அறிவியல்
4.30-5.00 pm-சமூக அறிவியல்.


ஏழாம் வகுப்பு
ஒளிபரப்பு நேரம்

2.30 – 3.00 pm
(monday to friday)

திங்கள் – தமிழ்.
செவ்வாய் – English.
புதன் – கணிதம்.
வியாழன் – அறிவியல்.
வெள்ளி – சமூக அறிவியல்.


ஆறாம் வகுப்பு
ஒளிபரப்பு நேரம்

4.00 – 4.30 pm
(monday to friday)

திங்கள் – தமிழ்.
செவ்வாய் – English.
புதன் – கணிதம்.
வியாழன் – அறிவியல்.
வெள்ளி – சமூக அறிவியல்.


சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள்!!

ஸ்வேதா என்பவர் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.

ஆகாஷ் என்பவர் அதே தூரத்தை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.

இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் ஸ்வேதா என்றுதான் வரும்.

எனினும் இப்பொழுது ஸ்வேதா என்பவர் நன்கு பண்படுத்தப்பட்ட சாலையில் அந்த தூரத்தைக் கடந்தார் என்றும்

ஆகாஷ் என்பவர் கரடுமுரடான பாதையில் அதைக் கடந்தார் என்றும்

நான் சொன்னால் இப்பொழுது உங்களுடைய பதில் மாறும் அல்லவா?

ஆம் நிச்சயமாக இப்பொழுது ஆகாஷ் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்!

மறுபடி இப்பொழுது ஸ்வேதாவுக்கு 50 வயது என்றும் ஆகாஷுக்கு 25 வயது என்றும் கூடுதல் தகவலை நான் கொடுக்கும் பொழுது……..

உங்களுடைய பதில் மறுபடி மாறும் அல்லவா?

ஆமாம் இப்போது ஸ்வேதா தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.

மேலும் ஆகாஷ் என்பவருடைய எடை 140 கிலோ என்றும் ஸ்வேதாவின் எடை 65 கிலோ தான் என்று நான் சொல்லும்போது மீண்டும் இந்த பதில் மாறும்.

இப்பொழுது ஆகாஷ் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்!

இதேபோல ஆகாஷ் பற்றியும் ஸ்வேதா பற்றியும் நம்முடைய இந்த முடிவானது அவர்களைப் பற்றிய அதிகத் தகவல்கள், கூடுதல் தரவுகள் கிடைக்கக் கிடைக்க மாறிக்கொண்டே இருக்கும்.

இதுதான் வாழ்க்கையிலும். நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக வேகமாக நம்முடைய அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம்.

அவர்களோடும், அவர்களின் செயல்பாடுகளோடும் நம்மை ஒப்பிடத் தொடங்குகின்றோம்.

இதனால் நாம் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கின்றோம்.

வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாகும்.

ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வேறுபட்டதாகும்.

ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் அறிவும் பொருளும் வேறாக இருக்கலாம்.

ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறாக இருக்கலாம்.

அதற்கான தீர்வுகள் கூட வேறாக இருக்கலாம்!

எனவே வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும்.

அதைத் தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் தான் உயர்ந்தவர்கள்!
நீங்கள் தான் சிறந்தவர்கள்!!

உங்களுடைய முழு சக்தியையும் ஆற்றலையும் பிரயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுடைய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள்!!
💐💐🙏

பார்க்கும் கோணம்

💐💐💐💐
ஸ்வேதா என்பவர் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.

ஆகாஷ் என்பவர் அதே தூரத்தை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.

இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் ஸ்வேதா என்றுதான் வரும்.

எனினும் இப்பொழுது ஸ்வேதா என்பவர் நன்கு பண்படுத்தப்பட்ட சாலையில் அந்த தூரத்தைக் கடந்தார் என்றும்

ஆகாஷ் என்பவர் கரடுமுரடான பாதையில் அதைக் கடந்தார் என்றும்

நான் சொன்னால் இப்பொழுது உங்களுடைய பதில் மாறும் அல்லவா?

ஆம் நிச்சயமாக இப்பொழுது ஆகாஷ் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்!

மறுபடி இப்பொழுது ஸ்வேதாவுக்கு 50 வயது என்றும் ஆகாஷுக்கு 25 வயது என்றும் கூடுதல் தகவலை நான் கொடுக்கும் பொழுது……..

உங்களுடைய பதில் மறுபடி மாறும் அல்லவா?

ஆமாம் இப்போது ஸ்வேதா தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.

மேலும் ஆகாஷ் என்பவருடைய எடை 140 கிலோ என்றும் ஸ்வேதாவின் எடை 65 கிலோ தான் என்று நான் சொல்லும்போது மீண்டும் இந்த பதில் மாறும்.

இப்பொழுது ஆகாஷ் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்!

இதேபோல ஆகாஷ் பற்றியும் ஸ்வேதா பற்றியும் நம்முடைய இந்த முடிவானது அவர்களைப் பற்றிய அதிகத் தகவல்கள், கூடுதல் தரவுகள் கிடைக்கக் கிடைக்க மாறிக்கொண்டே இருக்கும்.

இதுதான் வாழ்க்கையிலும். நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக வேகமாக நம்முடைய அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம்.

அவர்களோடும், அவர்களின் செயல்பாடுகளோடும் நம்மை ஒப்பிடத் தொடங்குகின்றோம்.

இதனால் நாம் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கின்றோம்.

வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாகும்.

ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வேறுபட்டதாகும்.

ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் அறிவும் பொருளும் வேறாக இருக்கலாம்.

ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறாக இருக்கலாம்.

அதற்கான தீர்வுகள் கூட வேறாக இருக்கலாம்!

எனவே வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும்.

அதைத் தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் தான் உயர்ந்தவர்கள்!
நீங்கள் தான் சிறந்தவர்கள்!!

உங்களுடைய முழு சக்தியையும் ஆற்றலையும் பிரயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுடைய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள்!!

எப்போதும்
ஆரோக்கியமாக இருங்கள்! அமைதியாக இருங்கள்!
திருப்தி அடைந்தவராக இருங்கள்!!!
புன்னகையைப் படர விடுங்கள்!
மனம்விட்டு சிரிக்கப் பழகுங்கள்!! சமுதாயத்திற்கும்,
இந்த தேசத்திற்கும் ஏதாவது சேவை புரிந்து கொண்டே இருங்கள்!!!

😍😍😍

மனிதம் பற்றிய உளவியல் தகவல்

மனிதம் பற்றிய உளவியல் தகவல்

  1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.
  2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.
  3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ ‘மிஸ்’ பண்றீங்களாம்.
  4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.
  5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.
  6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்.
  7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.
  8. மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.
  9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் – ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.
  10. இது கொஞ்சம் சங்கடமான விஷயம் – யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.
  11. ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று
    உளவியல் கூறுகிறது.
  12. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம்.
  13. ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.
  14. ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விடயங்களும் காத்திருக்கும்.
  15. ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
  16. ஒருவர் அடிக்கடி Mobile phone யை பார்த்துக் கொண்டிருப்பது or *Mobile சத்தம் *(Notification tones)* கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார். என்று அர்த்தம்.
  17. ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.
  18. ஒருவர் அதிகமாக Negative Thoughts ( முடியாது/கிடைக்காது/இயலாது) கதைப்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts கதைப்பவராக இருப்பார்.👆👆👆

ஆணும் பெண்ணும் சமம் தானா.?

🙆‍♂️🙆‍♀️ ஆணும் பெண்ணும் சமம் தானா.?

🙆‍♂️🙆‍♀️ ஒரு உளவியல் பார்வை.

🙆‍♂️🙆‍♀️ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை கணவன், மனைவி இருவரும் அறிந்து கொள்வது அவசியாமாகும்.!

🙆‍♂️🙆‍♀️ திருமண வாழ்க்கையில் ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு.

🙆‍♂️🙆‍♀️ குரோமசோம்களில் உள்ள வேறுபாடுகள்.

🙆‍♂️🙆‍♀️ பரம்பரையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செழுத்தும் குரோமசோம்களில் ஆணின் குரோமசோம்களில் XY என்ற அமைப்பிலும் பெண்ணுடைய குரோமசோம்களில் XX என்ற அமைப்பிலும் காணப்படுகின்றது.

🙆‍♂️🙆‍♀️ இவைதான் ஒரு பிள்ளை ஆணாகப் பிறக்குமா? அல்லது பெண்ணாகப் பிறக்குமா? என்பதனைத் தீர்மானிக்கின்றது!

🙆‍♂️🙆‍♀️ இதுவே அடிப்படை வித்தியாசம்.

🙆‍♂️🙆‍♀️ எனவே எப்படி ஆணும் பெண்ணும் சமமாக முடியும்?

🙆‍♂️🙆‍♀️ பார்வைப் புலன்.

🙆‍♂️🙆‍♀️ பெண்களைப் பொருத்தவரை அவர்களால் 180 டிகிரி கோணத்தில் தமக்கு அருகாமையில் உள்ளவற்றை நன்கு தெளிவாகப் பார்க்க முடியும்.!

🙆‍♂️🙆‍♀️ ஆனால் தூர இருப்பவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது.!

🙆‍♂️🙆‍♀️ இதேவேளை ஆண்களைப் பொருத்தவரை அவர்களால் 90 டிகிரி கோணத்தில் தூர இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும்.!

🙆‍♂️🙆‍♀️ அருகில் உள்ளவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது.!

🙆‍♂️🙆‍♀️ உங்கள் வீட்டிலும் இந்தப் பிரச்சினை சில சமயங்களில் இருக்கும்.

🙆‍♂️🙆‍♀️ கணவன் வேலைக்குச் செல்ல தயாராகும் போது.

🙆‍♂️🙆‍♀️ என் பைக் சாவி எங்க.? கார் சாவி எங்க.? ஆபீஸ் சாவி எங்க.?, சாக்ஸ் பாத்தியா.? ஷூவப் பாத்தியா.?

🙆‍♂️🙆‍♀️ என்று மனைவியைப் போட்டு வதைப்பதும்

🙆‍♂️🙆‍♀️ மனைவியும் ”இது என்ன? கண்ணுக்கு முன்னே வச்சிக்கிட்டு தேடுறீங்க.?
எப்பவுமே நானே வந்து தேடிக் கையில தரனும்”

🙆‍♂️🙆‍♀️ என திட்டிக் கொண்டே அருகில் உள்ள பொருளைத் தேடிக்கொடுப்பதும் வீடுகளில் அன்றாடம் நடக்கும் சங்கதி.!

🙆‍♂️🙆‍♀️ இப்போது இதற்குக் காரணம் புரிந்திருக்கும்.

🙆‍♂️🙆‍♀️ ஆண்களைவிட பெண்களால் இலகுவாக ஊசிக்கு நூல் கோர்க்க முடிவதும் இதனால்தான்.!

🙆‍♂️🙆‍♀️ கவனம் செழுத்தும் திறன்.

🙆‍♂️🙆‍♀️ பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🙆‍♂️🙆‍♀️ இதனை Multi Personality என்போம்.

🙆‍♂️🙆‍♀️ உதாரணாமக பெண்களால் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும் முடியும். உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்!

🙆‍♂️🙆‍♀️ ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை Single Personality என்போம்.

🙆‍♂️🙆‍♀️ உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது.!
அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும்!
இரண்டிலும் இருக்காது!

🙆‍♂️🙆‍♀️ நிறங்கள் புலப்படும் விதம்.

🙆‍♂️🙆‍♀️ ஆண்கள் ஆடைக் கடைகளுக்குச் சென்றால் குறுகிய நேரத்தில் தமக்கான ஆடையை பிடித்த நிறத்தில் பார்த்து எடுத்துக்கொண்டு வருவார்கள்.

🙆‍♂️🙆‍♀️ ஆனால் பெண்கள் மிக நீண்ட நேரம் எடுப்பார்கள்.!
காரணம் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்களை விட பெண்களின் கண்களுக்குப் புலப்படும்.

🙆‍♂️🙆‍♀️ நிறங்கள் மிக துல்லியமானவையாகவும் ஒரு நிறத்தில் உள்ள பல உப நிறங்களை வேறு பிரித்தறியும் விதத்திலும் இருப்பதனால்தான்.

🙆‍♂️🙆‍♀️ எனவே ஆண்கள் மொத்தமாகப் பார்க்கும் பார்வையைவிடவும் பெண்கள் துல்லியமாகப் பார்ப்பதால் ஆடைகளைத் தெரிவுசெய்வதில் தாமதம் ஏற்படுகின்றது!

🙆‍♂️🙆‍♀️ மொழி.

🙆‍♂️🙆‍♀️ பெண்களால் இலகுவாக பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும்.

🙆‍♂️🙆‍♀️ அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள்.

🙆‍♂️🙆‍♀️ 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும்.
மூளையின் இந்த அமைப்பே காரணம்.

🙆‍♂️🙆‍♀️ அவ்வாறே ஒரு நாளைக்குப் பெண்கள் சுமார் 7000 வார்த்தைகளைப் பேசுகின்றார்கள்.

🙆‍♂️🙆‍♀️ ஆண்கள் ஒரு நாளைக்குப் பேசும் வார்த்தைகள் சுமார் 2000 மட்டும்தான்.

🙆‍♂️🙆‍♀️ பகுத்துணரும் திறன் (Analytical Skills)

🙆‍♂️🙆‍♀️ ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது.

🙆‍♂️🙆‍♀️ அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்தி கொள்ள முடியும்.

🙆‍♂️🙆‍♀️ ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது.

🙆‍♂️🙆‍♀️ அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்து கொள்ள முடியாது.

🙆‍♂️🙆‍♀️ உதாரணமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் (Signal) என்பவற்றை முன் கூட்டியே விரைவாகக் கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்!

🙆‍♂️🙆‍♀️ ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்!

🙆‍♂️🙆‍♀️ ஆண்களால் இவ்வாறு செய்ய முடிவதற்குக் காரணம், ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறனும் 90 டிகிரியில் தூரப் பார்க்கும் திறனுமாகும்.

🙆‍♂️🙆‍♀️ உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும்.

🙆‍♂️🙆‍♀️ பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்!

🙆‍♂️🙆‍♀️ உடல் மொழிகளைப் பிரித்தறிதல்.

🙆‍♂️🙆‍♀️ பெண்களால் இலகுவாக ஆண்களின் உடல் மொழிகளைப் (Body languages) படித்திட முடியும்.

🙆‍♂️🙆‍♀️ சோர்வு, விரக்தி, கவலை, கோபம், சந்தோசம் என எதனையும் ஒரு பெண்கள் இலகுவாகக் கண்டுபிடித்து விடுவார்கள்!

🙆‍♂️🙆‍♀️ ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக இது பொய்தான் என்பதை அறிந்து கொள்வார்கள்.

🙆‍♂️🙆‍♀️ ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

🙆‍♂️🙆‍♀️ காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் பிரித்தறிந்து உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை.

🙆‍♂️🙆‍♀️ பிரச்சனைக்கான தீர்வுகள்!

🙆‍♂️🙆‍♀️ பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.

🙆‍♂️🙆‍♀️ இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டு கொள்வார்கள்.

🙆‍♂️🙆‍♀️ ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்ணின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது.

🙆‍♂️🙆‍♀️ யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாகவே திருப்தியடைந்து கொள்வார்கள்!

🙆‍♂️🙆‍♀️ சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் சரி தீராவிட்டாலும் சரி அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள்!

🙆‍♂️🙆‍♀️ உதாரணமாக ஆண்கள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை யோசித்து, திட்டமிட்டு நடைமுறை ரீதியாக அதனைத் தீர்க்க முனையும்போது.

🙆‍♂️🙆‍♀️ பெண்களோ அப்பிரச்சினையை உணர்ச்சி மூலம் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர்!

🙆‍♂️🙆‍♀️ சிறு பிரச்சினைக்கும் பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது இதனால்தான்!

🙆‍♂️🙆‍♀️ மகிழ்ச்சியின்மை

🙆‍♂️🙆‍♀️ ஒரு பெண்ணிற்கு தனது அன்புறவுகளிடையே பிரச்சினை அல்லது திருப்தியின்மை இருந்தால் அவர்களால், அவர்களின் வேலையில் ஒழுங்கு முறையாகக் கவனம் செலுத்த முடியாது.!

🙆‍♂️🙆‍♀️ அதேபோன்று ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சினை இருந்தால் அவனின் அன்புறவுகளின் மீது சரியாகக் கவனம் செலுத்த முடியாது.!

🙆‍♂️🙆‍♀️ ஞாபக சக்தி.!

🙆‍♂️🙆‍♀️ இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.

🙆‍♂️🙆‍♀️ மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான்.!

🙆‍♂️🙆‍♀️ பிள்ளையின் பிறந்த தேதி, வயது, எத்தனையாம் ஆண்டில் படிக்கிறான் என கேட்டால் மனைவியைத்தான் திரும்பிப் பார்ப்பார்கள்.

🙆‍♂️🙆‍♀️ மனைவியிடம் கேட்டுத்தான் சொல்வார்கள்.

🙆‍♂️🙆‍♀️ எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் மறந்து விடுவார்கள்.!

🙆‍♂️🙆‍♀️ காரணம் ஆண்களின் இயல்புத் தன்மை அப்படித்தான்.!

🙆‍♂️🙆‍♀️ ஆனால் இந்தவிஷயத்தில் பெண்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள்.!

🙆‍♂️🙆‍♀️ கணவன், பிள்ளைகள் என எல்லோருடைய பிறந்த தினத்தையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.!

🙆‍♂️🙆‍♀️ ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான இந்த வித்தியாசங்களை எல்லோரும் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.!

🙆‍♂️🙆‍♀️🙆‍♂️🙆‍♀️🙆‍♂️🙆‍♀️🙆‍♂️🙆‍♀️🙆‍♂️🙆‍♀️🙆‍♂️

உங்களுக்காக ஆன்மீககேள்விகளும்-பதில்களும்ஏன் ? எதற்கு? எப்படி?

உங்களுக்காக ஆன்மீக
கேள்விகளும்-பதில்களும்
ஏன் ? எதற்கு? எப்படி?

1 – வீட்டில் விளக்கேற்றும் போது
சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம்
போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

2 – செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

3 – கண்ணை மூடிக் கொண்டு
கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

4 – திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை
மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?

அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

5 – சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?

சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

6 – கனவில் பாம்பு அடிக்கடி
வருகிறது. அதைத் தவிர்க்க
ஏதாவது பரிகாரம் உண்டா?

பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

7 – பூஜை, விரதம்
போன்றவற்றை பெண்கள் மட்டுமே
கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?

இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.

8 – மாலை நேரத்தில் சாப்பிடக்
கூடாது என்று பெரியவர்கள்
சொல்வதன் காரணம் என்ன?

சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.

9 – வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் அதை விற்றுவிடுகின்றனர். இதற்கு சாஸ்திர ரீதியான காரணம் உண்டா?

பன்றியைத் தவிர மற்ற மிருகங்கள் இடித்துவிட்டால் வாகனம் தங்கமாக மாறிவிடுமா? இதற்கு சாஸ்திரங்களையெல்லாம் இழுக்க வேண்டாம். வாகனங்களை விற்கவும் வேண்டாம். முதலில் எல்லோரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். “சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் இடிப்பவர்களெல்லாம் அடுத்த பிறவியில் பன்றியாகப் போகக் கடவது’ என்று சபிக்குமளவுக்கு சிலர் வாகனம் ஓட்டுகின்றனர்.

10 – திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள்?

சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.

11 – கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?

முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

12 – சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?

நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி – நந்தி, கணவன் – மனைவி, பெற்றோர் – குழந்தை, குரு -சிஷ்யன், பசு – கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

13 – நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்?

பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

14 – பஞ்சாங்கத்தில் நட்சத்திரம்,
திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?

விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.

15 – கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதில்உள்ளதத்துவம் என்ன?

மேலோட்டமாக பார்க்கும்போது திருடுவது போலத் தெரிந்தாலும், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அதை திருட்டாக எண்ண மாட்டோம். வெண்ணெய் என்பது பக்தி நிறைந்த வெள்ளை உள்ளத்தைக் குறிக்கும். அதை பரம்பொருளான கிருஷ்ணர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.

16 – விளக்கேற்றக் கூடிய
திசைகள் யாவை?

கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.

17 – நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?

இஷ்டதெய்வ சிலையை வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.

18 – பிரதோஷம் என்றால் என்ன?
அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?

தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

19 – ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் பழமொழியின் பொருள் என்ன?

மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் சிவாலயம், சிவனடியார்களைத் தொழுதால் அறிவும், நல்வாழ்வும் கிட்டும் என்பது இதன் பொருள். நல்லறிவே மகிழ்ச்சியான வாழ்வின் அடித்தளம். இதனைத் தரும் ஆற்றல் ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே உண்டு.
ஊர்கள் தோறும் சிவ, விஷ்ணு கோயில்கள் எழுப்பப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. வீட்டில் எவ்வளவு தான் ஜெபம்,ஹோமம், பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தான் நிறைவு உண்டாகும். சித்தாந்தம் கூறும் இவ்வளவும் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ எனும் ஒரே வரியில் கூறிவிட்டார் அவ்வைப் பிராட்டியார்.

20 – புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ஆபாச சிலைகள் வடித்திருப்பதன் காரணம் என்ன?

இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், “டிவி’ போன்றவை வந்து இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனிதஇனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.

21 – சுவாமிக்கு சாத்திய
மாலையை வாகனத்தின் முன்
கட்டிக் கொள்ளலாமா?

சுவாமிக்கு சாத்திய மாலைகள்
பிரசாதம் எனும் புனிதப் பெயரையடைகின்றன. இவை
காலில் படும்படியாக எங்கும் விழக்கூடாது.வாகனங்களில் கட்டிக் கொள்வதால் அது செல்லும் இடம் எல்லாம் சிதறி விழும். அதன் மீது மற்றைய வாகனங்கள் ஏறிச்செல்வது, நம் காலில் படுவது போன்ற தவறுகள் ஏற்படுகின்றன. இது பாவச் செயல். செய்யக்கூடாது.

22 – சிவலிங்க வழிபாட்டை
வீட்டிலேயே செய்வது சரியா?

என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழி நின்று நம் எல்லார் இல்லங்களிலும் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்தலும் மற்றும் அவரவர் குல வழக்கப்படி தெய்வ விக்ரகங்களை பூஜை செய்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இதற்கு ஆன்மார்த்த பூஜை என்று பெயர். கோயில்களில் செய்யப்படுவது பொது நலனுக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜை. இரண்டும் சரியாக நடந்தால் தான் நாமும் நாடும் சுபிட்சமாய் இருப்போம்.

23 – பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது. அதைப் போக்கும் வழி என்ன?

காலம் சென்ற முன்னோருக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனுடைய சந்ததி தழைக்க அவரவர்களது முன்னோர் வழிபாடு எனும் பிதுர் காரியத்தை அவசியம் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் திதி கொடுத்தல், அமாவாசை தர்ப்பணம் செய்தல் போன்றவை பிதுர் காரியங்களாகும்.

இவற்றைச் சரியாக
செய்யாதவர்களுக்கு பிதுர் தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைப் போக்கிக் கொள்ள ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றில் தில ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகும், பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்.

24 – திருமணத்திற்குப் பின்
பெண்கள் பிறந்த வீட்டு குல
தெய்வத்தை வழிபடலாமா?

புகுந்த வீட்டுக் குல தெய்வம் தான் உங்களின் குலதெய்வமும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், தாய்வீட்டு குலதெய்வத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு, தாய் வீட்டுக் குல தெய்வக் கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். இது விசேஷமானதும் கூட.

25 – ஸ்ரீராமஜெயம் எழுதிய
நோட்டை நதியில் விட்டுவிடலாமா?

ஸ்ரீராமஜெயம் நோட்டில் எழுதுவதற்கு லிகிதநாமஜெபம் என்று பெயர். எழுதிய நோட்டை பூஜையறையில் வைப்பது சிறப்பு. இயலாவிட்டால் ராமநாம வங்கிகளுக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

26 – வீட்டிலிருந்து கிளம்பும்போது
மூன்று பேராகச் செல்லக்கூடாது
என்பது உண்மைதானா?

சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்னையில்லை.

27 – வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? விளக்கம் தேவை?

முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.

28 – அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக் கூடாது என்கிறார்களே, சரிதானா?

எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத்தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழங்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும்.

29 – செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள்?

செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள்.

30 – சுபநிகழ்ச்சிகளுக்கு
வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்?

நவக்கிரகங்களில் ஒருவரான
சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

31 – அறுபது வயதடைந்த
அனைவரும் 60ம் கல்யாணம்
கட்டாயம் நடத்த வேண்டுமா?

நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும்.

அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை “ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி’ என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.

ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா? நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.

32 – சிலர் கடவுள் வேடம் அணிந்து பிச்சை எடுக்கிறார்களே. இதை ஊக்கப்படுத்தலாமா?

பிச்சை எடுப்பதே தவறு. இதில் கடவுள் வேடம் வேறு. கிடைக்கும் காசை எடுத்துக் கொண்டு வேடத்தைக்கூட கலைக்காமல் அசைவ ஓட்டலிலும் மதுபானக்கடைகளிலும் இவர்களைக் கண்டு வேதனைப்படுபவர்கள் ஏராளம். எனவே ஊக்குவிக்காதீர்கள். பிச்சைக்காரர்களே இல்லாத நாடாக இந்தியா மாற வேண்டும். பிச்சைஎடுப்பவர்கள் திருந்தி வேறு வழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். அவர்களது குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டும். எவ்வளவோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தோன்றியும் இவர்களை மாற்ற முடியவில்லையே!

33- ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் நிவர்த்தி செய்வது எப்படி?

இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாகிவிட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படத் தோன்றுகிறது. இதற்குப்பரிகாரம் பிறக்கின்ற பெண் குழந்தைகளையாவது பாராட்டி சீராட்டி வளர்ப்பது தான்! பெண் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். ஜாதகப்படி பெண் சாபம் இருந்தால் சுமங்கலி பூஜை செய்யுங்கள்.

34 – பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்?

எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.

35 – கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா?

நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது. சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது.

அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது. எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தான் பிரதமர்.

36 – பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்ல வேண்டும்?

குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

37 – தற்காலத்தில் புத்திர
காமேஷ்டி யாகம் செய்கிறார்களா?
விரும்புபவர்கள் எந்த தலத்திற்குச் செல்ல வேண்டும்?

புத்திர பாக்கியம் வேண்டி செய்யப்படுகிற இந்த யாகத்தை, பலர் தங்கள் y செய்து கொள்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை புத்திர காமேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் (நவக்கிரக புதன் ஸ்தலம்) ஆகியவை சிறப்புடையவை.

38 – கோயிலில் அரசமரம்,
வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து பக்தர்கள் வலம் வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன?

அரசமரம் விஷ்ணுவின் வடிவம். இதனை “அசுவத்த நாராயணர்’ என்பர். இதன் அருகில் வேப்பமரம் வைத்து மகாலட்சுமியாக எண்ணி, “அ”வத்த விவாஹம்’ எனப்படும் அரசவேம்பு கல்யாணம் செய்ய வேண்டும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இவற்றை வலம் வந்தால், ஸ்ரீ லட்சுமி நாராயணரை வலம் வந்த பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்கி இனிய இல்லறமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

39 – மந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறையைக் கூறுங்கள்?

இது கடையில் வாங்கும் மருந்தல்ல! சாப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து கொள்ள! அல்லது அறிந்து கொண்டு பிரார்த்தனையைத் துவங்க! குருநாதரிடத்தில் அவர் கூறும் மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, அவரவர் நலனுக்காக நம்பிக்கையுடன் ஜபம் செய்தால் பலன் கிடைக்கும். இது விஷயத்தில் ஆராய்ச்சி வேண்டாம்.

40 – வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து விட்டது. அதை அகற்ற மனமில்லை. மீண்டும் பயன்படுத்தலாமா?

பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தால், தாராளமாக உபயோகிக்கலாம். தோஷம் எதுவும் கிடையாது. நல்ல பலனே ஏற்படும்

41 – யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்?

இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.
“”அக்னௌ ப்ரஸ்தாகுதி: ஸம்யக் ஆதித்யம் உபதிஷ்டதி
ஆதித்யாத் ஜாயதே விருஷ்டி: வ்ருஷ் டேரன்னம் தத:ப்ரஜா:”
யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும்.

42 – கிரகண வேளையில் கோயில் நடை சாத்துகிறார்கள். அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா?

அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.

43 – கடவுளின் படம் அல்லது சிலை
எது வழிபாட்டிற்கு உகந்தது?

மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.

44 – ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது உண்மைதானா?

சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் வீட்டில் சிலருக்கு ஆகாது என்பது ஜோதிட சாஸ்திரப்படி உண்மைதான். அதற்காகப் பயந்து கொண்டு குழந்தைகளை வெறுக்கக் கூடாது. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸூமாகரம் போன்ற நூல்களில் இவற்றிற்கான பரிகாரம் கூறப்பட்டுள்ளது. இதன்படி தக்க பரிகாரம் செய்து கொண்டால்,தீயவையும் நல்லதாகிவிடும். விஷத்தையே மருந்தாக மாற்றும் நாம், ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்.

45 – வீட்டில் வழிபாட்டிற்காக இருக்கும் துளசிச் செடியின் இலைகளை மருந்துக்காகப் பறிக்கலாமா?

வீட்டில் துளசிச் செடி வழிபாட்டில் இருப்பதே பெரிய மருந்து தான். இதன் இலைகளைப் பறிக்கக் கூடாது. வேறு துளசிச் செடிகளை வளர்த்து மருந்துக்கு உபயோகிக்கலாம்.

46 – ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்?

மற்ற தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு சாத்துவது போல் ஆஞ்சநேயருக்குப் பிரியமான வெண்ணெயினால் சாத்துபடி செய்வது சிறப்பு. அவரது வாலில் தீ வைக்கப்பட்டதால், உஷ்ணத்தைத் தணிக்க பக்தர்கள் அன்புடன் வெண்ணெய் சாத்துகின்றனர்.

47 – சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா?

அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலைபாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.

48 – அம்மனுக்குப் பூக்குழி இறங்குவது
(தீ மிதித்தல்) எப்படி சாத்தியமாகிறது?

நம்பிக்கையும் பக்தியும் முழுமையாக இருந்தால் சாத்தியம் தான். இந்நிலையில் இருப்பவர்களை மருளாளிகள் என்பர். பக்தி மிகுதியால் ஏற்படும் பரவச நிலையை மருட்சி என்று அழகிய தமிழ்ச்சொல் குறிப்பிடுகிறது. மருட்சி உடையவர்கள் மருளாளிகள். இவர்களுக்குத் தீயும், பூவும் ஒன்றாகத் தெரியும். இதனால் தான் தீ மிதித்தலை பூ மிதித்தல் என்று கூறுகிறார்கள். நம்பிக்கை இல்லாமலோ அல்லது சோதித்துப் பார்க்கவோ பூக்குழி இறங்கினால் கஷ்டம் தான்.

49 – கோயிலில் தெப்பக்குளம்
இருப்பதன் நோக்கம் என்ன?

திருக்குளம் என்ற பெயர் தான் முக்கியம். அதில் தெப்பம் விடுவதால் தெப்பக்குளமாகி விட்டது. திருக்குளம் அடிப்படையிலேயே சிந்திப்போம். ஒரு கோயிலில் மூல மூர்த்தியாக விளங்கும் தெய்வம் எப்படி முக்கியமோ, அதுபோலவே தீர்த்தம் (திருக்குளம்), தலவிருட்சம் ஆகிய இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் சிறப்பாக அமையும் கோயில் தான் க்ஷேத்திரம் என போற்றப்படும்.

50 – சித்திரை மாதத்தில் பிள்ளை
பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று சொல்லப்படுவது உண்மையா?

இல்லை.

🍃Sri Yoga & Naturopathy🍃
9952133415
(Whatsapp to join yoga and naturopathy group)

உடலுறவு கொள்வதன் பயன்

உடலுறவு கொள்வதன் பயன் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்….

தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.

வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.

சளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்

தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான்.

ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம்

மனம் அமைதியாகிறது.
புதிய இரத்தம் உருவாகும்.
நரம்புகள் வலு பெறுகிறது.

மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.

மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.

அதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு

  1. இரத்த சோகை ( தலஸ்மியா)
  2. கர்பபை புற்று
  3. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் )
    5.மூச்சடைப்பு
  4. கை கால் மூட்டு வழி
  5. வெள்ளை படுதல்
  6. உடல் சோர்வு
    9.கண்பார்வை குறைதல்
  7. உடல் பருமன்

ஆகியவை அன்டாது. நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் காரணம்? அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொல்வதில்லை.அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை.

உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல. உணர்வும் உடலும் ஒன்று சேறும் இடம். ஆகவே ஆரோக்யமாக இருக்க உறவு கொள்ளுங்கள்.

🍃Sri Yoga & Naturopathy🍃
9952133415
(Whatsapp to join yoga and naturopathy group)

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

  1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
    கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
  2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
    மலம் கழிக்க வேண்டும்.
    கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

  1. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
    6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
    ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.
  2. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
    சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
    வந்தால் கட்டுக்குள் இருக்கும்.
  3. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
    தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
    கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

  1. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
    அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
    புற்றுநோயை உருவாக்கும்.
  2. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
    வாழ்நாளைக் குறைக்கும்.
    குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.
  3. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
    மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
    மது, புகை கூடவே கூடாது.
  4. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
    சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

  1. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.
  2. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.
  3. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
    தயவு செய்து
    வேர்க்கடலை,
    பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
    கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும்,
    ராகியை
    சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!
    ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!
    தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
    உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???
    தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!
    தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
    கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!
    உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்???
    *தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
    🥃 சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!
    *நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
    இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்
    கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.
    *இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்…

🍃Sri Yoga & Naturopathy🍃
9952133415
(Whatsapp to join yoga and naturopathy group)

மலம்கழித்தல் விழிப்புணர்வுபதிவு…

மலம்கழித்தல் விழிப்புணர்வுபதிவு…

டாய்லெட் என்ற ஒரு பொருளை வைத்து மனிதனுக்கும்,இயற்கைக்கும்,பிற உயிர்களுக்கும் எவ்வளவு ஆபத்து ஏற்படுத்தபட்டு இருக்கிறது என்று பாருங்கள்.

“மனிதனுக்கும் நீர் நிலைகளுக்கும்” உள்ள தொடர்பை துண்டித்து, நீர் நிலைகளை அழித்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். தண்ணீர் பெரும் வணிக பொருளாக மாறும்.

அன்று திறந்த வெளியில்…மலம் கழிக்க ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் ( தப்பி தவறி பெண்கள் இருக்கும் பகுதிக்கு ஆண் சென்றால் தண்டனைகள் கடுமையாக இருக்கும் என அஞ்சுவர்.) என ஒதுங்கு புறமாக பாதுகாப்புடன் மலம் கழித்தோம்:( இப்பொழுதுதான் நகர மயமானதும் ஒதுங்கு புறம் இன்றி போனது…ஒழுக்கமும் போனது)

முன்பு அனைவரும் மலம் கழிக்க ஏரி குளங்களுக்கு செல்ல குறைந்த பட்சம் 1கி.மீ நம்மை அறியாமல் நடந்து மலம் கழித்து நீர் நிலைகளில் நீச்சலடித்து
குளித்து வீட்டிற்கு வரும்போது காலைகடனையும் முடித்து நம்மை அறியாமலே நடைபயிற்சியும் நீச்சலும் செய்து உடல் நலம் பேணினோம்.இப்போது இது கிராமங்களில் சிறிதளவுமட்டுமே உள்ளது. காலை வெயில் நம்மீது பட நமக்கு beta D3 சக்தி கிடைக்கும்.

####டாய்லட்டை மூலதனமாக வைத்து

1. நோய்களை பெருக்கும் மருத்துவ வணிகமும்,

2. தூய்மை படுத்துதல் என்ற பெயரில் இரசாயண பொருட்கள் வணிகமும்,

3. நீர்நிலைகளை அழித்து தண்ணீரை விலைக்கு விற்கும் வணிகமும்

எப்படி செயல்படுகிறதென பார்ப்போம்####

திறந்தவெளி மலம் கழித்தல் முறைக்கும் டாய்லெட் க்கும் வேறுபாடுகள்:

* திறந்த வெளியில்…காற்றோட்டமாக மலம் கழிக்கும் போது…கார்பன் டை ஆக்சைடு… காற்றிலே கலந்து போய்விடுவதால் நாம் அதை சுவாசிப்பதில்லை.

* திறந்த வெளியில் மலம் கழித்தோம் அது மறுநாள் மக்கி உரமாய் போனாது….

* டாய்லட் ல் நாம் வெளியிடும் வாயுக்கள் நான்கு சுவருக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்க நாம் அதை சுவாசித்து கொண்டே இருந்து வெளியே வரும் பொழுது கதவு திறக்க அந்த வாயுக்காற்று பெட் ரூமில் பரவ குடும்பத்தோடு விடிய விடிய ஏசியோடு சேர்த்து சுவாசிக்கிறோம்.

* ஒவ்வொருவரும் மலம்,சிறுநீர் கழித்த பிறகு harpic போட்டு கழுவிட்டு விட்டா வருகிறோம்? சிந்தியுங்கள்…இரண்டு நாளுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒருமுறை தானே கழுவுகிறோம்…அப்போ தொற்று வராதா?

1. நோய்களை பெருக்கி மருத்துவ வணிகம் எப்படி? :
——————————————————–
திறந்த வெளியில் மலம் கழித்ததால் மலத்தில் என்ன வருகிறது, மலம் எப்படி வருகிறது? தண்ணீராகவா,புழுக்கள் வருகிறதா? சீதமாக வருகிறதா? மலத்தில் ரத்தம் வருகிறதா? வழக்கத்திற்கு மாறாக மலத்தில் மாற்றம் உள்ளதா?…என ஆராய்ந்து வீட்டிலேயே செலவின்றி எளிய முறையில் பாட்டி வைத்தியம் பார்த்து ஆரோக்கியத்தை பேனி காத்தோம்.டாய்லெட் வந்ததும் பாட்டி வைத்தியம்,நாட்டு வைத்தியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய துவங்கின.

மலம் கழித்தலின் போது கீழே குனிந்து பார்க்காததால்,டாய்லட் சரியாக பராமரிக்காததால், வாயுக்களை சுவாசிப்பதால் முழுமையாக மலம் வெளியேற்றபடாததால், இரசாயணங்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் நோய்கள் பெருக்கமாக நோயாளிகள் பெருக மருத்துவ வணிகம் பெருகியது.

டாய்லட் ஐ ஒழுங்காக கழுவில்லை என்றாலும் அதன் மூலமாக தொற்று நோய்கள் பரவுகின்றன.

#சிந்திக்க:
கழிப்பரையை கட்டச் சொல்லி விளம்பரபடுத்தும் அரசாங்கம், பொது கழிப்பிடங்களை பேணி காப்பதில்லையே ஏன்?

2. இரசாயனப் பொருட்கள் வணிகம்:
————————————————————
#டாய்லெட் என்று கட்டினால் ஒவ்வொரு மாதமும் ஆகும் செலவுகள்:

1.கண்டிப்பாக…பிரஷ்
2.டாய்லட்வாஷ்
3. ரூம் ரிபர்ஷ்ணர்
4.டைல் கிளீனர்
5. பினாயில்
6. டிஸ்யூ பேப்பர்.
7. கேட்டு வாஷ்

டாய்லட் நாறுகிறது என்று பினாயிலை ஊற்றினால் நாற்றம் போய்விடுகிறதா? இல்லை..அது பொய்.. பினாயிலின் நாற்றம் அதைவிட அதிகமாக இருப்பதால் அது பினாயிலோடு கலந்தே தான் இருக்கிறது..நமக்கு பினாயிலின் வாடை மட்டுமே தெரியும்..எனவே பினாயில் போலி….பாதுகாப்பானது அல்ல…அதுவும் மாயை.

தூய்மைபடுத்த பயன்படுத்தபடும் அனைத்துமே கெமிக்கல்கள்…அதனால் உடலுக்கு தோல் , சுவாச கோளாறுகள் சம்பந்தமான கேடுகளால் நோய்கள் பெருக்கமடைகின்றன.

3. நீர்நிலைகளை அழித்து தண்ணீரை விலைக்கு விற்கும் வணிகமும்:
—————————————————————

#மனிதனுக்கும் நீர்நிலைகளுக்குமான தொடர்பை துண்டித்தல்:

* ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு ஆகும் தண்ணீர் செலவு கணக்கு:

ஒரு முறை சிறிநீர் கழிக்க சுமார் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றபடுகிறது.. ஒருவர் ஐந்து முறை ஒருநாளைக்கு சிறுநீர் கழிக்க 50 லி தண்ணீர் வீணாக பயன்படுத்தபடுகிறது…அப்போ ஒரு குடும்பத்துக்கு நாளு பேர் என்றால் 200 லிட்டர் தண்ணீர் வீனாக செலவாகிறது.

ஒருவர் குளிக்க சுமார் 25 லிட்டர் தண்ணீர் செலவிட நான்கு பேருக்கு 100 லிட்டர் தண்ணீர் வீனாகுகிறது.

துணி துவைக்க 30லிட்டர் வீனாகுகிறது

தண்ணீர் மறுசுழற்சி
————————————-
சரி அந்த தண்ணீர் மறு சுழற்சி செய்து பூமிக்குள் அனுப்ப படுகிறதா? அதுவும் இல்லை…டிரைனேஜ் வழியாக சாக்கடை வழியாக ஆற்றுக்கு போய்விடுகிறது…பிறகு எப்படி நிலத்தடியில் தண்ணீர் கிடைக்கும்?

ஒரு நாளைக்கு போர் வழியாக ஒரு குடும்பத்திற்கு சுமார் 500 லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மழை நீரையும் மண்ணுக்குள் செல்லாதவாறு காண்கிரீட் தரை, டிரெய்னேஜ் போட்டு தடை செய்துவிடுகிறோம்.

முன்பெல்லாம் வீட்டில் கொல்லைபுரம் இருக்கும். குளிக்க,துவைக்க,பாத்திரம் கழுவ பயன்படுத்தும் தண்ணீர் செடிகளுக்கு சென்று மண்ணுக்குள்ளேயே மீண்டும் அனுப்பப்படும்…சிமென்ட் தரையாக அமைக்காததால் மழை நீரும் மண்ணுக்குள் செல்லும். அதனால் நிலத்தடி நீர் வற்றாது இருந்தது.ஆனால் இன்று?

அதே போல் அன்று, சோற்று பானையை சுரண்டாதே, வழித்து போடாதே என்று சொல்வார்கள் காரணம் நாம் உண்டு மிச்ச உணவுகளை கொல்லைபுறத்தில் பாத்திரம் கழுவும் பொழுது அதை நம்பி உண்ண காத்திருக்கும் காக்கீ,குருவி,அணில்,நாய் என பல்லுயிர்களும் அதனை நம்பி இருக்கும் என்று…

ஓடைகளும் ஆறுகளும் ஆரோக்கியமாக இருந்தது….காரணம் நீர்நிலைகளை நாம் நேரடியாக பயன்படுத்தி கொண்டு இருந்தோம். அதனால் அந்த அக்கறையில் தூர் வாரினோம் பேணி காத்தோம்.

இன்று நாம் டாய்லெட் ஐ பயன்படுத்தாமல் திறந்த நிலை மலம் கழித்தல் முறையில் இருந்திருந்தால்:

*குப்பைகளை ,கழிவுகளை நீர்நிலைகளில் கொட்ட விடமாட்டோம்.

* சாக்கடையயை, இரசாயன கழிவு நீர்களை ஆறு,வாய்காலில் கலக்க விட மாட்டோம்.

* பெரும் குளிர்பான நிறுவனங்களை தண்ணீர் உறுஞ்ச விடமாட்டோம்.

* குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுகொடுப்போம்.

*நீர் நிலைகளில் வளரக்கூடிய ஆயிரகான வகை மின்கள், இரால்,நண்டு என அனைத்தும் இருந்திருக்கும்.

நீர்நிலைகளை நாம் அன்றாட பயன்படுத்தாததால்
அன்று “சென்னை கூவம் ஆறு” சாக்கடை ஆனது, இன்று “காவிரியாறு” சாக்கடையாகி கொண்டு இருக்கிறது.

நமக்கென்ன…வீட்டுக்குள்ள தண்ணி வருது, பாதுகாப்பாக இருக்கிறோம்,ஹைஜெனிக்….என்ற மாயை ல்…மறைமுகமான நாம் நாற்றத்திலும்,ரசாயணங்களிலும் சிக்கி பணத்தையும் விரையமாக்கி…நோய்களையும் வாங்கிக் கொள்கிறோம்…

மேலும் இனி… கிராமங்களையாவது விட்டு வையுங்கள்…என்பதே எனது வேண்டுகோள்.

ஆனால் மாற்றி யோசிக்கலாம்…வழிகள் உள்ளது…அடுத்த பதிவுகளில் பாருங்கள் தொடரும்!……..