ஐம்பது வகையான வீட்டுக்குறிப்புகள் – தெரிந்துகொள்வோம்

ஐம்பது வகையான வீட்டுக்குறிப்புகள் – தெரிந்துகொள்வோம்

  1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
  2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
  3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
  4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
  5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
  6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
  7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
  8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
  9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
  10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ”D” யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
  11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
  12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
  13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
  14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
  15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
  16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
  17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
  18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
  19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
  20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
  21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
  22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
  23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
  24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
  25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
  26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
  27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
  28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
  29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

திரும்பிப் பார்க்கிறேன்…!

திரும்பிப் பார்க்கிறேன்…!

இல்வாழ்வில் அடியெடுத்து வைத்து, பின் நம் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தைகள் பிறந்து, அவர்களும் வேகமாக வளர்ந்து விட்டார்கள்.

பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று, அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள்.

நாம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

வயதுக்கேற்ற சின்னச் சின்ன உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும், ஆரோக்கியத்தை காத்துக்கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

வாழ்வினை திரும்பிப் பார்க்கும்போது, மலைப்பாக இருக்கிறது!

எத்தனையோ சந்தோசங்கள், சிரிப்புகள்… எத்தனையோ துக்கங்கள், கண்ணீர் துளிகள்…
எத்தனையோ ஏமாற்றங்கள், கோபங்கள்…
எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம்!

நம் மீது அன்பைப் பொழிந்த, நாம் அன்பு செலுத்திய நிறைய பேர் இன்று நம்மிடையே இல்லை.

இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள், விபத்துக்கள், கொடிய மற்றும் கொள்ளை நோய்கள், பஞ்சங்கள், போர்கள், தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து இதுவரை தப்பித்துக் கொண்டோம்.

நாம் ஆசையாய் நினைத்த சில விசயங்கள் கைகூடாததாலும், நாம் கொஞ்சமும் நினைத்தே பார்த்திராத சில விசயங்கள் நடந்தேறியதாலும்
மனம், வாக்கு, செயல் என அனைத்திலும் மாற்றங்கள் கண்டோம்.

பெரியவர்களின் பல ஆசீர்வாதங்கள்,
சமயங்களில் சில காயப்படுத்திய சொற்கள் இரண்டையும் ஏற்றுக் கொண்டோம்.

யாரெல்லாம் நம்மை உண்மையாய் நேசிப்பவர்கள், யாரெல்லாம் உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசுபவர்கள், யாரெல்லாம் பாசமாய் இருப்பது போல நடிப்பவர்கள் என்பதை சற்று தாமதமாக என்றாலும், கண்டுகொண்டோம்.

சில நண்பர்கள், சில உறவுகள் பிரிந்து போனதையும், சில நண்பர்கள், சில உறவுகள் நம்மை மறந்து போனதையும் வேறு வழியின்றி இயல்பாய் எடுத்துக் கொண்டோம்.

புதுப்புது இடங்களைச் சுற்றிப்பார்த்தும்,
விதவிதமான உணவுகளை ருசித்துப் பார்த்தும் மகிழ்ந்த தருணங்களை நினைவில் பதியவைத்துக்
கொண்டோம்.

வாழ்வின் இக்கட்டான நேரங்களில், ஆத்மார்த்தமான நண்பன் அல்லது தோழியிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று அதிலிருந்து மீண்டு வந்தோம்.

வேறு வேறு இடங்களில், வேறு வேறு மனிதர்களுடன், வேறு வேறு சூழ்நிலைகளில் பழகி, நிறைய அனுபவங்களை சேகரித்துக்கொண்டோம்.

பிறந்தநாள், திருமண நாள், சுப நிகழ்வுகள், விழாக்கள், புதுவருடம் போன்ற விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூடி மகிழ்ந்தோம்.

பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என அறிந்து
கொண்டோம்.

பணம், பட்டம், பதவி, புகழ், வீடு, தோட்டம், நகை, கார், சொத்து, சுகம், உறவுகள் என எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை எனப் புரிந்து கொண்டோம்.

நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை, அது நமக்குள்ளேதான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம்.

எல்லாவற்றையும் மன்னித்துவிடவும், சிலவற்றையாவது மறந்துவிடவும் கற்றுக்கொண்டோம்.

எல்லாமும் கடந்துபோகும் எனவும், எதுவும் நிரந்தரமில்லை எனவும் புரிந்து கொண்டோம்.

புத்தகங்களை வாசிப்பதும், இயற்கையை ரசிப்பதும், இனிய இசை கேட்பதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும் மனதுக்கு ஆறுதலான விசயங்கள்.

காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும்!

எனவே,

இக்கணத்தில் வாழ்வோம்!

வாழ்க்கையே திருவிழாதான்!

நாளும் இயல்பாய் அதைக் கொண்டாடுவோம்…!
வாழ்க வளமுடன், வளர்க நலமுடன்

(படித்ததில் பிடித்தது)

மந்திரம் என்றால் என்ன? அதை உச்சரிப்பதன் கருத்தென்ன?

அன்பரின் கேள்வி:
மந்திரம் என்றால் என்ன? அதை உச்சரிப்பதன் கருத்தென்ன?

அருட்தந்தையின் பதில்:
பக்தியோகத்தில் கடவுளை வணங்கும்பொழுது மனம் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுக்க வேண்டும். மனித வாழ்வில் எந்த சம்பத்து குறைவாக உள்ளதோ அதை நிறைவு செய்ய, அதற்குத் தகுந்தாற்போல் கடவுளுக்கு உருவம், குணம் அமைத்துள்ளார்கள்.

மனம் அந்த வடிவத்தை எடுக்கும்பொழுது, என்ன பலனை அடைய வேண்டுமோ அந்த நுணுகிய நிலைக்குச் செல்ல வேண்டும்.
புறமனத்திலிருந்து நடுமனத்திற்கும், பிறகு அடிமனத்திற்கும் (Super Consciousness Mind) செல்ல வேண்டும். மனம் அந்த நிலைக்குச்செல்ல அதற்கேற்றவாறு 51 அட்சரங்களிலிருந்து ஒலி வடிவத்தை சித்தர்கள் அமைத்துள்ளார்கள்.

அந்த ஒலி வடிவங்களை, தொடர்ந்து ஓதிக் கொண்டேயிருந்தால் நாடி நரம்புகளிலெல்லாம் உடலில் காந்த ஆற்றல் இயக்கத்தை ஏற்படுத்தி நுணுகிய நிலைக்கு மனதைக் கொண்டு வருகிறது என்பதை நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார்கள்.

வாழ்வில், மனிதன் ஒரு பொருளையோ, நலத்தையோ, உயர்வையோ அடைவதற்கு ஏற்படுத்திய ஒலி அமைப்புகளுக்கு மந்திரம்* என்று பெயர். அவ்வாறு அமைந்த சொல்லை உச்சரிக்கும்போது, சொல்லின் முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட ஒலியே (Cubic inches of air) மந்திரம் எனப்படும்.

மந்திரங்களை உச்சரிக்கும்போது புறமனம் அடிமனத்திற்குச் செல்கிறது. அடிமனம் என்பது இறைநிலையோடு தொடர்புடையது.

பின்னம் முறையிட்டுக் கேட்டால் முழுமை அதைக்கொடுக்கும்.

(If fraction demands, the Totality will supply)

அதற்கு உடலும் மனமும் முழுமையாக ஒத்துழைக்க óöவேண்டும்.

அதற்காகவே, வழிபாட்டில் மந்திரங்களை இணைத்து வைத்துள்ளார்கள்.

வாழ்க வளமுடன்!

ஆழ்மனமும் பிரபஞ்ச பேராற்றலும்

# நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள், எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள்.

இலக்கு சரியாக இருந்தால், அதை அடைவதற்கத் தேவையான எல்லா வழிகளையும் காட்ட உங்களுக்குள்ளே ஒரு அற்புத ஆற்றல் இருக்கிறது. அதனைச் சரியாக கண்டுபிடித்து முறையாகப் பயன்படுத்தினால் நவிரும்புவதை எல்லாம் அடைய அந்த ஆற்றல் உங்களுக்கு வழிகாட்டும்.

நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஆழ்மனம்தான் அந்த அற்புத ஆற்றலைக் கொண்டுள்ளது.

# நமது மனம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது.

1. நினைவு மனம்
பலவீனமானது. மரத்திற்கு மரம் தாவும் குரங்கைப் போன்று நம்முடைய விருப்பங்கள் அடிக்கடி மாறுவதற்கு அதுதான் காரணம். இந்த பலவீனமான நினைவு மனத்தின் துணையோடு நாம் செயல்படுவதால்தான் துன்பங்கள் தோல்விகள் போன்றவை நமக்கு வருகின்றன.

2. ஆழ்மனம்
இது இதயத்துடிப்பு, செரிமானம், ரத்த ஓட்டம் போன்றவற்றை கவனித்துக்கொள்ளும் வலிமையான மனம். உறங்கும் போதும், விழித்திருக்கும் போதும் செயல்படும் தன்மை கொண்டது. வாழ்க்கையில் சிறு வயதில் இருந்து இன்று வரை நடந்த சம்பவங்களை பதிவு செய்து வைத்திருக்கும் வலிமையான அந்த மனத்தின் உதவியோடு செயல்பட்டால் முடிவுகள் சிறப்பானதாக அமையும்.

ஆழ்மனம் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளையும்விட அதிக சக்தி மிக்கது. இந்த ஆழ்மனம் தன் எஜமானனுக்கு நூற்றுக்கு நூறு பங்கு விசுவாசமாக செயல்படும் தன்மை மிக்கது. அப்படிப்பட்ட விசுவாசம் மிக்க ஆழ்மனத்திற்கு என்ன கட்டளை கொடுக்கிறீர்களோ அதை அப்படியே நிறைவேற்றித் தரும் ஆற்றல் உடையது இந்த ஆழ்மனம்.

நீங்கள் ஏழையா, பணக்காரரா என்பதுபற்றி இழ்ற்கு அக்கறையில்லை. நீங்கள் படித்தவரா, படிக்காதவரா என்பது பற்றி அதற்குக் கவலையில்லை. நீங்கள் குட்டையா, நெட்டையா என்பது பற்றி அதற்குக் கவலையில்லை. ஆனால் அதற்கு சரியான முறையில் கட்டளை கொடுத்து பயன்படுத்தினால் நீங்கள் விரும்பியதை எல்லாம் அடைய அது உங்களுக்கு வழிகாட்டும்.

3.பிரபஞ்ச மனம்
பிரஞ்ச மனம் ஒரு சக்திக்கேந்திரம். அங்கு இறைவன் ஆற்றலைத் தேக்கி வைத்திருக்கிறான். இறைப் பேராற்றல் என்னும் அந்த சக்தி இறைவனின் குழந்தைகளான மனிதர்கள் தாங்கள் விரும்பியதை எல்லாம் அடைய, ஆழ்மனத்தின் மூலம் தகுந்த கட்டளை கொடுத்து, அவர்கள் அந்த சக்தியுடன் தொடர்பு கொண்டு கேட்கும்போது வேண்டுவது எல்லாம் கிடைக்கும்படி செய்கிறது.

எனக்கு முன்னால் இருக்கும் நண்பரைப் பார்த்து, இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் செய்து வருகிற வணிகத்தில்; தொழிலில் நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். அதற்குரிய ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. திறமை இருக்கிறது என்று நான் கூறினால், அதற்குக் கருத்தேற்றம் என்று பெயர். என்னுடைய கருத்தை அவர் மனத்தில் ஏற்றுகிறேன் என்று பொருள்.

அதே நண்பர், எனக்கு ஆற்றல் இருக்கிறது, திறமை இருக்கிறது இன்னும் 5 ஆண்டுகளில் எனது வணிகத்தில் என்னால் மிகப்பெரிய வெற்றிகளைப் பெறமுடியும். என்னால் சாதிக்க முடியும் என்று திரும்பத் திரும்ப சொல்வாரானால் அதற்குப் பெயர் சுயகருத்தேற்றம்.

இப்படி மீண்டும் மீண்டும் ஆழ்மனத்திற்கு கட்டளை கொடுக்கும்போது நம் ஆழ்மனம் அது குறித்து சிந்திக்க தொடங்குகிறது.

# வாழ்க்கையை மாற்றிக் கொள்ள விரும்புவோர், வெற்றிபெற விரும்புவோர், சாதிக்க விரும்புவோர் மறக்கக்கூடாத வார்த்தை சுயகருத்தேற்றம்
முடிவெடுக்கும்போது அடைந்தே தீரவேண்டும் என்ற வைராக்கியத்தோடு முடிவெடுத்து இறங்கிய செயல்களில் வெற்றி மட்டுமே கிடைக்கிறது என்பதை உணர வேண்டும்.

# எந்தச் செயலில் இறங்கும்போதும் நடக்கும், முடியும் என்ற எண்ணத்தோடு ஈடுபடுபவர்கள் வெற்றியே பெறுகிறார்கள்.

# தகுந்த உதட்டசைவோடு, உணர்ச்சிபூர்வமாய், திட்டமிட்ட சொற்களில், எதிர்பார்ப்புணர்வோடு கொடுக்கும் சுய கருத்தேற்றமும், எதை அடைய விரும்புகிறீர்களோ அதை அடைந்துவிட்டதாக மனச்சித்திரம் பார்த்து வருவதும், உரிய காலத்தில் சரியான பலனைக் கொடுக்கும்.

வெற்றி நிச்சயம்👍🏾

நற்பவி