கார்ப் பற்றிய முக்கியமான மூன்று வார்த்தை பிரயோகங்களோடு இந்த அத்தியாயத்தை ஆரம்பிப்போம்.

​மேக்ரோ
பகுதி – 3
கார்ப் பற்றிய முக்கியமான மூன்று வார்த்தை பிரயோகங்களோடு இந்த அத்தியாயத்தை ஆரம்பிப்போம்.
1. டோட்டல் கார்ப்

2. ஃபைபர்

3. நெட் கார்ப்
இதில் ஃபைபர் என்று சொல்லப்படும் நார்ச்சத்து கார்பில் ஒரு அங்கம். உண்மையில் அது undigested carbohydrate என்று சொல்லப்படுகிறது. அதாவது செரிக்கப்படாத கார்ப். அது செரிக்கப்படாததால் அதிலிருந்து கலோரிகள் எதுவும் கிடைப்பதில்லை. ஆகவே நம்முடைய பேலியோ டயட்டில் ஃபைபரை நாம் சேர்க்கப்போவதில்லை. ஒரு உணவுப் பொருளில் இருக்கும் மொத்த கார்பிலிருந்து ஃபைபரைக் கழித்து வரும் நெட் கார்பை மட்டுமே இனி கார்ப் என்று எடுத்துக்கொள்ளப்போகிறோம்.
ஆனால், இந்த நெட் கார்ப் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதற்கு கொழுப்புணவுக்கு எல்லோரும் பழகியிருக்க வேண்டும். ஆகவே, முதன்முதலில் டயட் ஆரம்பிப்பவர்கள் தங்களுடைய கணக்கிற்கு டோட்டல் கார்பையே எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புணவிற்கு உடம்பு பழகுவதற்கு (இதை ஃபேட் அடாப்டேஷன் பீரியட் அல்லது கீடோ அடாப்டேஷன் பீரியட் என்று சொல்லலாம்) நான்கிலிருந்து ஆறு வாரங்கள் ஆகலாம். அதன் பின் நெட் கார்பை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கீழே நீங்கள் வாசிக்கப்போகும் கார்ப் கணக்குகள் நெட் கார்பில் தான் இருக்கும்.
முதலில் நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகள் வகைகளில் சிலவற்றின் கார்ப் கணக்குகள் என்ன என்று பார்க்கலாம். இவை எல்லாம் 100 கிராமிற்கு கணிக்கப்பட்டுள்ளன. F என்பது Fat P என்பது Protein C என்பது Carb. உதாரணமாக 100 கிராம் காலி ஃப்ளவரில் 0.3 கிராம் ஃபேட், 1.9 கிராம் ப்ரோட்டீன், 3 கிராம் கார்ப் இருக்கின்றன என்று அர்த்தம்.
காலி ஃப்ளவர் – 0.3F, 1.9P, 3C

கேரட் – 0.2F, 0.9P, 7.2C

பீட்ரூட் – 0.2F, 1.6P, 7.2C

ப்ரோக்கலி – 0.4F, 2.8P, 4.4C

கீரை – 0.4F, 2.9P, 1.4C

குடை மிளகாய் – 0.2F, 0.9P, 2.9C

பூசணிக்காய் – 0.1F, 1P, 6.5C

கத்தரிக்காய் – 0.2F, 1P, 3C

வெண்டைக்காய் – 0.2F, 1.9P, 5.8C

பாகற்காய் – 0.18F, 0.84P, 2.3C

சுரைக்காய் – 0F, 0.6P, 2.9C

புடலங்காய் – 0.3F, 0.5P,  2.5C

பரட்டைக்கீரை (Kale) – 0.9F, 4.3P, 5.2C

முட்டைக்கோஸ் – 0.1F, 1.3P, 3.5C

காளான் – 0.5F, 1.5P, 3.2C

டர்னிப் க்ரீன்ஸ் – 0.2P, 1.1P, 0.9C

தக்காளி – 0.2F, 0.9P, 2.7C

வெங்காயம் – 0.1F, 1.1P, 7.3C

பச்சை மிளகாய் – 0.2F, 2P, 7.5C

சராசரி காய்கறிகள் – 0.3 1F, 6P, 4.2C
இந்த லிஸ்ட்டிலிருந்து என்ன தெரிகிறது? 300 கிராம் வெண்டைக்காய் ஒரு நேரம் சாப்பிட்டீங்கன்னா 3 x 5.8 = 17.4 கிராம் கார்ப் ஆகுது. 250 கிராம் சுரைக்காய் சாப்பிட்டீங்கன்னா 2.5 x 2.9 = 7.25 கிராம் கார்ப் ஆகுது. இப்படி கணக்கு போட்டு ஒரு நாளுக்கு 45 கிராமுக்கு கீழே இருக்கும்படி சாப்பிட்டால் நல்லது.
பால் பொருட்களைப் பார்க்கலாம்.
பால் – 3.1F,  3.1P, 4.7C

தயிர் – 3.1F, 4P, 6.2C

பனீர் – 22.8F, 13.6P, 2C
150 எம் எல் பால்ல ரெண்டு நேரம் காப்பியோ இல்லை டீயோ போட்டு குடிச்சீங்கன்னா என்ன ஆகும்? 3 x 4.7 = 14.1 கிராம் கார்ப் ஆச்சு. அதனால என்ன, என்னுடைய 45 கிராம் மேக்ரோக்குள்ளே தானே இருக்குன்னு நீங்க நினைப்பீங்க. ஆனா பாலில் இருப்பது லேக்டோஸ் என்று சொல்லப்படும் சுகர். அது நல்ல கார்ப் இல்லை. அதனால தான் க்ரூப்ல பாலை முடிந்த வரை தவிருங்கள் என்று சொல்றாங்க. தயிரில் 6.2 கிராம் கார்ப் இருக்கு. 300 எம் எல் தயிர் குடிச்சீங்கன்னா 18.6 கிராம் கார்ப். இதுவும் சுகர் கார்ப். ஆனா, வெஜிடேரியன்களுக்கு வேற புரதம் சோர்ஸ் கம்மியா இருக்கிறதுனால சாப்பிடலாம். மற்றபடி இது ப்ரோபையாடிக் என்பதனால் குடலுக்கு நல்லது. இதுவே கெஃபிரா உபயோகிச்சீங்கன்னா, அந்த கெஃபிர் கிரெய்ன்ஸ் என்று பாலில் இருக்கும் லேக்டோஸை தின்கிறது என்பதால் கெஃபிர் தயிரில் சுகர் கார்பின் தாக்கம் கொஞ்சம் குறையும். ஆகவே, தயிர் சாப்பிடவேண்டும் என்றால் கெஃபிர் தயிராக குடிப்பது நல்லது.
நட்ஸ்களில் எவ்ளோ கார்ப் இருக்குன்னு பார்க்கலாம். முதல்ல நம்ம க்ரூப்ல சிபாரிசு பண்ணும் பாதாமை பார்க்கலாம்.
பாதாம் – 49F, 21P, 22TC 12FB 10NC
22 கிராம் டோட்டல் கார்ப் இருந்தாலும், 12 கிராம் ஃபைபர் இருக்கு. அதனால அது கணக்குல வராது. ஆக, 100 கிராம் பாதாம் சாப்பிட்டாலும் 10 கிராம் நெட் கார்ப் தான் கணக்குல வரும். இதை நாம ஒரு நேர முழு உணவா சிபாரிசு பண்றோம். கணக்கு மிகச்சரியா வருதா?
அப்புறம் எல்லோருக்கும் முந்திரி சாப்பிடணும்னு ரொம்ப ஆசை. அதைப் பார்க்கலாம்.
முந்திரி – 44F, 18P, 30TC, 3.3FB, 26.7NC
100 கிராம் முந்திரிப்பருப்பு சாப்பிட்டாலே 26.7 கிராம் நெட் கார்ப் வருது. பாதி கோட்டா இதிலேயே முடிஞ்சு போயிடுது. ஆக, ஆரம்பத்தில் உடல் எடையைக் குறைக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது சரிப்பட்டு வராது. இன்னும் பல நட்ஸ்களைப் பற்றி பார்க்கலாம்.
வால்நட் – 65F, 15P, 14TC, 7FB, 7NC

பிஸ்தா – 45F, 20P, 28TC, 10FB, 18NC

மகடாமியா – 76F, 8P, 14TC, 9FB, 5NC
பாதாமில் இருப்பதை விட வால்நட்டில் புரதம் சற்று குறைவாக இருந்தாலும் கார்ப் அதையும் விட கம்மி. பிஸ்தாவில் கார்ப் அதிகம் 18 கிராம். மகடாமியா எக்கச்சக்க விலை. கீடோஜெனிக் டயட்டில் கொழுப்பு வேண்டும் ஆனால் கார்ப் மிகக்கம்மியாக இருக்க வேண்டும் புரதம் இடைப்பட்ட அளவு இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் மகடாமியா பக்கம் போகலாம்.
அசைவ ஐட்டங்கள் எதிலும் கார்ப் கிடையாது. முட்டையில் கூட மிக மிக குறைவான அளவே (ஒரு முட்டையில் 0.6 கிராம் மட்டுமே) உள்ளது. ஆகவே அசைவ உணவுகள் கார்ப் பட்டியலில் வரவே வராது. அதனால தான் பேலியோ உணவு எடுக்க விரும்புபவர்களிடம் அவர்கள் அசைவம் சாப்பிடுகிறவர்களாக இருப்பின் எளிதில் எடையைக் குறைத்து விடலாம் என்று சொல்கிறோம்.
இங்கே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் உங்களுக்கு ஒரு வழிகாட்டி போல தான். பல காய்கறிகள் அல்லது ஐட்டங்கள் விடுபட்டிருக்கலாம். அவற்றை இணையத்தில் இனி நீங்கள் சுலபமாக தேடிவிடுவீர்கள். உங்களுடைய ஸ்மார்ட் போனில் carb in almonds என்று எதைத் தேடுகிறீர்களோ அதை எழுதினால் போதும். உடனே விடை காட்டும். விடை கிடைக்காத ஐட்டங்களுக்கு கொஞ்சம் மெனக்கெட்டால் போதும் கிடைத்து விடும். கூகிளில் ஸ்மார்ட் போன் உபயோகித்து எப்படி தேடுவது என்று சில ஸ்க்ரீன்ஷாட் போட்டிருக்கிறேன். அது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
இனி உங்கள் உணவு 45 கிராமுக்குள் இருக்குமாறு திட்டமிடுவது சுலபம் என்று நினைக்கிறேன். தற்பொழுது நீங்கள் சாப்பிடுவது மொத்தம் எத்தனை நெட் கார்ப் வருகிறது என்று கொஞ்சம் கணக்குப் போட்டுவிட்டு, அதை எப்படி 45 ஆக குறைக்கலாம் என்று திட்டமிட்டால் நீங்களும் கேவ்மேன் தான்.
டயாபெடீஸ், ப்ரீ டயாபெடீஸ், மற்றும் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் அதிகமாக இருப்பவர்கள் (உடல் பருமனாக ஏழெட்டு வருடங்களுக்கு மேல் இருப்பவர்கள்) தங்களின் கார்ப் இண்டேக்கை 20 க்கும் கீழே குறைப்பது மிகவும் நல்லது.
இனி அடுத்த பகுதியில் புரதம் பற்றி பார்க்கலாம்.
பகுதி 4 : https://www.facebook.com/groups/tamilhealth/permalink/461189174071567/
பகுதி 2: https://www.facebook.com/groups/tamilhealth/permalink/458784734312011/

​மூட்டுவலி தீர…

​மூட்டுவலி தீர…

********************
பொதுவாக மூட்டுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

அதில் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை ஒரு காரணமாக உள்ளது.
இதனைக் குணப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவ

முறையினில் ஏராளமாக உள்ளது.
மருந்துகள் :

1 -முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி

ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து

சூப் செய்து சாப்பிடவும்.

இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும்.
2 -வாயு சூரணம் :

சுக்கு -50 -கிராம்

மிளகு -50 -கிராம்

திப்பிலி -50 -கிராம்

சீரகம் -50 -கிராம்

ஏல அரிசி -25-கிராம்

இவைகளை லேசாக வறுத்து இடித்து பொடி செய்து

கொள்ளவும்.

இதில் காலை, மாலை -உணவிற்கு முன் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவும்.

உடலில் சகல வாயுப் பிரச்சனைகளும் தீரும்.பசி

நன்கு எடுக்கும்.மூட்டு வலி ,குதிக்கால் வலி தீரும்.
இதற்கு மேற் பிரயோகமாக முந்தய பதிவில் குறிப்பிட்ட

“வாத நாராயணன் தைலம்”செய்து தடவலாம்.

============================================================
வாத நாராயணன் -Delonix elata – வாத மடக்கி தைலம் செய்முறை
வாத நாராயணன் -Delonix elata

இதன் வேறு பெயர்கள் :-

வாதரக் காய்ச்சி, வாத மடக்கி, வாத நாசினி
இதன் இலையை அரிசி மாவுடன் சேர்த்து அடை போல் சுட்டு

உண்ணலாம்.வாரம் 3-முறை பயன்படுத்தலாம். இதனால் வாத வலி,மூட்டு வீக்கம்,குத்தல்,குடைச்சல் தீரும்.
இதன் இலைச்சாறு 1-அவுன்ஸ் அளவு குடித்து வர இரண் டொரு முறை மலம் கழியும் வாத குடைச்சல்,வீக்கம்,வலி தீரும்.
நீரில் இதன் இலையை போட்டு கொதிக்க வைத்து குளிக்க உடல் வலி,அலுப்பு தீரும்.
வாத மடக்கி தைலம் செய்முறை :
1 – வாத மடக்கி இலைச்சாறு – 1-லிட்டர்

2 – நயம் விளக்கெண்ணை – 1-லிட்டர்

3 -சுக்கு – 40 – கிராம்

4 – மிளகு – 40 – கிராம்

5 – திப்பிலி – 40 – கிராம்

6 – வெண் கடுகு – 10-கிராம்
மேற் குறிப்பிட்ட 4-சரக்குகளை வாத மடக்கி இலைச்சாறு விட்டு அரைத்து எண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.
இதனை இரவு படுக்கும் போது 2-டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிடவும்.காலையில் மலம் ஓரிரு முறை கழியும்.
இதனால் தீரும் நோய்கள் :-

வாத ரோகம்,கீல்வாயு,குதிக்கால் வலி,முடக்கு வாதம், நடுக்கு வாதம்,நரம்புத் தளர்ச்சி,கை கால் குடைச்சல், நரித்தலை வாதம் முழங்கால் முட்டி வீக்கம் போன்ற அனைத்தும் தீரும்.

உயர் ரத்த அழுத்தம் உதாசீனம் வேண்டாம்!

​Do not ignore high blood pressure!
உயர் ரத்த அழுத்தம் உதாசீனம் வேண்டாம்!
📌 மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை பறிபோவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு மூல காரணங்களில் ஒன்றாக இருப்பது உயர் ரத்த அழுத்தம்.
📌 உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பு பிரதானமான ஒரு காரணம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பது முதுமொழி. அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, மானம், ரோஷம் அதிகரிக்க வேண்டும் என்று உப்பை உணவில் அள்ளிப் போட்டுக்கொள்வது, குளிர்பானத்தையும் பாக்கெட் பழச்சாறையும் அதிகம் குடிப்பது உள்ளிட்ட காரணங்களால் உப்பு நம் உடலில் தப்பாட்டம் ஆட ஆரம்பித்துவிடுகிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை :
🏃 45 நிமிடங்கள் அல்லது 3 கி.மீ நடைப்பயிற்சி.
🏃 30 நிமிட உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல்.
🏃 25 நிமிடங்கள் யோகாவில் கூறிய வணக்கமும் ஆசனங்களும் செய்வது.
🏃 20 நிமிடங்கள் தியானம்.
🏃 6 – 7 மணி நேரத் தூக்கம். இதை மற்றும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கும் உணவு வகைகள் :
🍛 முருங்கைக்கீரையை நீர் நிறையவிட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோலச் செய்து, காலை உணவுடன் பருகலாம்.
🍛 மதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர்ப் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம்.
🍛 வெந்தயத் தூள், கறிவேப்பிலைப் பொடியை சுடு சாதத்தில், முதல் உருண்டையில் பிசைந்து சாப்பிடலாம்.
🍛 கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்தது என்பதால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பைத் தடுக்க உதவும்.
🍛 உணவில் மஞ்சள் தூள், லவங்கப்பட்டையை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது. இவை இதயத்துக்கு இதம் அளிப்பவை.
🍛 வேகவைக்காத சின்ன வெங்காயம், வேகவைத்த வெள்ளைப் பூண்டு இரண்டும் அன்றாடம் உணவில் இடம் பெறட்டும்.
🍛 ஆரம்பத்தில் இருந்தே முறையான வாழ்வியலும், சரிவிகித உணவும், வருமுன் காக்கும் மருத்துவமும் இருந்துவிட்டால் உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கக்கூடியதே!

அடிமைத்தனத்தை வேரறுப்போம்”

​”அடிமைத்தனத்தை வேரறுப்போம்”
எவன் ஒருவன் தன்னுடைய பாரம்பரியம் ,கலாச்சாரம்,கல்விமுறை ஆகியவற்றை மறந்து ,அடுத்தவனுடைய கலாச்சாரத்தை(உணவு,உடை,வாழ்கைமுறை,கல்வி)பின்பற்றும் வரை  அவன் அவர்களுக்கு அடிமையாவது மட்டுமில்லாமல் பலவிதமான நோய்களுக்கும் ஆளாகி அற்பாயுளில் மடிய வேணடிய நிலைமைதான் வரும் , 

இனியாவது நம்முடைய பாரம்பரியத்தை பின்பற்றுவோம் பிறகு பாருங்கள் அவர்கள் நமக்கு அடியாவது மட்டுமல்லாமல்  நம்மிடம் பிச்சை கேட்பார்கள் ,
முதலில் நாம் செய்ய வேண்டியதும் மிக முக்கியமானதும் உணவுமுறை மாற்றம்தான் ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் ஒருவித இரசாயனம் கலந்துள்ளது ,இந்த இரசாயனமானது மூளையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள மனோன்மணி தாய் என சித்தர்களால் புகழ்ந்து கூறப்படும்  பீனியல் கிளான்ட் சுரப்பியை மழுங்க செய்துவிடும் ,இந்த சுரப்பி மழுங்கி விட்டால் சிந்திக்கும் ஆற்றலை மனிதன் இழந்து விடுவான் ,குரும்பை ஆடுகளை போல மாறி எவன் எதை கூறினாலும் அதை அப்படியே நம்பி அவன் பின்னால் சென்று அவதிக்கு ஆளாவான் ,
அந்த உணவுமுறை பட்டியல் இதோ

பிஸ்கட்

சாக்லட்

மைதா உணவு

மிட்டாய் வகையறாக்கள்

கடையில் விற்கும் திண்பண்டங்கள்

வெள்ளை சர்க்கரை

பாக்கட் உணவு பண்டம்

பாக்கட் பால்,தயிர்

ஜெர்ஸி பசுவின் பால் 

பிராய்லர் கோழி,முட்டை

ஆங்கில காய்கறிகள்(கேரட் பீட்ரூட் முட்டைகோஸ் காளிபிளவர் மற்றும் பல)

ஆங்கில பழங்கள்(ஆப்பிள் ஆரஞ்சு மற்றும் பல ,(உலகிலேயே அதிக சத்துள்ள பழமாக தேர்ந்தெடுக்கப்படடுள்ளது நிற்க  மேலே பச்சையாகவும் உள்ளே சிவப்பாகவும்  சுரைக்காய் வடிவில் அமைந்துள்ள நம்நாட்டு பழமான  சிவப்பு கொய்யாதான் )

கடை உணவு

துரித உணவு

பேல் பூரி வகையறாக்கள்

அனைத்துவிதமான டூத் பேஸ்ட்டுகள்(இயற்கைமுறை என கூறிக்கொள்ளும் ஆயுர்வேதா பேஸ்ட் உட்பட)

சால்ட் உப்பு(குறிப்பாக அயோடின் கலந்த உப்பு)

கடை பலகாரங்கள்(ஸ்வீட் காரம்)

நூடுல்ஸ் (மிகவும் அபாயகரமானது)

சேமியாக்கள்

கடை மாவு பொடிகள்

வெள்ளை அரிசி

பாக்கட் மசாலா பொடிகள்(மஞ்சள் தூள் ,மிளகுதூள் மற்றும் பல)

சுத்திகரிக்கப்பட்ட எண்ணைகள்(சன் பிளவர் ஆயில் உட்பட)

காபி,டீ

வெளிநாட்டு போதை பொருட்கள்(விஸ்கி பிராந்தி மற்றும் பல)

வெளிநாட்டு குளிர்பானங்கள்(கோக்,பெப்ஸி மற்றும் பல)

சோப்,சேம்பூ(ஆயுர்வேத தயாராப்பு உட்பட)

பாக்கட்டில் பதப்படுத்தப்பட்ட தானியங்கள்

இதையெல்லாம் கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்.

அடுத்து நாம் எதையெல்லாம் உண்ணவேண்டும் என்ற பட்டியல்.

(தொடரும்)

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ்.கோபாலகிருஷ்ணன்

கோவை

9894285755.

​முருங்கை இலைப் பொடி

​முருங்கை இலைப் பொடி தேவையானவை: முருங்கை இலை – 1 கப், வெள்ளை எள்ளு, உளுத்தம் பருப்பு – தலா 1/4 கப், சிவப்பு மிளகாய் – 10, பூண்டு – 5 பற்கள், புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: முருங்கை இலையைச் சுத்தம்செய்து, கழுவி நிழலிலே வெள்ளைத் துணியில் போட்டு உலர்த்த வேண்டும். வெயிலில் காயவைத்தால், பச்சை நிறம் நீங்கிவிடும். முருங்கை இலை மொறுமொறுப்பான பதத்துக்குக் காய்ந்த பின்னர், தவாவில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, மிளகாய், வெள்ளை எள்ளு, பூண்டு, புளி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், காய்ந்த முருங்கை இலையுடன் வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்துப் பொடியாக அரைத்தால், முருங்கை இலைப் பொடி தயார். இட்லி பொடிக்குப் பதிலாக இதைத் தொட்டுச் சாப்பிடலாம். பலன்கள்: இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன. பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் எல்லோருக்கும் ஏற்றது. சருமத்துக்கு நல்லது. ரத்தச்சோகையைத் தீர்க்கும். கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட இந்தப் பொடியை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

​இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்

​இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ்.
 பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!
* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.
* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்
* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.
* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.
* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.
* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.
* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.
* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.
* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.
* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

​நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்!…

​நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்!…
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்”
இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 
75 வயதிலும் 25 வயது இளைஞர் போல் உற்சாகமாக உழைத்து வந்த நம்மாழ்வாரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் பேசிய போது…
”எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக் கொண்டே இருப்பேன். 
உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று… பசி வந்து சாப்பிட வேண்டும், 
இரண்டு… தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்.
மூன்று… சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்.
நான்கு… தூக்கம் வந்து தூங்க வேண்டும்.
இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.
தினமும் காலையில் கம்பு, தினை மாவு, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து கஞ்சிவைத்துக் குடிக்கிறேன். இந்தக் கஞ்சி விஷம் இல்லாதது. அதாவது, ரசாயனம் இல்லாதது. கரும்புக்கு ரசாயனம் இடுவதால் வெல்லத்தில் ரசாயனம் இருக்கிறது. 
பனை மரத்தில் ஏறி நம் ஆட்கள் இன்னும் பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதனால்தான் பனை வெல்லம் சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது.
பகல் வேளையில் ரசம் அல்லது மோர் மட்டுமே சேர்த்துக் கொஞ்சமாக சாதம் சாப்பிடுகிறேன். இடையில் காய்கறி ரசம். இரவில் இரண்டு அல்லது மூன்று இட்லி மட்டுமே ஆகாரம். பசிக்காவிட்டால் சாப்பிடுவது இல்லை.
இதுதான் என்னுடைய சாப்பாட்டு அட்டவணை.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் சாப்பிடுவது இல்லை. அதிகபட்சமாக நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவேன். 
இல்லாவிட்டால் பழங்கள், கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் மட்டுமே என் உணவு. காபி, டீ சாப்பிடுவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.
ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் அளவு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களையே இன்றைக்கு மக்கள் சாப்பிடுகிறார்கள்.
நோயோடு பலரும் வாழ்வதற்கு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஒரு முக்கியமான காரணம்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் நன்றாக இருக்கும். உடல், மன ஆரோக்கியத்துக்கு இயற்கை ஒரு பெரிய வரப்பிரசாதம். செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும்.
இதை ஒரு சிகிச்சைமுறையாகக்கூட மருத்துவர்கள் சொல்வார்கள். தாவரங்களிடமும் செல்லப் பிராணிகளிடமும் அன்பு செலுத்திப் பாருங்கள். அதன் மகத்துவம் புரியும்” என்றவரின் பேச்சு மெள்ள இன்றைய இளைஞர்களின் புகை, மதுப் பழக்கம் நோக்கிச் சென்றது.
”மது, புகை வியாபாரிகள் தங்களது லாபத்துக்காக இளைஞர்கள் மீது இந்தப் பழக்கத்தைத் திணிக்கிறார்கள். வருங்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்கள், மது – புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரலையும் குடலையும் கெடுத்துச் சீரழிகிறார்கள். 
இதன் தொடர்ச்சியாகச் சமூகச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் சிக்கல் என்று எல்லாத் தரப்பிலும் பிரச்னைகள் குவிகின்றன. இதை அனைவரும் சேர்ந்து ஒருமித்துக் கண்டிக்க வேண்டும்.
 ‘உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் நாம் செய்யக் கூடாது’ என்ற உறுதியான சுயக் கட்டுப்பாடு ஒன்றே இதுபோன்ற தீய பழக்கங்களின் பிடியில் சிக்காமல் நம் சமூகத்தை காக்கும்.
‘இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்’
– என்கிறார் வள்ளுவர்.
அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும்.
இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 
பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்படி வரும் வியாதி?
எல்லாமே கலைதான்!
நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். 
ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.
உணவு, நீர், காற்று… இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.
நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. 
மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.
எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு. நான் நாள் தவறாமல் யோகாசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்கிறேன்.
முதுகெலும்பை நேராக வைத்திருக்கும் வஜ்ராசனமும் செய்வேன். இவைதான் என் ஆரோக்கிய ரகசியம்” என்று தனது வெண்தாடியை நீவியபடி பளிச்செனச் சிரித்தார் பசுமை நாயகன்!
இயற்கை வேளாண்மை ஞானி நம்மாழ்வார்.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

​நைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்

​நைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்

 
மனிதனின் கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்று சக்கரம். இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் மனிதன் கால்நடையிலிருந்து வாகனத்திற்கு தாவினான். இன்றைக்கு இருக்கும் சாதாரண பைக்குகள்,கார்கள் முதல் ரோடு ரெயில்கள் என்று சொல்லப்படும் 30 க்கும் மேற்பட்ட சக்கரங்களை கொண்ட பிரமாண்டமான சுமை இழுக்கும் லாரிகள் வரை ரப்பர் கொண்டு உருவாக்கப்பட்ட டயர்கள் தான் வாகனத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட வைக்கின்றன. இந்த டயர்களின் உள்புறத்தில் காற்று அடைக்கப்பட்ட டியூப்கள் இருக்கின்றன. என்ன தான் ட்யூப்லெஸ் டயர்கள் வந்து விட்டாலும் கூட இன்றும் சொகுசான பயணத்திற்கு ட்யூப் பொருத்தப்பட்ட டயர்கள் தான் பொருத்தமானதாக கருதப்படுகின்றன.
இந்த ட்யூப்களில் வழக்கமாக சாதாரண காற்று தான் அடைக்கப்படுகிறது. கம்ப்ரசர்களின் மூலம் சுற்றுப்புற காற்று பிடிக்கப்பட்டு டயர்களில் நிரப்பப்படுகிறது. பல லட்சங்கள் கொடுத்து கார்கள் வாங்கினாலும் பத்து ரூபாய்க்கு காற்று நிரப்பாவிட்டால் கார் இம்மியளவு கூட நகராது. ஆனால் இப்படி நிரப்பப்படும் சாதாரண காற்றை வாகனங்களுக்கு பயன்படுத்துவது பொருத்தமானது தானா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. காரணம், இந்த சாதாரண காற்று (ஆக்சிஜன்) வாகனங்கள் இயங்கும் போது, ஓடும் போது கடுமையாக சூடாகி விடுகின்றன. இப்படி வெப்பமடையும் போது இந்த காற்று டயர்களில் உள்ள நுண்துளைகளில் வழியே மிகமிக மெதுவாக வெளியேறிக் கொண்டே இருக்கிறது.

வாகனத்தை நாம் புதிதாக வாங்கும் போதே டயர்களின் ஏர் பிரஷர் எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நாம் என்ன தான் அவர்கள் சொல்லிய அளவில் காற்றை நிரப்பி வைத்தாலும், மேலே சொன்ன காரணப்படி டயரிலிருந்து காற்று வெளியேறி விடுவதால் வாகனத்தின் தயாரிப்பாளர்கள் சொன்ன ‘ஏர் பிரஷர்’ எப்போதும் டயர்களில் இருப்பதில்லை. வாகனத்தயரிப்பாளர் கூறிய படி போதிய காற்று டயர்களில் இருக்கும் பட்சத்தில் தான் வாகனம் எந்த பிரச்சனையும் இல்லாமல் பனிச்சறுக்கில் சறுக்குவது போல் எளிதாக ஓடும். பஞ்சர் ஆன வாகனத்தை சிறிது தூரம் கூட நகர்த்த முடியாது. அதாவது ட்யூப்பில் முழுமையாக காற்று இல்லாத பட்சத்தில் வாகனம் இம்மி கூட நகருவதில்லை. 
அது போல் வாகனத்தயாரிப்பாளர் சொல்லியபடி காற்று இல்லாமல் குறைவாக இருக்கும் நிலையில் வாகனத்தின் இயங்கு நிலை எங்கோ ஒரு இடத்தில் குறைந்து போகின்றது என்று தானே அர்த்தம். 

ட்யூபில் மிகமிக குறைந்த அளவு காற்று குறைபாடு ஏற்படும் போது இந்த இயங்கு குறைபாடு நமக்கு பெரிதாக தெரிவதில்லை. ஆனால் ஆணித்தரமாக சொல்லப் போனால் இந்த காற்று குறைபாடு வாகனத்தின் ஏதோ ஒரு உந்துசக்தியை எங்கிருந்தோ குறைக்கிறது என்று தான் பொருள். இப்படி கூடுதலாக தேவைப்படும் உந்து சக்தியை பெற, வாகனத்தின் எரிபொருள் அதிகமாக செலவழிக்கப்படுகிறது. இதனால் எரிபொருள் நமக்கே தெரியாமல் வீணாக செலவழிக்கப்படுகிறது. இப்படி காற்று குறைவான டயரால் இது மட்டுமா பாதிப்பு?
டயரின் பட்டன் வேகமாக தேய்கிறது. காற்று குறைவான டயர்களால் வாகனம் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதிகமான இழுவைத்திறன் என்ஜினுக்கு போகும் போது என்ஜினின் ஆயுள்காலமும் குறைகிறது. மேலும் இதனுடன் தொடர்புடைய பல்வேறு உதிரிபாகங்களும் தேய்வடைந்து விரைவில் பழுதாகிவிடுகின்றன.
பொதுவாக வண்டி ஓடும் போது டயர்கள் படுபயங்கர வெப்பமடையும். இந்த வெப்பம் ட்யூப்களில் நிரப்பப்பட்டிருக்கும் காற்றில் உள்ள காற்று அணுக்களில் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். டயரின் வெப்பம் டயரை தாண்டி ட்யூயை நெருங்கும் போது ட்யூப்பில் இருக்கும் காற்று அணுக்கள் வெப்பத்தால் விரிவடைகின்றன.இதனால் மேலும் அந்த அணுக்கள் சூடாகிவிடுகின்றன. நீண்ட தூரம் ஓட்டி வந்து நிறுத்தப்பட்ட காரின் டயர்களை தொட்டு பார்க்கவே முடியாது. அந்த அளவு சூடாக இருக்கும்.இதற்கு காரணம் காற்று அணுக்கள் சூடாகி இருப்பது தான். 
இப்படி அணுக்கள் சூடாகி விரிவடையும் போது ஒரு கட்டத்திற்கு மேல் இவை விரிவடைய முடியாமல் வெடித்து சிதறுகின்றன. அதாவது ட்யூப் காற்றின் அழுத்தத்தை தாங்க முடியாமல் வெடித்து விடுகிறது. ஆளில்லாத இடங்களில் இப்படி நடந்தால் நமது பயணம் குலைந்து எரிச்சலை ஏற்படுத்தி விடும். டயர் பஞ்சர் பார்க்கும் நபர்களை அழைத்து வந்து சரி செய்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.
ஆக…இந்த பிரச்சனைகள் எல்லாம் நமது வாகனத்திற்கு வராமல் இருக்க வேண்டும் என்றால், வாகனத்தின் டயர்களில் நிரப்பப்படும் காற்று எளிதாக வெப்பத்தினால் ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகாத ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி நிரப்பப்படும் காற்றின் அணுக்கள் டயரில் ஏற்படும் வெப்பத்தை ஈர்த்து சூடடையக் கூடாது. எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். இது தான் தீர்வு.
இப்படி ஒரு காற்று தான் தற்போது வாகனங்களுக்கு நிரப்பப்பட்டு வருகிறது. சென்னை, மும்பை,பெங்களுரு உள்ளிட்ட நகரங்களில் இந்த காற்று பரவலாக நிரப்பப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற நகரங்களில் இது பற்றி அவ்வளவாக தெரியவில்லை. ‘நைட்ரஜன் ஏர்’ என்று கூறப்படும் இந்த காற்றின் அனுகூலங்களை பார்க்கலாம். நைட்ரஜனின் இயல்பு குளிர்ச்சியாக இருப்பது. இது எங்கு இருக்கிறதோ அந்த இடத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதை வைத்து கீழே உள்ள பயன்களை படியுங்கள்.

1. சாதாரணமாக ட்யூப்பில் அடைக்கப்படும் பிராணவாயுவான காற்று ட்யூப்பிலிருந்து நுண்துளை வழியாக கசிந்து கணக்கிட இயலாத வகையில் மிகமிக நுண்ணிய அளவில் வெளியேறிக் கொண்டே இருக்கும். காரணம் இந்த பிராணவாயுவான ஆக்சிஜன் அணுவானது மிக மிக சிறிய அணுவால் ஆனது. அதனால் ட்யூபின் நுண்ணிய துளை வழியே வெளியேறும் தன்மை கொண்டது. ஆனால் நைட்ரஜன் அணுக்களுக்கு இந்த தன்மை கிடையாது. காரணம், நைட்ரஜன் அணு அளவில் பெரியது. அதனால் நைட்ரஜன் ட்யூப்பிலிருந்து கசிந்து வெளியேறுவதில்லை. இதனால் ட்யூபில் ஒரு முறை நிரப்பப்பட்ட காற்று பல மாதங்களுக்கு அப்படியே சீரான அளவில் ட்யூபில் இருந்து கொண்டே இருக்கும்.

2. நைட்ரஜன் அணுவானது சுற்றுப்புற வெப்பத்தை ஈர்த்துக் கொள்வதில்லை. இந்த தன்மையால், ட்யூப்பில் நிரப்பப்படும் நைட்ரஜன் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் டயர்கள் வெப்பமடையாது. வெப்பமடையாத காரணத்தால் டயர்கள் தேய்வதில்லை. இதனால் தேவையில்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே டயர்,ட்யூப்களை மாற்ற வேண்டிய அவசியம் வராது. டயர்,ட்யூப் மற்றும் என்ஜனின் ஆயுள்காலம் அதிகரிக்கும்.

3. சாதாரண காற்றில் எப்போதும் கண்ணுக்கு தெரியாத அளவிலும் உணரமுடியாத வகையிலும் சற்று ஈரப்பதம் இருக்கும். இந்த ஈரப்பதமானது டயரின் ஓரத்தில், அதாவது டயரின் ஓரங்களை இணைத்திருக்கும் ஒரு வட்ட வடிவமான இரும்புக்கம்பியை மெல்ல மெல்ல அரித்து விடும். ஆனால் நைட்ரஜன் காற்றில் ஈரப்பதம் கிடையாது. இதனால் டயரின் இணைப்பான கம்பி வளையம் எந்த சேதமும் அடையாமல் டயரை பாதுகாக்கும்.

4. நைட்ரஜன் ட்யூப்பை விட்டு வெளியேறாத காரணத்தால் வாகனம் எப்போதும் துல்லியமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் மைலேஜீம் நன்றாக கிடைக்கும். என்ஜின் சுமை இல்லாமல் இயல்பான திறனுடன் இயங்கும்.

5. நல்ல வேகத்தில் சாதாரண காற்று நிரப்பப்பட்ட டயர் வெடிக்கும் போது, வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தறி கெட்டு ஓடி எங்காவது முட்டிக் கொண்டு நிற்கும். அதாவது சாதாரண பிராணவாயுவின் அணுக்கள் மிகுந்த சூட்டை அடைந்திருக்கும் நிலையில் அது வெடிக்கும் போது பலத்த வீரியத்துடன் நாலாபக்கத்திலும் சிதறும். ஆனால் நைட்ரஜன் வாயுவுக்கு அந்த அளவு அழுத்தம் இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் ட்யூப் வெடித்தால் கூட வாகனம் தறிகெட்டு ஓடாது. அங்கேயே நின்று விடும்.

6. சாதாரண காற்று நிரப்பட்ட வாகனத்தை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஓட்டும் போது வண்டியின் டயர்கள் படுபயங்கரமான சூட்டை அடையும்.சென்னையிலிருந்து மதுரைக்கு கிளம்பி செல்லும் போது எங்காவது ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்துவார்கள். நீங்கள் அந்த பஸ்ஸின் டயரை தொட்டுப்பாருங்கள். இரும்பு உலையில் கைவத்தது போல் இருக்கும்.

7. ஆனால் நைட்ரஜன் நிரப்பப்பட்ட வாகனத்தில் டயர்கள் எவ்வளவு தூரம் ஓடினாலும் பெரிய அளவு சூடு இருக்காது.

நைட்ரஜன் வாயுவால் என்ன வகையான சேமிப்பு கிடைக்கும் என்று ஒரு கணக்கீடு செய்துள்ளார்கள். இதோ….

நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட வாகனம் சாதாரண ஆக்சிஜன் வாயு நிரப்பபட்ட டயர் உடைய வாகனத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு எளிதாக பஞ்சர் ஆவதில்லை. அதாவது நைட்ரஜன் வாயு நிரப்பப்படும் போது வாகனம் பஞ்சர் ஆவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைந்து விடுகிறது.

நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட வாகனத்தில் 5 முதல் 6 சதவீதம் எரிபொருள் சேமிப்பு கிடைக்கிறது.

ஆக….இந்தியாவில் ஓடும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அனைத்திலும் நைட்ரஜன் காற்றை நிரப்பி தான் ஓட்ட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் டயர்,ட்யூப் மற்றும் இயந்திர உதிரிபாகங்களின் அனாவசியமான தேய்மானம் குறைந்து இயற்கையை பாதுகாக்கலாம். டயர்கள், ட்யூப்களுக்காக அதிக அளவு ரப்பர் இறக்குமதி செய்யப்படுவது குறைக்கப்படும். எரிபொருள் வீணாக செலவாகாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

இந்தியா முழுவதும் ஓடும் வாகனங்களில் சரியான அளவில் டயர்களில் காற்று நிரப்பப்படாமல் ஓட்டப்படுவதால், நாளொன்றுக்கு நாட்டில் ஓடும் வாகனங்களால் 2 லட்சம் லிட்டர் அளவுக்கு எரிபொருள்களான டீசல், பெட்ரோல் வீணாகிறதாம். 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலையை வைத்து கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த அளவு இழப்பு சாதாரண காற்றை வாகனத்தில் சரியான அளவில் வைக்காததால் ஏற்படுகிறது. இது எவ்வளவு பெரிய இழப்பு?

இன்றே உங்கள் வாகனத்திற்கு நைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்.இயற்கையை காப்பாற்றுவோம். கூடவே நமது வாகனத்தையும் நம்மையும்!

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

​🌼சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்
🌼திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.
🌼நீங்கள் எத்தனை கோடி ,

கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,
🌼நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.

தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?

அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். 
🌼ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.

இதை தவறாது செய்து முடித்தால் ,உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி ,

உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. 
🌼அப்படிப்பட்ட ,ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,

நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்

மட்டற்றமகிழ்ச்சி…….
🌼தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே )

ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
🌼உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,

அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.
🌼இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,

வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்

படித்தாலும்,

ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
🌼காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..

இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….

தெரியவில்லை!.. 
🌼ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,

வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
🌼செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.

தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான

பலன்களையும், உங்கள் நியாயமான

அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்

வழிபாடுதான்.
🌼உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்

உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான

சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான

ஜீவ ராசி – காக்கை இனம்.
🌼குடும்பஒற்றுமைவேண்டும்

என்றுநினைக்கும்சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.

தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,

தங்களிடம்பாசம்

உள்ளவர்களாகத்திகழ இந்த

காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
🌼திறந்தவெளியில்தரையைத்

தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள்.
🌼அங்கேவாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,

ஏழு,

ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடி

அளவுஎடுத்துவைத்து,
🌼காக்கைகளை “கா…கா…’

என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.

அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்

பறந்துவரும்.
🌼அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.

வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.

அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள்
🌼 “கா…

கா…’

என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.

அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,
🌼அந்தவாழை இலையில் பொரி,

பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,

வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
🌼இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.

மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)

காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
🌼இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்

திருப்திப்படுத்தியதாவு ம்

கருதுகிறார்கள்.
🌼காக்கை சனிபகவானின்வாகனம்.

காக்கைக்குஉணவுஅளிப்பது

சனிக்குமகிழ்ச்சிதருமாம்.
🌼காக்கைகளில்நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,

அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.
🌼காக்கையிடம்உள்ளதந்திரம்வேறு

எந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.

எமதர்மராஜன்காக்கைவடிவம்எடுத்துமனிதர்கள்வாழுமிடம்சென்றுஅவர்களின்நிலையைஅறிவாராம்.
🌼அதனால்காக்கைக்குஉணவு

அளித்தால்

எமன்மகிழ்வாராம்.எமனும் 
🌼சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,

காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில்எமனும்சனியும்

திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.

தந்திரமானகுணம்கொண்டகா
🌼காலையில்நாம்எழுவதற்குமுன்,

காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.

நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.
🌼வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்

அதற்குஉடனேஉணவிடவேண்டும்
🌼எனவே,

காக்கைவழிபாடுசெய்வதால்
🌼சனிபகவான்,

எமன்மற்றும்முன்னோர்களின்

ஆசீர்வாதத்தினைப்பெற்று

மகிழ்வுடன்வாழலாம்🌼🌼

​A MUST TRY!!!!!!!          ALZHEIMERS’ EYE TEST

​A MUST TRY!!!!!!!          ALZHEIMERS’  EYE TEST
(I love this part.. It’s absolutely amazing!)
Count every  ”  F  ” in the following text:
FINISHED  FILES ARE THE RE

SULT OF YEARS OF SCIENTI

FIC STUDY COMBINED  WITH

THE EXPERIENCE OF YEARS…  

(SEE  BELOW)

HOW MANY ? 

  

3….4….
WRONG,  THERE ARE  6  —  no joke.

READ IT AGAIN !

Really, go Back and Try to find the  6 F’s before you scroll down.

The reasoning behind is  further down.

The brain cannot  process “OF”.
Incredible  or what? Go back and look again!!
Anyone who counts  all 6 “F’s” on the first go is a genius.
Three  is normal, four is quite rare.
Send this to your  friends. 

It will drive them crazy!!:👍