மாடும் விவசாயியும்

ப்படித்ததில் ரசித்தது…..  😊👌😎
வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி.

காளைக்கு கஷ்டந்தெரியக்கூடாதென்பதற்காக

அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.
மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத்தொழில்லநீதான் முன்னாடி நான் பின்னாடிதான்.

முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார்.
அடடா.. இந்த மனிதஜாதிதான் எவ்வளவு மேலானது

என்று நினைத்து சிலிர்த்துப்போனது காளை.
விவசாயி தொடர்ந்தார்.

நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி.
அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி எனக்கு பாதி.
காளைக்கு தலைச்சுற்றியது.எவ்வளவு நேர்மை..!

பாதிக்குப்பாதி பங்குதர யாருக்கு மனசுவரும்..!
பாதிப்பாதின்னா எப்படி பங்குவைக்கலாம்?நீ முன்னால போறதால முன்னால கிடைக்குறது உனக்கு. பின்னால கிடைக்குறது எனக்கு. சரியா? என்றார் விவசாயி.
முன்னால வர்றது எல்லாமே எனக்கா..!

பெருமிதமாய் பார்த்தது காளை.
விதைவிதைத்து

நாற்றுநட்டு சிலகாலத்தில் பச்சைப்பசேலென்று மாறியிருந்தது வயல்.

மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில்.

விவசாயியை பார்த்தது.
முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு.

இதுல அப்புறமா ஒன்னு வரும்.

அதுமட்டும் எனக்கு.

சரியென்று தலையாட்டியது காளை.
கொஞ்சநாட்களில் நெற்கதிர்கள் குதிரைவால்போல

விளைந்து தரைபார்த்துக்கிடந்தன.
அறுவடைநாள் வந்தது.

முதலில் வந்த வைக்கோல் காளைக்கு.

பின்னர்வந்த நெல் விவசாயிக்கு.
மாடு கோர்ட்டுக்கா போகமுடியும்..?

பாகப்பிரிவினையில் அநீதியுள்ளதென்று பரிதாபமாய் பார்த்தது காளை.

கவலைப்படாதே நெல்லிலும் பங்குதர்றேன்.

அதிலும் நமக்கு பாதிப்பாதி.

சோகத்துடன் தலையாட்டியது காளை.
நெல்லை உலரவைத்து

அரைத்துப்புடைத்ததும்

உமியும் தவிடும் முன்னால் வந்தது.

அது காளைக்கு.

பின்னால்வந்த முத்துமுத்தான அரிசி முழுமையும் மனிதனுக்கு.

இந்த பங்கீட்டிலும் நியாயமில்லையென்று கண்ணீர்விட்டது காளை.
அழுவாதே.இந்த அரிசியிலும் உனக்கு பாதி எனக்கு பாதி.

.. சரியா? என்றார்

 விவசாயி.
அதற்கும் சரியென்று தலையாட்டிய அந்த வாயில்லா ஜீவன்,

அரிசியை நோக்கிச்சென்றது.
பொறு.,,,,அரிசியை சோறாக்கி, அதில் முதலில் வருவது உனக்குதான்.

அடுத்துவருவதுதான் எனக்கு.

சோகத்துடன் தலையாட்டியது காளை.
அரிசியை சோறாக்கி வடித்தபோது

முதலில் வந்த சோற்றுக்கஞ்சி காளைக்கு.

அடுத்துவந்த சோறு மனிதனுக்கு.

காளை முரண்டுபிடித்தது.
இந்தமுறை,

முன்னால மனிதனுக்கு

பின்னால மாட்டுக்கு என்று ஒப்பந்தத்தை மாற்றும்படி கெஞ்சியழுதது.
சரியென்று ஏற்றுக்கொண்ட விவசாயி அப்படியே செய்தார்.

பொங்கல் திருவிழா வந்தது.
முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.

அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்…😅🙏👍

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.
உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.
1)   அர்த்த தோஷம்

2)   நிமித்த தோஷம்

3)   ஸ்தான தோஷம்

4)   ஜாதி தோஷம்(இது நீங்கள் நினைப்பது போல் அல்ல பதிவைபடியுங்கள்)

5)   சம்ஸ்கார தோஷம்    
 அர்த்த தோஷம்
பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.
உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.
மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா,என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார்.
பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார்.
தன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார்.
வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.
இது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.

நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.
 நிமித்த தோஷம்
அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம்.
அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை.

உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.
பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர், “அம்மா, நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார்.
அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும்.

நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.
 ஸ்தான தோஷம்
அடுத்தது ஸ்தான தோஷம். எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.

அதுமட்டுமின்றி கழிப்பறை, மருத்துவ மனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.
துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன முயன்றான். ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.
எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார்.

உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.
 ஜாதி தோஷம்
அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.

சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.

ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.
தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.
 சம்ஸ்கார தோஷம்
அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.
ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம்.

அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன.

தட்டுகள் உரிய முறைப்படி கழுவப் படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.
மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது. அதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.
ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

ஞானம் பெறுவதில் தியானம் என்ன வகையான பங்கு

ஞானம் பெறுவதில் தியானம் என்ன வகையான பங்கு வகிக்கிறது?

இதில் தியானமே அடிப்படை. என் மொத்த வாழ்க்கையின் சாரமே இதுதான்.
அது சாட்சி பாவத்துடன் (witness) இருப்பதே.
நிகழும் அனைத்திலும்- மூன்று கட்டங்களிலும்.
1. முதல் கட்டம் உடலின் செயல்கள் அனைத்திலும் சாட்சியாக இருப்பது. நடக்கும் போது நீங்கள் விழிப்புணர்வுடன் நடக்க வேண்டும்.
நான் என் கையை விழிப்புணர்வுடன் அசைக்கிறேன். விழிப்புணர்வில்லாமல் என்னால் நகர்த்தவும் அசைக்கவும் முடியும்..
இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் பார்க்க முடியும்.
விழிப்புணர்வுடன் செய்யும் போதும் விழிப்புணர்வு இல்லாமல் செய்வதையும்.
விழிப்புணர்வுடன் செய்யும் போது அங்கே பதற்றமே இல்லை.
அதில் ஒரு கருணை ஒரு அழகு ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.
ஒவ்வொரு உடல் செயல்மீதும் நாம் சாட்சியுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் உடல் செய்கைகளில் இயல்பாக சாட்சியுடன் இருந்து பழக்கமாகும் போது நீங்கள் உங்கள் உடலை தனியானதாக பார்ப்பீர்கள்.
வேறு ஒருவரோ சாலையோரத்தில் நடப்பது போன்று நீங்கள் ஒரு குன்றின் மேல் அமர்ந்து அதை பார்ப்பது போன்று.
2. அடுத்து இரண்டாவது கட்டம்
நீங்கள் உங்கள் மனதை பார்க்க ஆரம்பியுங்கள்.
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள்
எந்த மதிப்பீடும் இடாமல் எவ்வித தீர்ப்பும் சொல்லாமல்.
சும்மா அசிரத்தையாக பெரிய முக்கியத்துவம் தராத பாவத்துடன், சாலையோரத்தில் நின்று கொண்டு வாகன்ங்கள் சென்று கொண்டிருப்பதை பார்ப்பது போல்.
இப்போது ஒரு ஆச்சரியம் நிகழும்
. நீங்கள் மேலும் மேலும் ஒரு சாட்சியாக மட்டும் இருந்து உங்கள் எண்ணங்களை பார்க்கும்போது எண்ணங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
90 சதவீதம் சாட்சி 10 சதவீதம் எண்ணம்… 100 சதவீதம் சாட்சி 0 சதவீதம் எண்ணம்.
சரியாக இந்த இட்த்தில் மூன்றாவ்து கட்ட்த்திற்கு நகர வேண்டும்.
இப்போது நீங்கள் உங்கள் உணர்வுகளை உங்கள் மன நிலையை கவனியுங்கள்.
இவைகள் மிகவும் ஆழமாக நுண்மையாக மறைந்திருப்பவை. நீங்கள் உங்கள் உணர்வுகளுக்கு சாட்சியாக கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது………உணர்வீர்கள் அது தான் உங்கள் ”இதயம்”.
பின் நான்காவது நிலை தானாகவே நிகழும். அந்த நிலையை நீங்கள் எடுக்க வேண்டியது இல்லை. முயற்சி தேவையில்லை.
முதல் மூன்று கட்டங்கள் நீங்கள் செய்ய வேண்டியது நான்காவது கட்டம் என்பது ஒரு பரிசு.
மூன்றாவது கட்டம் நிறைவாகும்போது.. திடீரென்று ஒரு நாள் ஒரு பெரிய தாவல் உங்கள் உள்ளுணர்வில் உங்களுக்குள் நிகழும்.
எல்லாம் மறைந்து உங்கள் உள்ளுணர்வு மட்டும் மிச்சம் இருக்கும்.
உள்ளுணர்வை மட்டுமே உணர்வீர்கள். அறிதலை மட்டுமே அறிவீர்கள்.
பின் மிகவும் முழுமையான அமைதி. ஆனால் அந்த அமைதி வெறுமையானதல்ல.
முழுவதும் ஒளி நிரம்பியது. முழுவதும் இனிய வாசம் நிரம்பியது.
முழுவதும் இன்பமயமானது. இதைத்தான் நான் ஞானம் அடைதல் என்பேன்.
தியானம் ஒரு வழி. ஞானம் அடைதல் அதன் வெற்றி.
— ஓஷோ —💐🍇🍀🍊🍁🍂🍋🍏🍐🐚🌈🔥💐

🍃மனதை எவ்வாறு காலியாக்குவது?🍃

🍃மனதை எவ்வாறு காலியாக்குவது?🍃

எண்ணங்கள் வரும் போகும்
அவை வந்து செல்லட்டும்
அது பிரச்சனை அன்று நாம் அதில் ஈடுபடக்கூடாது

தனித்து விலகி நிற்க வேண்டும்
அவை வந்து போவதை கவனி
மெளனமாக இரு

எண்ணங்கள் தாமே கழன்று போகும்
நாம் எண்ணங்களோடு ஒத்துழைத்தால் மட்டுமே அவை நம்முள் இருக்கும்

அவற்றோடு சண்டையிட்டாலும் அவை இருக்கவே செய்யும்

ஈடுபாடு,எதிர்ப்பு ஆகிய இரண்டுமே ஒத்துழைப்புதான்

மனதை காலியாக்கி வெறுமையாக்க வேண்டும்

எண்ணங்கள் எச்சரிக்கையோடு வெறுமனே நோக்கு அமைதியாக

கட்டாயபடுத்தாமல்
இயல்பாக ஆகாயத்தை பார்ப்பது போல
வெறுமனே பார்த்தல்

இப்படி
எதிர்பார்ப்பில்லாத தன்மையால்
மனதின் செயல்பாடு குறையும்
மனம் தானே காலியாகிவிடும்.
– குரு-

✔ Forword news: dharmapuri and krishnagiri

✔ Forword news: dharmapuri and krishnagiri reviews: Yesterday collector, ceo, deeo, deo, Apo, DCs, school hm’s visited by state team, state team members, all AEEOs, Supervisors and BRTEs were attended SPD sir review meeting.

SPD sir review points

1. Quality education.

2. Strictly Follow teaching methods like SABL, SALM & ALM.

3.Use TLM while teaching a lesson.

4. Notes of lesson for 5th – 8th compulsory.

5. Work done register for 1-4th.

6. Regularly follow two lines, four lines, book back exercise, class work & home work note book.

7. SLM kit usage.

8. Supplementary usage.

9. Science kit usage.

10. Childwise Remedial plan by the class teacher based on periodical assessment report.

11. Use projector, computer, TV, DVD, CD to teach lessons.

13. Training implementation.

14.Evaluation methodology CCE should be follow like FA(a), FA(b) .

15. BRTEs should observe the class taken by the teacher and write the report about the class in visit note.

16.He has read AEEOs visits & Brtes visits in front of all and gave instructions how to write visits in visit book. He instructed write all the above points clearly with individual teacher name and student…

17. ACHIEVEMENT exam like NAS will conducted by our SPD on January 1st week… So practice the content like application oriented multiple choice questions….

18.SPD and team will visit January month again.So kindly follow all the points which is mentioned above.

Be ready for that.

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் …

சம்பவம்-1 👇👇👇👇👇👇

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.”அப்பா இங்கே பாருங்கள்,”..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!”

அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்….

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

“அப்பா மேலே பாருங்கள், ‘ மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்…

இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

“நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்”

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்…

“நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்…

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்.”

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

‘உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.

சம்பவம்-2 👇👇👇👇👇👇👇👇

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்….

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,…

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்…

உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்….

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3 👇👇👇👇👇👇

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்.”

ஒரு கட்டு கீரை என்ன விலை….?””

“ஐந்து ரூபாய்”

ஐந்து ரூபாயா ….??? மூன்று ரூபாய் தான் தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ”

“இல்லம்மா வராதும்மா”

அதெல்லாம் முடியாது.

மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

“மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா” என்கிறாள்”

முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்”… என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

“சரிம்மா உன் விருப்பம்” என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

“என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல…?” என்று அந்த தாய் கேட்க”

இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்”

“சரி. இரு இதோ வர்றேன்.” என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். ” இந்தா சாப்ட்டு போ”

என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

“ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா…..?

என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

“வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா” என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம் ……

சம்பவம் 4 👇👇👇👇👇👇👇

மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்…

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்…

இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது…

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்…

கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்…

ஆனால்

உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.

அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.

வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

” Be Positive Always”

கர்மா…

கர்மா…

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும்
ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம்
ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க
வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே
இப்பதிவு .

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினைஎனப்படுவது.

அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க
விதிவிலக்குகளும் உண்டு.

அதுதான்
“பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்தி விடுவது”. இதை புரிந்து கொள்ள
வேண்டுமென்றால்

ஒரு உதாரணத்தைபார்த்துவிடுவோம்.

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது
கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.

இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில்
பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
வினை என்று எடுத்துக்கொள்வோம்.

அந்த
இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து
ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும்.

எப்படியென்றால்
நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது
உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர
வேண்டும் என்பது ஒரு விதி செயல்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால்
அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த
கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு
மாடோ அல்லது வண்டியோ உங்களை
குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே
கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.
ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது
மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம்

. இங்கேயும் அதே
கர்மவினைதான் செயல்படும்.

அதாவது நீங்கள்
அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள்
கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வர
வேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும்.
ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு.
எப்படியென்றால் நீங்கள் அதே தெரு
வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை
அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது
சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.

இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட
வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
உள்ள சேற்றை துடைப்பதற்காக
தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில்
அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித
சேதமும் ஏற்படவில்லை.

நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த
கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு
ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால்
அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்றது.

இதைதான் ” தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது ” என்பர்
பெரியோர்கள்.

அந்த பொருளுக்கும்
உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும்
நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
செயலை கொண்டே வினையும், வினையை
கொண்டே எதிர்வினையும், அந்த
எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும்
நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை. இதைத்தான் ” தீதும் நன்றும்
பிறர் தர வாரா ” என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் “நான்”
என்பதை விட்டுவிட வேண்டும்.

ஆன்மீகத்தில்
இதற்கு பெயர் பூரண சரணாகதி.
அந்த விதிவிலக்கு என்பது கூட
இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்
சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
மட்டும்??
எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம்
என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி
நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?
எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?
கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற
எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான
வினைகள்தான் தற்போது நீங்கள்
அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான
புரிதல் ஏற்படும். புரிதல் ஏற்படும்போது
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம்
வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை
நீங்கள் அடையும்போது, உங்களின் 95%
கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்
அனுபவித்து விடுவார். காரணம்!! நீங்கள்
அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த
அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.
இவன்
உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த சித்தர் அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை
கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண
அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில்
சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்
தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த சித்தர்எதோ ஒரு
செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.
முடிவில் இவர்களும் அந்த ஞானியின்
நிலைக்கே வந்துவிடுகின்றனர்.

அதனால் தான்
ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!
நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
கேட்க நினைப்பது கூட சிறியதாக தான்
இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ
கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு
அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும்.

இதில் பூரண சரணாகதி என்பது இனி
அனைத்தும் உன் செயல் என பற்றுகளை
துறப்பதுவே ஆகும். “நான்” என்ற
எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் “நீ” என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.
அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட
எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்
கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு
செயலும் அவன் செய்வதாகவே இருக்க
வேண்டும்.

இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை
அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
வேண்டும்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
மாறிக்கொண்டே இருக்கும்.

அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல்
உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய
வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில்
“ஒரே ஒருமுறை” தான் இருக்குமே தவிர
ஒவ்வொரு முறையும் இருக்காது.

ஏனென்றால்
அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில்
அத்தனையும் அடங்கியும் விடும்.

இதை
இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான
கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
தீர்வை நாடுகின்றோம்.

உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம்
அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி
அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.
எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே
ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.
இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர். எப்படியென்றால் உங்கள்
அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.

உங்கள்
தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்
ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு
பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால்
அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!! எனவே உங்கள்
அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற
உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும்
நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

மன முதிர்ச்சி என்றால் என்ன?

மன முதிர்ச்சி என்றால் என்ன?

இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.

 * What is Maturity of Mind ? *

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.

1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.

2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

10. Trying to keep our peace in our mind without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

11. Understanding the difference between the basic needs
and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

12. Reaching the status that happiness is not connected
with material things.

*இந்த பதிவை பொறுமையாக வாசிக்கவும்*

*இந்த பதிவை பொறுமையாக வாசிக்கவும்*
*குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு…*

*நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?*

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள். இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.
அவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்
‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர். இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.
அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.
ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு. பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கிலமொழியறிவுக்கும் கணிதத்திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை. படிப்புதான
்.
‘சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது. படிப்பு படிப்பு படிப்புதான்’
‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். ’தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. அங்கே பிள்ளைகளைச் சேர்க்க ,அமைச்சர் களும் நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள். பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’
அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை. ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.
அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது. அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’
‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’
‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை. படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேசநினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னை வாழச்சொல்கிறார்கள்’
‘நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா? முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’
அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது’ என்றேன். அவர் புரிந்துகொள்ளாமல் ‘நன்றிகெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்
‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக்கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.
வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான். அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.

நாளை முக்கியம்தான், இன்று அதைவிட முக்கியம்.

Vethathiri Maharishi

Vethathiri Maharishi
Question-Answer

16.11.2017
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும் ❓ கேள்வி: நல்லறத்தைக் கொண்டு பிறருக்கு நன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமைடைந்து விடுகிறார்கள். பிறருக்குத் தீங்கையே விளவிக்கும் சிலர் பொருள், புகழ், செல்வாக்கு பெற்று நீண்டகாலம் வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன சுவாமிஜி?
✅ பதில்: வினைப்பயன் என்ற அளவில் பார்த்தால் பாரம்பரிய பதிவின் காரணமாகச் சிலர் நீண்ட நாள் வாழ்க கூடியவர்களாக இருக்கிறார்கள் .அவர்களுடைய முன்னோர்கள் 80, 90 வயது வரை வாழ்ந்திருப்பார்கள்.
அதற்கு மேலும் சிலர் தம்முடைய முயற்சியாலும், ஒழுக்கத்தாலும் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்வதும் உண்டு. உயிரைப் போக்கும் அளவுக்குக் கடுமையான நோய் வந்தால் ஒழிய அவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள்.
சிலர் பணம், புகழ், பெற்று நீண்ட நாள் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் பொறாமையால் சொல்வது. பணமும் புகழும் உடையவர் மனதில் அமைதி இருக்கின்றதா? உடலில் சுகம் இருக்கிறதா? இரவில் தூக்கம் வருகின்றதா? அவற்றைக் காத்துக் கொள்ள அவர் எவ்வளவு துன்பப்படுகிறார். இதெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது.
அதை அறிந்து கொள்ளாமல், இரண்டு கார் வைத்துள்ளார் என்பது மட்டும்தான் வெளியில் தெரியும். வெளியிலிருந்து பார்க்கும் போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல்தான் தோன்றும். மேலும் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும் ஒருவர் பொருளோடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் புகழோடு இருக்க முடியாது.
நேரில் புகழ்வதுபோல் நடிப்பவரும் அவரைக் காணாத இடத்தில் அவரை இழிவாகப் பேசுவார். மேலும் ஆயுள் நீளத்தைக் கொண்டோ, பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவற்றைக் கொண்டோ ஒருவர் புண்ணியவான் என்று நினைப்பது ஒரு மயக்கமே.
நல்லறத்தைக் கைக்கொண்டு நன்மையே செய்து வாழும் ஒருவர் துன்பப்படுவதன் மூலம் தன் பாவப் பதிவுகளை விரைவில் போக்கிவிடுகிறார். அந்த அளவில் மனம் அமைதி பெறுகிறது. மரணத்தைப்பற்றி அவர் கவலைப் படுவதில்லை.
இறைநிலை எய்த வேண்டுமென்பதே அவரது நோக்கமாக இருக்கும். அத்தகைய ஒருவர் மரணம் என்ற பெயரிலே இவ்வுலக வாழ்வை நீப்பது இயல்புதானே ஒழிய வேறில்லை.
வாழ்க வளமுடன்!
அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி