ஆரோக்கியமாக வாழ முறையான உணவு பழக்கத்தை எப்படி பின்பற்ற வேண்டும்
கண்ட நேரத்தில் கண்டபடி சாப்பிடுவது என்பது வேலைக்குச் செல்லும் பலருக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகின்றது. ஆனால் இன்றைய இளைய சமுதாயத்தினர் அநேக நேரம் கெட்ட உணவினையே தன் வாழ்க்கை முறையாக ஆக்கி வருகின்றனர்.
காலையில் தண்ணி கூட குடிக்காமல், பட்டினியாய் பள்ளி, கல்லூரி செல்வதும், இரவில் டி.வி. முன் அமர்ந்து சிப்ஸ், சமோஸா, குளிர்பானம் என விடாது உண்பதும் தான் நாகரீக வாழ்க்கை என வாழும் இளைய சமுதாயத்தினர் பலர் உள்ளனர்.
காலை உணவினை 11-12 மணிக்கு உண்பதும், மதிய உணவினை 3 மணிக்கும் இரவு உணவினை 11 மணிக்கும் என உண்பவர்கள் உள்ளனர்.
காலை உணவினை அடியோடு தவிர்த்து டீ, காபி கொண்டு சமாளிப்பவர்களும் உண்டு. இரவு ஓட்டல்களில் ஒரு மணி, இரண்டு மணி வரை உண்ணும் நாகரீக மோகமும் இருக்கிறது.
இரவு வரும் பொழுது உடல் ஓய்வெடுக்க பழக்கப்பட்ட நிலையைக் கொண்டது. ஆனால் நாம் நம்மால் எந்த நேரமும் எப்படி உண்டாலும் எனக்கு ஒன்றும் செய்யாது என்ற தவறான எண்ணத்தில் உள்ளோம். இதுவே நீரிழிவு பிரிவு 2 உண்டாகக் காரணமாகின்றது.
இத்தகு பழக்கம் எடை கூடுவதற்கு மிகப்பெரிய காரணமாக இருப்பதாக இன்றைய ஆய்வு உணர்த்துகிறது. இவ்வாறு இரவில் நேரம் கழித்து சாப்பிடுபவர்கள் நடு நிசியில் சாப்பிடுபவர்கள் இவர்களின் ஞாபகசக்தி மந்தப்படுகின்றது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனை அனைவரும் நினைவில் வைத்து இன்றிலிருந்தே உணவு பழக்க முறையினை மாற்றினாலே வருங்கால இந்தியா ஆரோக்கியமான நபர்களைக் கொண்ட இந்தியா ஆகி விடும்.
ஷிப்ட் முறையில் வேலை செல்பவர்களுக்கு முறையான நேர உணவு என்பது மிகவும் கடினம். இவர்கள் புரதச் சத்து கொண்ட ஏதாவது ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் உணவினை தவிர்க்காதீர்கள். ஒரு டீ, காபி, குளிர்பானம் இவற்றினைக் குடித்துவிட்டு உணவினைத் தவிர்க்காதீர்கள்.
பகல் உணவு என்பது 11-1 மணிவரைதான் என்பதெல்லாம் உங்களுக்கு சரிபடாது. பசிக்கும் பொழுது சாப்பிடுங்கள். ஆனால் இரவில் வெகு நேரம் சென்று சாப்பிடுவது, நடுநிசியில் சாப்பிடுவது இதனை மட்டும் தவிர்த்துவிடுங்கள்.
பல இளைய தலைமுறையினரிடம் குறிப்பாக பெண்களிடம் ஒரு பிரச்சினை இருக்கின்றது.
வைத்த உணவை தட்டினில் கிளறிக் கொண்டே இருப்பார்கள்.
கலகலப்பாக இல்லாது தனித்து இருப்பார்கள்.
மிக ஒல்லியாக இருந்தாலும் எடை கூடுவதனைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.
அடிக்கடி ஏதாவது உடற்பயிற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
உடல் வலுவிழந்து மாதவிடாய் கூட இராது.
உடல் வெளிரி, முடி வறண்டு இருக்கும்.
தனியே உண்கிறேன் என்று ஒதுங்குவார்கள்.
அசிடிடி பிரச்சனை அதிகமாய் இருக்கும்.
- இன்னும் சிலர் எடையை பற்றி பயந்து கொண்டே அதிகம் சாப்பிடுவார்கள். சில முறையில்லாத வழிகளை கையாளுவார்கள். இவர்களுக்கும் உடனடி மருத்துவ உதவி தேவை.
மூன்று நேர உணவு மூன்று சிறிய ஸ்நாக்ஸ் என்பது பொதுவில் கடைபிடிக்கப்படுகின்றது.
ஒரே நேர அதிக அளவு உணவு அல்லது சத்தற்ற உணவு என்பது கூடாது. உணவில் பழங்கள், சுண்டல் போன்றவற்றினை ஸ்நாக்ஸ் முறையில் பயன்படுத்தலாம். முழு தானிய உணவு காய்கறிகள் இவையே முறையான உணவாக பரிந்துரைக்கப்படுகின்றது.
நார் சத்து உணவும் மிக அவசியம் என்பது வலியுறுத்தப்படுகின்றது.
முறையற்ற உணவு பழக்க முடையோரின்
அறிகுறிகள் :
🌱• உடல் மெலிவதோ கூடுவதோ நன்கு தெரியும்.
🌱• மிக சீக்கிரம் பருவமடைதல்.
🌱• வயதின் அளவிற்கு மீறிய வளர்ச்சி.
🌱• உணவு கட்டுப்பாட்டினைப் பற்றி எப்பொழுதும் பேசுதல்.
🌱• திடீரென சைவ உணவுக்கு மாறுதல்.
🌱• ஐஸ்கிரீம்களை தவிர்த்தல்.
🌱• உணவுநேரத்தில் உண்ணாதிருத்தல், குறிப்பாக காலை உணவினை தவிர்த்தல்.
🌱• அதிக தண்ணீர், டயட் சோடா, காபி பருகுதல்.
🌱• வயிறு உப்பிசம், வாந்தி, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை அடிக்கடி கூறுதல்.
🌱• உணவு சாப்பிடு வதனைப் பற்றி பொய் கூறுதல்.
🌱• தன்னைப் பற்றி குறைவாய் மதிப்பிடுதல்.
🌱• முடி மெலிந்து வறண்டு இருத்தல்.
🌱• மயக்கம்.
🌱• நெஞ்செரிச்சல்.
🌱• வாயைச் சுற்றி சிவந்து இருத்தல்.
🌱• அதிக பல் சொத்தை.
🌱• வேகமாக சாப்பிடுதல்.
🌱• தனியாய் சாப்பிடுதல்.
🌱• பசிக்கும் பொழுது சாப்பிடாது இருத்தல்.
🍃• உணவு கட்டுபாடு செய்வேன் எனச் சொல்லி செய்ய முடியாது இருத்தல்.
இவை அனைத்தும் இருந்தால் மருத்துவ உதவி மற்றும் குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட நபருக்கு மிக அவசியம்.
🍃Sri Yoga & Naturopathy🍃
யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415