ஆரோக்கியமாக வாழ முறையான உணவு பழக்கத்தை எப்படி பின்பற்ற வேண்டும்

ஆரோக்கியமாக வாழ முறையான உணவு பழக்கத்தை எப்படி பின்பற்ற வேண்டும்

கண்ட நேரத்தில் கண்டபடி சாப்பிடுவது என்பது வேலைக்குச் செல்லும் பலருக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகின்றது. ஆனால் இன்றைய இளைய சமுதாயத்தினர் அநேக நேரம் கெட்ட உணவினையே தன் வாழ்க்கை முறையாக ஆக்கி வருகின்றனர்.

காலையில் தண்ணி கூட குடிக்காமல், பட்டினியாய் பள்ளி, கல்லூரி செல்வதும், இரவில் டி.வி. முன் அமர்ந்து சிப்ஸ், சமோஸா, குளிர்பானம் என விடாது உண்பதும் தான் நாகரீக வாழ்க்கை என வாழும் இளைய சமுதாயத்தினர் பலர் உள்ளனர்.

காலை உணவினை 11-12 மணிக்கு உண்பதும், மதிய உணவினை 3 மணிக்கும் இரவு உணவினை 11 மணிக்கும் என உண்பவர்கள் உள்ளனர்.

காலை உணவினை அடியோடு தவிர்த்து டீ, காபி கொண்டு சமாளிப்பவர்களும் உண்டு. இரவு ஓட்டல்களில் ஒரு மணி, இரண்டு மணி வரை உண்ணும் நாகரீக மோகமும் இருக்கிறது.

இரவு வரும் பொழுது உடல் ஓய்வெடுக்க பழக்கப்பட்ட நிலையைக் கொண்டது. ஆனால் நாம் நம்மால் எந்த நேரமும் எப்படி உண்டாலும் எனக்கு ஒன்றும் செய்யாது என்ற தவறான எண்ணத்தில் உள்ளோம். இதுவே நீரிழிவு பிரிவு 2 உண்டாகக் காரணமாகின்றது.

இத்தகு பழக்கம் எடை கூடுவதற்கு மிகப்பெரிய காரணமாக இருப்பதாக இன்றைய ஆய்வு உணர்த்துகிறது. இவ்வாறு இரவில் நேரம் கழித்து சாப்பிடுபவர்கள் நடு நிசியில் சாப்பிடுபவர்கள் இவர்களின் ஞாபகசக்தி மந்தப்படுகின்றது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனை அனைவரும் நினைவில் வைத்து இன்றிலிருந்தே உணவு பழக்க முறையினை மாற்றினாலே வருங்கால இந்தியா ஆரோக்கியமான நபர்களைக் கொண்ட இந்தியா ஆகி விடும்.

ஷிப்ட் முறையில் வேலை செல்பவர்களுக்கு முறையான நேர உணவு என்பது மிகவும் கடினம். இவர்கள் புரதச் சத்து கொண்ட ஏதாவது ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் உணவினை தவிர்க்காதீர்கள். ஒரு டீ, காபி, குளிர்பானம் இவற்றினைக் குடித்துவிட்டு உணவினைத் தவிர்க்காதீர்கள். 

பகல் உணவு என்பது 11-1 மணிவரைதான் என்பதெல்லாம் உங்களுக்கு சரிபடாது. பசிக்கும் பொழுது சாப்பிடுங்கள். ஆனால் இரவில் வெகு நேரம் சென்று சாப்பிடுவது, நடுநிசியில் சாப்பிடுவது இதனை மட்டும் தவிர்த்துவிடுங்கள்.

பல இளைய தலைமுறையினரிடம் குறிப்பாக பெண்களிடம் ஒரு பிரச்சினை இருக்கின்றது.

வைத்த உணவை தட்டினில் கிளறிக் கொண்டே இருப்பார்கள்.

கலகலப்பாக இல்லாது தனித்து இருப்பார்கள்.

மிக ஒல்லியாக இருந்தாலும் எடை கூடுவதனைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.

அடிக்கடி ஏதாவது உடற்பயிற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

உடல் வலுவிழந்து மாதவிடாய் கூட இராது.

உடல் வெளிரி, முடி வறண்டு இருக்கும்.

தனியே உண்கிறேன் என்று ஒதுங்குவார்கள்.

அசிடிடி பிரச்சனை அதிகமாய் இருக்கும்.

  • இன்னும் சிலர் எடையை பற்றி பயந்து கொண்டே அதிகம் சாப்பிடுவார்கள். சில முறையில்லாத வழிகளை கையாளுவார்கள். இவர்களுக்கும் உடனடி மருத்துவ உதவி தேவை.

மூன்று நேர உணவு மூன்று சிறிய ஸ்நாக்ஸ் என்பது பொதுவில் கடைபிடிக்கப்படுகின்றது. 

ஒரே நேர அதிக அளவு உணவு அல்லது சத்தற்ற உணவு என்பது கூடாது. உணவில் பழங்கள், சுண்டல் போன்றவற்றினை ஸ்நாக்ஸ் முறையில் பயன்படுத்தலாம். முழு தானிய உணவு காய்கறிகள் இவையே முறையான உணவாக பரிந்துரைக்கப்படுகின்றது.

நார் சத்து உணவும் மிக அவசியம் என்பது வலியுறுத்தப்படுகின்றது.

முறையற்ற உணவு பழக்க முடையோரின்

அறிகுறிகள் :

🌱• உடல் மெலிவதோ கூடுவதோ நன்கு தெரியும்.

🌱• மிக சீக்கிரம் பருவமடைதல்.

🌱• வயதின் அளவிற்கு மீறிய வளர்ச்சி.

🌱• உணவு கட்டுப்பாட்டினைப் பற்றி எப்பொழுதும் பேசுதல்.

🌱• திடீரென சைவ உணவுக்கு மாறுதல்.

🌱• ஐஸ்கிரீம்களை தவிர்த்தல்.

🌱• உணவுநேரத்தில் உண்ணாதிருத்தல், குறிப்பாக காலை உணவினை தவிர்த்தல்.

🌱• அதிக தண்ணீர், டயட் சோடா, காபி பருகுதல்.

🌱• வயிறு உப்பிசம், வாந்தி, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை அடிக்கடி கூறுதல்.

🌱• உணவு சாப்பிடு வதனைப் பற்றி பொய் கூறுதல்.

🌱• தன்னைப் பற்றி குறைவாய் மதிப்பிடுதல்.

🌱• முடி மெலிந்து வறண்டு இருத்தல்.

🌱• மயக்கம்.

🌱• நெஞ்செரிச்சல்.

🌱• வாயைச் சுற்றி சிவந்து இருத்தல்.

🌱• அதிக பல் சொத்தை.

🌱• வேகமாக சாப்பிடுதல்.

🌱• தனியாய் சாப்பிடுதல்.

🌱• பசிக்கும் பொழுது சாப்பிடாது இருத்தல்.

🍃• உணவு கட்டுபாடு செய்வேன் எனச் சொல்லி செய்ய முடியாது இருத்தல்.

இவை அனைத்தும் இருந்தால் மருத்துவ உதவி மற்றும் குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட நபருக்கு மிக அவசியம்.

🍃Sri Yoga & Naturopathy🍃

யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415

விரத முறைகள் மற்றும் உடல் நலம்

வாழ்வியல் முறையில் எவற்றைக் கடைபிடித்தால் நமது உடலைக் கழிவுகளற்ற உடலாகப் பராமரிக்க முடியும்

எந்திரத்தனமாக மூன்று வேளை உண்ணாமல்
நன்கு பசித்தபின்பு உணவு உண்பது…
மூன்று வேளையா, இரண்டு வேளையா, அல்லது ஒருவேளை உண்பதா என்பதை அவரவர்களின் பசியே தீர்மானிக்கிறது …

அடுத்ததாக நீர் என்பது உடலின் கழிவுகளை நீக்க உதவும் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர், நான்கு லிட்டர் என்று நீர் அருந்துவதைத் தவிர்த்து
தாகம் இருக்கும் போது
தேவையான அளவிற்குத் தண்ணீர் அருந்துவது … தண்ணீர் தவிர, இளநீர்
உட்பட சுவையுடன் இருக்கும் பானங்கள் அனைத்தும் உணவுப்பட்டியலில்தான் வரும் என்பதையும் புரிந்துகொள்க …

இரவுத் தூக்கம் ..
இரவு உணவை 7 மணிக்குள் முடித்துக்கொண்டு, இரவு
9 – 9:30 மணிக்குள் படுக்கைக்குச் செல்வது, அதிகாலை 3 மணி வரை உறங்குவது சிறந்தது …

உடல் என்பது எந்திரமல்ல என்பதைப் புரிந்துகொண்டு,
போதிய ஓய்வினை உடலுக்கு அளிப்பது …

மேற்கூறியவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை சிதைக்காமல் பார்த்துக்கொள்வதற்காகக் கடைபிடிக்கவேண்டியவை …

அடுத்து நமது உடலைக் கழிவுகள் இல்லாமல் பராமரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பாற்றலை வலுப்படுத்தி, விழிப்போடு வைத்துக்கொள்வதற்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் விரதம் மேற்கொள்வது ….

அனைத்து மதங்களும் ஏதோ ஒருவகையில் விரதத்தை வலியுறுத்துகின்றன …

இது நாள்வரை விரதமே இருந்து பழக்கமில்லாதவர்கள்
துவக்க காலத்தில் சமைத்த உணவினைக் கைவிட்டு, காலையில் எழுந்ததில்
இருந்து, பசிக்கும்
பொழுது பழங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு, மாலை 6 மணிக்கு மேல் கஞ்சி அருந்தி, விரதத்தினை முடிக்கலாம் …

பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பழவிரதம் எடுக்கலாம் ..

சமைத்த உணவினைக்
கைவிட முடியும் என்று நம்பிக்கை வந்த பின்பு,
பழச்சாறுகளுடன் விரதம் மேற்கொள்ளலாம் …

அதாவது பசிக்கும்பொது, விரும்பிய பழச்சாறுகள் அருந்தி, மாலையில் கஞ்சியோடு விரதத்தை முடிப்பது …

அடுத்தது நீர் விரதம்….

பசிக்கும்போதும் தாகம் எடுக்கும்போதும் சிறிதளவு நீர்மட்டுமே எடுத்துக்கொள்வது… மாலையில் பழச்சாறுடன் விரதத்தை முடித்து, இரவில் தேவைப்பட்டால் கஞ்சி எடுத்துக்கொள்ளலாம் …

அடுத்து முழு விரதம் …

காலையில் இருந்து மாலை வரை எந்த உணவும், நீரும் அருந்தாமல் இருப்பதே முழு விரதம் ஆகும்…
விரதத்தின் முழுமையான பலன்களும் இந்த முழு விரதத்தில்தான் கிடைக்கும் …
காலையில் இருந்தே உணவையும், நீரையும் கைவிட்டு, மாலையில் சற்று
நீர் அருந்திவிட்டு, பழச்சாறு அருந்தி, விரதத்தை முடிக்கலாம்… இரவு தேவைப்பட்டால் கஞ்சி எடுத்துக்கொள்ளலாம் …

இந்த விரதத்தை மேற்கொள்ளும் துவக்க காலத்தில் லேசான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, ஏற்கனெவே இருக்கும் உடல் தொந்தரவுகள் அதிகரிப்பது போன்றவை நடக்கும் …

உடலின் வியர்வை நாற்றம் கூடுவது, வெளி மூச்சு நாற்றத்துடன் வெளிப்படுவது, சிறுநீர் துர்நாற்றத்துடனும் அடர் நிறத்துடன் வெளிப்படுவது இவை உடலின் கழிவு நீக்கத்தினைக் குறிக்கிறது …

வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் மாதத்திற்கு, இரண்டு அல்லது மூன்று
முறை விரதங்களை மேற்கொண்டு கழிவுகளற்ற உடலாக நம் உடலைப் பராமரிப்பதன் மூலம்
நோய்கள் அண்டாமல் ஆரோக்கிய வாழ்வை அனைவராலும் மேற்கொள்ள
முடியும் …

இவற்றோடு உடலின் நவ துவாரங்களின் வழியாகவும், தோலின் மூலமாகவும் வெளியேறுவது அனைத்தும்
கழிவுகளே … காய்ச்சல் என்பது நோயல்ல … கழிவுகளை முறையாக வெளியேற்ற உடலைத் தயார் செய்யும்
நோயெதிர்ப்பு சக்தியின் பணியே என்பதைப் புரிந்து கொண்டு கழிவு நீக்கத்திற்கு
முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பது …

இவற்றை முறையாகக் கடைபிடிக்கும் எவரும்
நோய்கள் குறித்த, கிருமிகள் குறித்த பயமின்றி வாழலாம் ….

மலம் கழித்தே ஆக வேண்டும். தினமும்.

ஜலம் அடக்காமல் வரும்போது போக வேண்டும்.

விந்தும் நாதமும் உடம்பில் இருக்க கூடாது. அவ்வப்பொழுது வெளியேற்ற வேண்டும்.

வியர்வை வெளியேற வேண்டும் தினமும்.

கழிவுகளே நோய்களுக்கும்,
கிருமிகளுக்கும் ஆதாரம்…

🍃Sri Yoga & Naturopathy🍃

யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415

ஆறுவகைச் சுவை என்ன என்ன

ஆறுவகைச் சுவை என்ன என்ன

காரம் :

உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள் :

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு ஆகியவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது.

கசப்பு :

உடம்பிலுள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டும். சளியைக் கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள் :

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் கசப்பு சுவை மிகுதியாய் உள்ளது.

இனிப்பு :

உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள் :

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு :

இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள் :

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு :

இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள் :

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு :

ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள் :

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

🍃Sri Yoga & Naturopathy🍃

யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415

GM டயட்

ஏழு நாட்களில் உங்கள் எடையை 10 கிலோ குறைக்க வேண்டுமா

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்
உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம்.
நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.
எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.
அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.

  1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
  2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.
  3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
  4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
    ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.
  5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.
  6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.
  7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.
    இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது..
    எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.
    3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.
    5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது.

மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம்.

🍃Sri Yoga & Naturopathy🍃

யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415

சமையல் ஒரு சவாலான விசயம்

😂🤣🤣🤣சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை…

எது மேட்டர் தெரியுமா?

சமைக்குறது தான்

இன்னைக்கு சமைக்குறது;

அப்புறம் நாளைக்கு சமைக்குறது;

அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது;

சமைச்சுக் கிட்டே இருக்குறது.

ஒவ்வொரு நாளும் சமைக்கனும்,

நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கனும்,

புதுசு புதுசா சமைக்கனும்,

ருசியா சமைக்கனும்,

அது எல்லார்க்குமே பிடிக்கனும்,

உப்பு கூடிடக் கூடாது,

சோறு குழைஞ்சிடக் கூடாது,

பிடிக்காத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,

ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,

இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்..

வேஸ்ட் பண்ணிடக் கூடாது.

இருக்குற காச வச்சு சமைக்கனும்.

பட்ஜெட் இடிச்சிடக் கூடாது.

ஒவ்வொரு நாளும் விடியுறப்போ,

இன்னைக்கு என்ன வாங்கலாம்,

என்ன சமைக்கலாம்,

வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு

யோசிச்சே விடியும்.

சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் கழுவி வைக்கனும்.

இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும்.

பகல் சமைச்சத கழுவுறப்போ திரும்ப இரவுக்கும் இதையே பண்ணனுமேன்னு மனசுல யோசிக்கும்.

நாளைக்கும் முதல் இருந்து இது எல்லாமே பண்ணனும்லன்னு யோசிக்கும்.

ஆனாலும், நாளைக்கும் விடியும்.

நாளைக்கும் பசிக்கும். நாளைக்கும் சமைக்கனும்.

சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டர் இல்ல.

ஆனா..

தொடர்ந்து நாலு நாளைக்கு சமைக்குறது மேட்டர் தான்.

அதையே நாப்பது நாளைக்கு சமைச்சா?

நாப்பது வருசமா சமைச்சுக்கிட்டே இருந்தா?

சமைக்குறதுல இருக்குற சவால்கள் எல்லாம் புரியுது.

கஷ்டம் தெரியுது.

வெறுக்குது.

இவ்வளவும்,

எனக்காக மட்டும் சமைக்குறப்போ.

இதுவே இன்னும் அஞ்சு பேர்க்கு சேர்த்து சமைச்சா?

அந்த அஞ்சு பேருக்குமே வேற வேற டேஸ்ட் இருந்தா?

அந்த அஞ்சு பேருமே,

அவர்களுக்கு சமைச்சுக் கொடுக்கத் தான் நான் பிறந்ததேன் என்கிற நினைப்புல இருந்தா?

உக்கார்ந்த இடத்துல இருந்துக்கிட்டே சாப்பாட்ட கொண்டு வரச் சொன்னா?

அதுல உப்பு இல்ல,

இதுல உறைப்பு இல்லன்னு

கம்ப்ளய்ன் பண்ணா?

சாப்பிட்டு அப்படியே அதே இடத்துல விட்டுப் போனா?

நம்ம வீட்டுல நமக்காக சமைக்குறவங்கள நாம எந்த அளவுக்கு கவனிச்சிருக்கோம்?

எந்தளவு அங்கீகரிச்சிருக்கோம்?

எந்தளவு சப்போர்ட்டிவ்வா இருந்திருக்கோம்?

முப்பது வருசமா‌ அம்மா சமைக்குறாங்க.

இடையில வெளில வாங்கிக்கலாம் சொன்னா,

சமைக்கிறத தவற வேற வேலை என்ன?

அதைக் கூட செய்ய முடியாதானு பேசுவோம்,

இங்க வந்து கிண்டலா பதிவு போடுவோம்.

என் வீட்டுல மனைவிக்கு கிச்சன் எங்க இருக்குதுனே தெரியாதுனு

பதிவை போட்டுட்டு ஸ்மைலி எமோஜிஸ் வந்ததும்,

எதையோ சாதிச்ச மாதிரி, “சாப்பாடு ரெடியானு” குரல் கொடுப்பாங்க.

இதுல வீட்டில் சமைப்பதே ஆரோக்கியம்.

இப்போல்லாம் தோசைலருந்து

அதுக்கு தேவப்படற மாவு வரைக்கும் கடைல வாங்குறாங்க.

இப்போ covid புண்ணியத்துல எல்லாரும் வீட்ல சமைச்சி சாப்பிட்டு

நிம்மதியா இருக்காங்கனு போஸ்ட்டா போட்டுத் தள்ளுறாங்க!

மூணு வேளையும் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு நிம்மதியா இருப்பாங்க தான்!

ஆனா சமைக்கிறவங்க….

ஆறு நாள் அடுப்படி வேலையா இருக்கியே,

இந்தா ஒரு நாள் உனக்கு ஓய்வுனு வீட்டில யாராவது சொன்னா

யாரும் ஹோட்டல வாங்கிக்கிட்டா தேவலனு யோசிக்க மாட்டாங்க!

இதுல தோசைக்கு மாவு அரைக்குற அர்ப்பணிப்பு இருக்கே!

அதுக்கே ஆரத்தி காட்டணும்!

இன்னொரு தடவ வீட்டில சமையலைப் பத்தி பேச்செடுத்தாலோ, வெளில வாங்கி சாப்புட்றதப் பத்தி பிரசங்கம் பண்ணாலோ, மாவரைச்சு கிரைண்டர் கழுவி வச்சிட்டுத் தான் போகணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடுங்க,

அதுக்கப்பறம் நக்கலா பேச மாட்டார்கள்.

கருவறை பத்து மாசம்னா,

சமையலறை வாழ்நாள் மட்டும்.

தனக்குப் பசியில்லாத போதும், பிறர்க்காய் சமைக்கும்

ஒவ்வொரு தாய்க்கும்,

மனைவிக்கும்

சமர்ப்பணம்!🙏🙏

சுட்ட பதிவேயானாலும்
அனைத்து பெண்மணிகளுக்குமான மனக்குமுறல்🙂

பெண்மையை போற்றி வணங்குவோம்.

பெண் ஒரு மகா சக்தி.
🙏🙏🙏🙏🙏🙏🙏

குடும்பத்திற்கு நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து ஆலோசனைகள்நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து ஆலோசனைகள்

🇮🇳

குடும்ப நல வழக்குகளைக் கையாண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து ஆலோசனைகள்

1. உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம். வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள். தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம்.

2. உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள். அல்லது அவளை ஒரு தோழியாக பாருங்கள். உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல் அவன் மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து திட்டி விடாதீர்கள். ஏனென்றால் அவள் காலத்திற்கும் அதை நினைவில் வைத்திருப்பாள். தன்னை திட்டுவதற்கும், சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும் உரிமையில்லை என்று எண்ணுவாள்.

3. உங்கள் மகனின் மனைவி எப்படிப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் குணமுடையவராயிருந்தாலும் அது உங்களை பாதிக்க வேண்டாம்.அது முற்றிலும் உங்கள் மகனின் பிரச்சனை. உங்கள் மகன் முதிர்ந்தவனாகவும், மனப்பக்குவமுள்ளவனாகவும் இருப்பதால் இதை உங்கள் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

4. சில சமயம் கூட்டாக வாழும் போது வீட்டு வேலைகளை குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள் துணிகளைத் துவைப்பதற்கும் அவர்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கும் எந்த அவசியமும் இல்லை.உங்கள் மருமகள் உங்களிடம் உதவி கேட்டால் உங்களால் முடிந்தால் செய்து கொடுங்கள். பதிலுக்கு எந்த நன்றியையும் எதிர்பாராதிருங்கள். மேலும் உங்கள் மகனின் குடும்பத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.

5. உங்கள் மகன் மற்றும் மருமகள் சண்டையிடும் போது காது கேளாதோர் போல் இருந்து கொள்ளுங்கள். இளம் தம்பதியர் தங்கள் பிரச்சனைகளில் பெற்றோர் தலையிடுவதை விரும்புவதில்லை.

6. உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும் என்பது உங்கள் பிள்ளைகளை பொறுத்த ஒன்று. நற்பெயரோ, அவப்பெயரோ அது உங்கள் பிள்ளைகளையே சாரும்.

7. உங்கள் மருமகள் உங்களை கவனிக்கவும் நேசிக்கவும் அவசியமில்லை. அது உங்கள் மகனின் கடமை. இதை உங்கள் மகனுக்கு நீங்கள் புரிய வைத்திருப்பீர்களானால் உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் நல்ல உறவு அமையும்.

8. நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின் உங்கள் பிள்ளைகளை சார்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் காரியங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை தனியே சமாளித்த உங்களால் இனி வரும் காலத்தையும் பார்த்துக் கொள்ள முடியும். இன்னும் புதிய அனுபவங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.

9. உங்கள் பணி ஓய்வு காலத்தை சந்தோஷமாக வாழுங்கள். நீங்கள் சம்பாதித்த உங்கள் பணத்தை உங்கள் நலனுக்காக செலவு செய்யுங்கள். உங்கள் மகனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடவேண்டாம். இறுதியில் உங்கள் பணம் உங்களுக்கு பயனில்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

10. உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் சொத்தல்ல. அது உங்கள் பிள்ளைகளின் விலையேறப்பெற்ற பரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு:-

இந்த பத்து கட்டளைகள் நீங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல; உங்கள் நண்பர்கள், சொந்தங்கள், பெற்றோர்கள், பிள்ளைகள், கணவன் மற்றும் மனைவி எல்லோருக்கும் பகிருங்கள்…. எல்லோரும் வாழ்வில் அமைதியும் முன்னேற்றமும் பெறுவதற்கான வாழ்க்கைப் பாடமே இவைகள்.

“பொதுநலன் கருதி:”

டாக்டர் கே. கே. சொக்கலிங்கம், மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கம்..