​கிச்சன் டிப்ஸ் – 1

​கிச்சன் டிப்ஸ் – 1
* முட்டை உடைந்து தரையில் கொட்டி விட்டால், அந்த இடத்தில் சிறிது உப்பை தூவுங்கள். நாற்றம் இருக்காது.
* முட்டையை அடித்து ஆம்லெட் போடும்போது, சிறிது பால் கலந்து கடைந்து ஊற்றினால், ஆம்லெட் மென்மையாக இருக்கும்.
* மீனை சுத்தம் செய்வதற்கு முன், சிறிது நேரம், உப்பை போட்டு கிளறி வைக்கவும். இப்படி செய்வதால், மீனிலிருந்து வாடை வராது.
* மீனில் ஒமீகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இது தரமான கொழுப்பு. ஆகையால், மீன் உணவை எந்த வயதினரும் உண்ணலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த மீன் உணவை முள்நீக்கி மசித்துக் கொடுக்கலாம்.
* மஞ்சள் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு கலவையில், மீன் துண்டுகளைப் போட்டு வைத்தால், அதிக வாடை வராது.
* கையில் எண் ணெய் தடவிக் கொண்டு மீன் சுத்தம் செய்தால், கையில் வாடை இல்லாமல் இருக்கும். அல்லது சுத்தம் செய்த பிறகாவது, கையில் எண்ணெய் தடவ வேண்டும்.
* இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவிட்டால், வாடை மிகவும் குறைந்து விடும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
* இறால் நாலு நிமிடம் வெந்தால் போதும். அதற்கு மேல் வெந்தால், ரப்பரைப் போல் அழுத்தமாகி விடும். இறால் வாயு அதிகம் உற்பத்தி செய்யும். எனவே, இறால் சமைக்கும் போது, இஞ்சியும் பூண்டும் அதிகம் சேர்க்க வேண்டும்.
* கோழியின் தோல் பகுதிக்கு அடியில், அதிக கொழுப்பு படிந்துள்ளது. எனவே, கோழி சமைக்கும் போது, அதிக கொழுப்புள்ள எண்ணெய், நெய் ஆகியவை சேர்த்து தயாரிக்கக் கூடாது.

கிச்சன் டிப்ஸ் – 2
* வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு, அதை பிரிஜ்ஜில் 2, 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.
* பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் மிளகாயுடன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை போட்டு, இறுக மூடி வைக்க வேண்டும்.
* பயறு வகைகளை வாங்கியதும், அவற்றை வெறும் கடாயில் போட்டு, லேசாக சூடாக்க வேண்டும். அதன் பின், டப்பாவில் போட்டு வைத்தால், பூச்சி பிடிக்காது.
* பருப்பு ரசம் செய்றீங்களா? இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும் போது போடுங்கள். அதன் சுவை சூப்பராக இருக்கும்.
* தோசை பொடி அரைக்கும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வறுத்து, பருப்புடன் சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி செய்வதால், வாசனையாக இருப்பதுடன் எளிதில் செரிக்கும்.
* வெங்காய பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா? பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்சியில் விழுதாய் அரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். பிறகென்ன, வாசனை ஊரையே தூக்கும்.
* ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.
* முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.
* அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
* பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்
* தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.
* தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.
* துவையல் அரைக்கும் போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.
* துவரம்பருப்பை வேக வைக் கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
* வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரத்தை போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.
* பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமை கஞ்சி உண்டு வந்தால், மாதவிலக்கு ஒழுங் காக நடைபெறும்.

கிச்சன் டிப்ஸ் – 3
காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.
 காய்கறிகள் வாடிப் போய் விட்டால் கவலை வேண்டாம். பிரிஜ்ஜிலிருந்து ஜில்லென்ற தண்ணீரை எடுத்து, அதில், சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த தண்ணீரில் வாடிய காய்கறிகளைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அவற்றை எடுத் தால், அப்போது தான் வாங்கியது போன்று புத்தம் புதிதாய் தோற்றமளிக்கும்.
* பச்சை குடைமிளகாய் சில நேரம் காரமாக இருக்கும். அந்த காரத்தை போக்குவதற்கு, விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அதை சாம்பாரில் போடவோ, கறியாக வதக்கவோ செய்யலாம். புளிச்சாறு அல்லது மோரில் ஊறவைத்து சமைத்தாலும், காரம் தணிந்து விடும்.
* சிலர் பாகற்காயை வெட்டிய பின் வேக வைத்து, அந்த தண்ணீரை கொட்டி விடுவர். இவ்வாறு செய்தால், பாகற்காயிலுள்ள சத்து வீணாகி விடும். அதற்கு பதில், பாகற்காயின் மேல் முள்ளை லேசாக நீக்கிவிட்டு, இரண்டாகப் பிளந்து, பாகற்காயின் உள்ளேயும், வெளியேயும் சிறிது உப்பையும், மஞ்சள் பொடியையும் தடவி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின், அதை கழுவி உபயோகித்தால், கசப்பு குறைந்திருக்கும்.
* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.
* பெருங்காயம் கல் போன்று இருந்தால், உடைப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே, வெறும் கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து போட்டு விட்டால், தனித் தனியாக, ஆறியவுடன் டப்பியில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
* காலிபிளவர், முள்ளங்கி, டர்னிப், முட்டைகோஸ் ஆகியவற்றை வாங்கி சில நாட்களுக்கு பின் சமைத்தால், சகிக்க முடியாத வாடை ஏற்படும். இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாற்றையும், சர்க்கரையையும் கலந்து சமைக்க வேண்டும். அவ்வாறு சமைத்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
* காலிபிளவரை, சமைப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன், இலைகளை நீக்கிவிட்டு, ஒரு பிடி உப்பு கலந்த நீரில், குடை மாதிரி அமிழ்ந்திருக் கும்படி, வைக்க வேண்டும். இப்படி செய்தால், கண்ணுக்கு எளிதில் தெரியாத பூச்சிகள் அனைத்தும் நீரில் மிதந்து வரும். அதன் பின் காலிபிளவரை எடுத்து, நல்ல தண்ணீரில் கழுவி விட்டு உபயோகிக்கவும்.
* சில கத்திரிக்காய்கள் கடுப்பு குணம் கொண்டு இருக்கும். சிறிது சுண்ணாம்பு கலந்த நீரில், நறுக்கிய கத்திரிக்காய்களை, சிறிது நேரம் போட்டு வைத்து, பிறகு கழுவி உபயோகித்தால், கத்திரிக்காயின் கடுப்பு தன்மை போய்விடும்.
* தோசை சுடும்போது, தோசை கல்லிலிருந்து தோசை எடுக்க வராமல் ஒட்டிக் கொள்ளும். அத்தகைய சமயங்களில், ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, தோசை கல்லில் ஒவ்வொரு முறையும் தோசை வார்ப்பதற்கு முன் தேய்த்தால், சுலபமாக தோசை எடுக்க வரும்.

​இன்று ஏன் பலருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போகிறது? – காரணங்களும்… தீர்வுகளும்..

​இன்று ஏன் பலருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போகிறது? – காரணங்களும்… தீர்வுகளும்..
பெரும்பாலும் இன்று ஆண்களும் பெண்களும் காலம் கடந்து திருமணம் செய்துகொள்வது என்பது சாதாரணமாகிவிட்டது.  இன்றைய காலக்கட்டத்தில் நம் உணவு முறை, வாழ்வியல் முறை என்ற அனைத்தும் மாறிவிட்டது.  அதனால் குழந்தையின்மை பிரச்சினை நம்முடைய முந்தைய தலைமுறைக்கு இல்லை என்று அர்த்தம் இல்லை.  அவர்களுக்கு இன்று உள்ள அதிக எண்ணிக்கையில் இல்லை எனலாம். இன்று தோராயமாக நாற்பது விழுக்காடு அளவிற்கு இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது. இது இளம் தம்பதியரை மிகுந்த மன உளைச்சலுக்கும் பல குழப்பத்திற்கும், குடும்ப பிரச்சினைகளுக்கும் உட்படுத்தியுள்ளது. 
சமீபத்தைய ஒரு ஆய்வில், இணையத்தில் தமிழ் மக்களில் அதிகம் பேர் தேடும் ஒரு பிரச்சினை குழந்தையின்மை என்பதால், இது குறித்து முழுமையான ஒரு கட்டுரையை கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி முழுமையான தரவுகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.  எனவே மேம்போக்காக இல்லாமல், சில மருத்துவர்களை சந்தித்து தேவையான தகவல்களைத் திரட்டி, இப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் சில தம்பதியர்களின் அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டு, மேலும் சம்பத்தப்பட்ட பல நூல்களை ஆராய்ந்து, சில இயற்கை வாழ்வியல் அறிஞர் பெருமக்களின் அறிவுரைகளை பெற்று  இக்கட்டுரை  எழுதப்பட்டுள்ளது. இதை ஒரு தொடக்கமாகக் கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்வதன் மூலம், மேலும் கேள்விகளை கேட்பதன் மூலம், நம் வாசகர்களின் அனைத்து ஐயங்களுக்கும் ஒரு தெளிவு பிறக்கும். எனவே, இது யாருடையா குறையும் இல்லை, இது இன்று அனைவராலும் சந்திக்கக் கூடிய ஒரு சிறிய சிக்கல். இதற்கான முழுமையான காரணத்தை அறிந்து அதை தீர்க்க இதற்கான முழுமையான  காரணத்தை அறிந்து  வாழ்க்கையில் குழந்தைச் செல்வங்களை பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
இன்றைய சூழ்நிலையில் பணம் என்பது வாழ்க்கையின் போக்கை மற்றிவிட்டுள்ளது. முடிந்தவரை பெண்கள் முப்பது வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்வது அவர்கள் உடலுக்கும், சுக பிரசவத்திற்கும் நல்லது.  காலம் கடந்தால் அது பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது மேலும் மருத்துவர்கள் அதிக கவனத்துடன் பிரசவத்தை கையாள நேரிடும். பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப் படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக,எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். இருப்பினும்,  தவர்க்க முடியாத காரணங்களால் முப்பது வயதைக் கடந்து குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் இதை நினைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம். 
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பது என்பது பல காரணகளால் தள்ளிப்போகிறது.  இன்றைய வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கவழக்கம், பணம் சம்பாதிக்கும் வேகம், இரவு பகல் பாராமல் உழைப்பது, உடலை கவனிக்காமல் இருப்பது, மடிக்கணினி பயன்படுத்துவது, இயற்கையாக ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ உடலில் உள்ள சில பிரசச்சினைகள், ஆண்களுக்கு குறைவான உயிரணுக்கள் எண்ணிக்கை, குறைவான் தூக்கம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, கருப்பை குழாய் அடைப்பு போன்ற பல காரணங்களால் இவை தள்ளிப்போகலாம்.  மாறியிருக்கும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், திருமணமான புதிதில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுதல், எல்லை மீறிய சட்டபூர்வ மற்றும் சட்ட விரோதமான கருக்கலைப்பு, பி.சி.டி. எனப்படும் “பாலிஸிஸ்டிக் ஓவரீஸ்’ குறைபாடு, உயிரணுக்களின் எண்ணிக்கையில் உள்ள குறைபாடு, வீரியமற்ற உயிரணுக்கள், பாதுகாப்பாற்ற முறையில் செய்து கொள்ளும் கருச்சிதைவு ஆகியவையும் குழந்தை தள்ளிபோவதற்கு காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன

சரியான புரிதலும், அதை எவ்வித பதட்டமும் இன்றி அணுகும் பொறுமையும் இருந்தால் இதை முழுமையாக அறிந்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இதை தக்க மருத்துவரால் ஓரளவு என்ன பிரச்சினை, அதை  எப்படி சரி செய்வது என்பதை எளிதில் அறிந்துகொள்ளமுடியும்.
குழந்தை எதிர்ப்பார்க்கும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்களை தொகுத்துக் கொடுப்பதே இக்கட்டுரையின் நோக்கம்: 
 1. முப்பது வயதிற்கு மேல் திருமணம் ஆனவர்கள் குழந்தைப்பெருவதை தள்ளிப்போடாமல் இருப்பது நல்லது. முப்பது வயதுக்கு மேல் கருத்தரிப்பதில் நிறைய சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
 2. குழந்தைப் பேரு மருத்துவரை அணுகி விட்டமின் மாத்திரைகளை வாங்கி தினமும் சாப்பிட்டு, மேலும் உடலுக்கு தேவையான சமச்சீர் உணவுகளை சாப்பிட்டு உடலை தயார் செய்ய வேண்டும். இது விதை விதைக்குமுன் நிலத்தை பக்குவப்படுத்துவது போன்றதாகும். 
 3. தம்பதியர் காபி, டீ, புகைபிடித்தல், மது அருதுதல் போன்றவற்றை தவிர்க்கவேண்டும் அல்லது தள்ளிப்போட வேண்டும்.
 4. இறுக்கமான உடைகளை அணிவதால் உயிரணுக்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு சொல்கிறது. ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
 5. கால் மேல் கால் போட்டு உட்காருவதை தவிர்ப்பது நல்லது. உயிரணுக்கள் குறையும் வாய்ப்பு இருக்கிறது. இதை மரியாதைக்காக என்று ஒரு வாழ்வியல் தத்துவமாக நம் முன்னோர் சொல்லியுள்ளனர். அதன் உண்மையான பொருள்  உயிரணுக்களை பாதிக்கும் என்பதே.
 6. மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்தாதீர்கள்.
 7. தேவையான அளவு தூக்கம் தேவை. அதிக இரவு வேலையை எடுத்துக்கொல்லாமல் இருப்பது நல்லது.  குறைந்தது 6-8 மணி நேரம் தூக்கம் தேவை.
 8. மன அழுத்தம், மன உளைச்சல் எதுவும் இல்லாமல் மனதை மகிழ்ச்சியாக  வைத்துக்கொள்வது அவசியம்.  முடிந்தவரை எந்தவித மன உளைச்சல் தரக்கூடியவற்றை இந்தக் காலக்கட்டத்தில் தவிர்ப்பது நல்லது.  உதாரணத்திற்கு உடல் சோர்வை தரக்கூடிய கடன் வாங்குவது , வீடு கட்டுவது, வேலை மாறுவது, உறவுகளுக்குள் சிக்கல், நீண்ட பயணம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
 9. சுடுநீரில்  (Hot Water) குளிப்பதை குறைப்பது நல்லது. அல்லது அதிக சூடு இல்லாமல் குளிக்கலாம். இது உயிரணுக்கள் எண்ணிக்கையை மிகவும் பாதிக்கும்.
10.கோபம் வாக்குவாதம் போன்றவற்றை தவிர்த்து மனதை அமைதியாக வைத்திருக்கவேண்டும்.
 11. பணம் சம்பதித்துதான், வீடு கட்டித்தான், கார் வாங்கித்தான் என்று குழந்தை பிறப்பை தள்ளிப்போடாதீர்கள்.
 12. இளவயதில் திருமணம் முடிப்பதால் எந்த பிரச்சனை இருந்தாலும் எந்த சிகிச்சை செய்வதற்கும் நமக்கு காலமும், வயதும், உடலில் பலமும் இருக்கும். அதுவே 30 வயதிற்கு மேல் பல வாய்ப்புகள்  குறைந்து விடுகிறது.
 13. 30 வயதை தாண்டியவர்கள் ஒபிசிடி, சுகர், பி.பி,கொலஸ்ட்ரால் என்று ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளவும்.
 14. சாப்பாட்டு முறை வேறு மாறி விட்டது, ஜங்க் ஃபுட் அதிகம், நேரம் விட்டு  சாப்பாடு, ஒழுங்கான தூக்கமின்மை போன்றவற்றை தவிர்க்கவும்.
 15. ஆண்களில் விந்தணு குறைபாடு மற்றும் ஆண்மை குறைவு (ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். ) போன்றவை குழந்தைப்பேறின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் பிரச்சினையாகும். இதை தக்க மருத்துவரிடம் ஆலோசித்து சரிசெய்துகொள்ளவும்.
 16. சர்க்கரை நோய்க்கும் குழந்தைப் பேறு இல்லாமைக்கும் தொடர்பு  உள்ளது.  உயிரணு மற்றும் கருமுட்டை உற்பத்தியில் சமச்சீரற்ற தன்மையை சர்க்கரை நோய் உருவாக்குகிறது. ஆனால், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு குழந்தையின்மைக்கான சிகிச்சையைப் பெற முடியும். அதற்கான நவீன சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 17. அதிக அளவில் செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், டிவி பார்ப்பவர்கள் கதிர் வீச்சு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்கள் மனதளவிலும் பாதிப்படைகின்றனர். இதனாலும், குழந்தை பிறப்பு தடைப்படுகிறது என்ற தகவல் அறிவியல் ரீதியில் சொல்லப்படுகிறது.
 18. ஓராண்டு வரை முயற்சி செய்துவிட்டு பிறகு மகப்பேறு மருத்துவரை அணுகி கருக்குழாய் அடைப்பு இருக்கிறதா என்று மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்க்கவும்.
 19. தொடர்ந்து வரும் ஜுரம், அதிக வெய்யிலில் அலைவது இவை விந்தணுக்களின் உற்பத்தி, தரம், நகரும் சக்தி இவற்றை பாதிக்கும். ஏனென்றால் அதிக உஷ்ணம் ஆணுறுப்பை பாதிக்கும். உடல் உஷ்ணத்தை விட, விரைகளின் உஷ்ணம் சாதாரணமாக 2 டிகிரி குறைந்தே இருக்கும்.
19. உடல் பருமனை குறைப்பது.
20. சுற்றுப்புற சூழ்நிலையின் மாசு நச்சுப்பொருட்கள் தாக்குதலை தடுத்தல்.
 
21. எக்ஸ்ரே ஸ்கேன் போன் Radiation சிகிச்சைகளை தவிர்த்தல்.
22. சரியான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளுதல்
23. தினமும் 4 மணித்தியாலயங்களுக்கு மேல் செல் போனில் பேசுபவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
24. உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமு ம் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
25. தொடர்ச்சியாக நைட் ஷிப்ட் வேலை செய்து வந்த பெண்களில் 29 சதவீதத்தினர் வரை கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
26. வைட்டமின் பி நிறைந்துள்ள உணவுகளான பாலாடை கட்டி, முட்டை, பால், கெட்டி தயிர், தானியங்கள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.
27. ஜிங்க் உணவுகளான கடல் சிப்பிகள், எள் மற்றும் சூரியகாந்தி விதைகள், இஞ்சி, கோதுமை, இறைச்சி, டார்க் சாக்லேட், தர்பூசணி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வருவது, ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கும்.
28. செலினியம்(Selenium) நிறைந்துள்ள உணவுகளான மட்டி (Shellfish), ஈரல், மீன், சூரியகாந்தி விதைகள், நண்டுகள், இறால்கள், கடல் நண்டுகள், அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்கள் விந்தணு குறைபாட்டைத் தடுக்கும்.
29. அடிக்கடி சுயஇன்பம் மற்றும் உடலுறவு மேற்கொள்ளுதலை தவிர்க்கவும்.
 
கருவுருதலில் என்னதான் நடக்கிறது? 
மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும். உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். இது ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது.
ஆண்களுக்கான காரணங்கள் :
ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும். மேலும் கீழகண்டவற்றில் ஆண்கள் கவனமாக இருக்கவேண்டும். 
📍மன அழுத்தம் 

📍உடல் பருமன்

📍அளவுக்கு அதிகமாக குடிப்பது

📍நீரிழிவு

📍இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது

📍உடலை பராமரிக்க ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வது

📍அதிகமாக வண்டி ஓட்டுவது

📍புகைப்பிடிப்பது

📍ஜங்க் உணவுகளை சாப்பிடுவது

📍போதிய தூக்கம் இல்லாதது

📍இறுக்கமாக உள்ளாடை அணிவது

📍மொபைலை பாக்கெட்டில் வைப்பது

📍நோய்த்தொற்றுகள் இருப்பது

📍ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

📍லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வது
பரிசோதனைகள் :
ஆணின் விந்தணு பரிசோதனை அவசியம். இந்த சோதனையில் விந்தணு கொள்ளளவு, எண்ணிக்கை, நகரும் தன்மை, Morphology போன்றவை கணிக்கப்படும்.
விந்து அணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, விந்து அணுக்களின் இயக்கத் தாமதம் என இரண்டுக்குமே, உணவில் முளைகட்டிய பயறு வகைகளும், லவங்கப்பட்டை, சாதிக்காய், போன்ற நறுமணப் பொருட்களும் நிறைய சேர்க்க வேண்டும். தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரப்பருப்பு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினைகளைக் குறைக்கக் கண்டிப்பாக உதவும்.போகம் விளைவிக்கும் கீரைகள் எனச் சித்த மருத்துவம் பட்டியலிட்டுச் சொன்ன தாளி, முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஒன்றைக் கண்டிப்பாய் சமைத்துச் சாப்பிட வேண்டும். புலால் உணவைக் காட்டிலும், மரக்கறி உணவுக்கு விந்து அணுக்களை அதிகரிப்பதிலும் இதன் இயக்கத்தைக் கூட்டுவதிலும் அதிகப் பயன் உண்டு என்கின்றன இன்றைய விஞ்ஞான ஆய்வுகள்.பூனைக்காலி விதை, ஓரிதழ்தாமரை, நிலப்பனைக் கிழங்கு, முதலான பல சித்த மருத்துவ மூலிகைகள் பயனளிப்பதை இன்றைய விஞ்ஞானமும் உறுதிப்படுத்தியுள்ளது. நெருஞ்சில் முள் விந்தணுக்களின் உற்பத்தி நடைபெறும் செர்டோலி செல்கள் சிதைவைக்கூடச் சரிசெய்வது தெரியவந்துள்ளது.
பெண்களுக்கான காரணங்கள் :
பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம். 
பரிசோதனைகள் :
Ovulation சமயத்தில் தான் முட்டை உற்பத்தியாக கருத்தரிக்க ஏதுவாகும். Ovalution period தொடங்கி விட்டதா என்று அறிய பெண்ணின் உடல் உஷ்ணத்தை Thermometer ஆல் தெரிந்து கொண்டால் போதும். சாதாரண சூட்டிலிருந்து 0.9 டிகிரி தி (0.5டிகிரிc) அதிகம் தெரிந்தால் Ovulation தொடங்கிவிட்டது. என அறியலாம். இதை விட வேறு பல புதிய சாதனங்களும், சோதனைகளும் (Ultra Sonography or ovulation predicter kits) வந்து விட்டன. ரத்தத்தில் உள்ள Progesterone ம், உமிழ்நீரும் சோதிக்கப்படும். குழந்தையின்மைக்காக ஒரு மருத்துவரை ஆலோசிப்பதற்கு முன்பாக நீங்களே சரி செய்து கொள்ள வேண்டியவை.
உணவு:
நல்ல போஷாக்கான உணவுகளை உட்கொள்வது அவசியம். நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டாலே கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.
உடல் எடை :
உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாகப் பெண்கள் எடை அதிகமாகவும் குறைவாகவும் இருக்கக் கூடாது சரியான எடையிலிருந்தாலே இயல்பாக கருத்தரிக்க முடியும்.
உடற்பயிற்சி :
  முறையான உடற்பயிற்சி கருத்தரிக்கும் வாய்ப்பினை அதிகரிக்கும். ஆணுக்கும், பெண்ணுக்கும் உடற்பயிற்சி மிக முக்கியம்.
புகைப்பழக்கம்:
புகை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்களானாலும் பெண்களானாலும் புகை இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும். ஆண்களில் விந்தணு தரத்தை புகை குறைத்திடும்.
குடிப்பழக்கம்:
போதைப் பொருட்களின் உபயோகம் விந்தணுக்களையும் முட்டை உற்பத்தியையும் வெகுவாக பாதிக்கும். குடி/போதை பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.
பிற மருந்துகள்:
ஆண்களில் பிற மருந்தகளின் உபயோகமும் வெகுவாக விந்தணுவின் தன்மையை பாதிக்கும். அல்சர் (வயிற்றுப் புண்) உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிக்கான பிற மருந்துகளின் உபயோகமும் தவிர்க்கப்பட வேண்டும்.
உறவு:
கருவுற வாய்ப்புள்ள காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை உறவு கொண்டால் போதாது குறைந்தது 3 முறையாவது உறவு வைத்துக் கொள்வது அவசியம்.
கருவுறும் காலம் :
மிருகங்களுக்கு இயல்பாகவே எப்பொழுது கருவுற வாய்ப்புள்ளதோ அப்பொழுதே உறவு கொள்ள விருப்பம் ஏற்படுகின்றது. மாதவிடாய் போன்ற இரத்தம் போக்கும் ஏற்படுகின்றது. ஆனால், மனிதர்களில் அவ்வாறு அல்ல. எல்லா நாட்களிலும் உறவு கொண்டு முட்டை வெடிக்கும் சமயத்தில் உறவு கொள்ளாது போனால் வீணாகப் போய் விடும். எனவே, முட்டை வெடித்து சிதறும் சமயம் (இரு மாதவிடாய்களுக்கும் சுமாரான நடுப்பகுதி) உறவு கொள்வது அவசியம்.
உறவு முறை:
எவ்வாறு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். ஆனால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறை ஆண் மேல் புறமும் பெண் கீழ்ப்புறமும் இருந்தவாறு உறவு கொள்வதேயாகும். உறவு முடிந்ததும் உடன் எழுந்து விடக்கூடாது. குறைந்தது 5 நிமிடம் பெண்கள் படுத்திருக்க வேண்டும்.
உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது (what is the right days for intercourse)?
உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலேஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும்,இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும்.
எனக்கு முட்டை வெளிப்படும் (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது (how to find the ovulation periods)?
உங்களுக்கு இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும்   வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.
மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு சுண்டி இழுப்பது போல இருக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (spotting),உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும். உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும்.
முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு,இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். உடல் வெப்பத்தை சாதாரனமாகவே நீங்கள் உணர முடியும். அக்குள் மற்றும் மார்பின் கீழ்பகுதி தொடைகளில் சூடாக உணர்வீர்கள்.
உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளிப்படும் (Ovulation) நாள் சரியாக 14ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளிப்படும் நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும். 
உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளிப்படும் நாள்

பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் `பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்’ பாதிப்பு பெண்களிடம் தற்போது பெருகிக் கொண்டிருக்கிறது. இதனால் பெண்களிடையே குழந்தையின்மை பிரச்சினைகளும் பெருகி வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். தாய்மையடைய முடியாமல் தவிக்கும் பெண்களில் 60 சதவீதம் பேர் `பி.சி. ஓ.எஸ்` பாதிப்பிற்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள், என்கிறது சமீபத்திய ஆய்வு. பி.சி.ஓ.எஸ். என்றாலே மாதவிலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சினைப்பையில் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை. இவை இரண்டும் சரியாக இருந்தாலும், பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக்கும். பி.சி.ஓ.எஸ். பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது தாய்மைக்கு தடையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.யு.ஐ. (IUI) / ஐ.வி.எப். (IVF) முறைகள்:
மருத்துவத்துறையின் அளப்பரிய முன்னேற்றம் காரணமாக டெஸ்ட் ரியூப்பில் குழந்தையை உருவாக்கக் கூடிய முறை அறிமுகமானதால் குழந்தை இல்லாதவர்களிடையே பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.
Intrauterine insemination (IUI):
பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் சில மருந்துகளை கொடுத்து, பிறகு ovulation ஐ தூண்டி, பிறது ஒரு குறிப்பிட்ட நாளில் கணவனின் விந்தை எடுத்து மனைவிக்கு செலுத்தி விடுவார்கள். இது ஒருவகையில் இயற்கை முறையிலேயே செய்வதால் மிக சுலபமானதாக கருதப்படுகிறது.  இதில் முட்டையை வெளியில் எடுக்காததால் ஒருவகையில் கரு பெண்களின் உடலிலேயே வளர்கிறது. IVF  போன்று வெளியில் எடுத்து பின்பு உள்ளே விடுவதில்லை. ஆனால் இது முதல் முயற்சியில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.  மேலும் மறுந்து சாப்பிடும் அனைத்து முறைகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
In vitro fertilization (IVF):
டெஸ்ட் ரியூப் குழந்தை என்பது உண்மையில் ஒரு வகை செயற்கைச் சினையூட்டல் முறையாகும். அதாவது உடலுக்கு வெளியே ஆய்வு கூடத்தில் பெண்ணின் முட்டையானது சினையூட்டப்படும். அதனால் உண்டாகும் கருவை பின் கருப்பையில் பதித்து, இயற்கையாக வளரச் செய்வர். செயற்கை என்பது முகமறியா வேறொருவரின் விந்தைக் கொண்டு சினையூட்டல் எனப் பொருள்படாது. கணவனின் விந்தைக் கொண்டே பெரும்பாலும் சினைப்படுத்தப்படுகிறது. கணவரின் விந்தணுக்கள் இல்லாவிட்டாலும் கூட அவரின் விதையிலிருந்தே விந்தணுக்களை வெளியே பிரித்து எடுத்து சினையூட்டப்படும் வைத்திய வசதி இப்பொழுது உண்டு. அதுவும் முடியாத கட்டத்தில் மட்டுமே வேறு ஒருவரின் விந்தைத் தானமாகப் பெறவேண்டிய தேவை ஏற்படலாம்.
இருந்தபோதும் In Vitro Fertilisation- IVF எனப்படும் டெஸ்ட் ரியூப் குழந்தையானது வேண்டுவோர் எல்லோருக்கும் சுலபமாகக் கிட்டிவிடுவதில்லை. இதற்கும் காரணங்கள் பல.
இச்சிகிச்சை முறையின் போது மருந்து கொடுத்த பின் உற்பத்தியாகும் முட்டைகளை அல்ரா சவுண்ட் துணையுடன் வெளியே எடுத்து கணவரின் அல்லது கொடையாளியின் விந்துவவைக் கொண்டு கருவூட்டுவர்.

மனித உடலின் வியத்தகு விஷயங்கள்.

​*மனித உடலின் வியத்தகு விஷயங்கள்.*

ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.
மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையில் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து, மூளையின் ரத்த ஓட்டம் நின்று விடுகிறது. மூளையில் உள்ள நியுரான்களின் எண்ணிக்கை 1400. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33. மனித மூளையின் எடை 1.4 கிலோ.
உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி. மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லிட்டர். உடலின் மெல்லிய சருமம் கண் இமை. மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி. ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை மூடித்திறக்கிறது. நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ., ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லிட்டர். மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள எனாமல். நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன. நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ. நம் உடல் எடையில் 9 சதவீதம் ரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவீதம் நீர்தான். நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்க போதுமானது. நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவீதமும், யூரியா 2 சதவீதமும், கழிவுப்பொருட்கள் 2 சதவீதமும் உள்ளன.
நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கிறோம். முழுவளர்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.
 நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.
 வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.
 நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது.
 மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் ஆகும்.
மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
 மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன்.
 ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.
 மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
 ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.
 நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோ மீட்டர். அதுபோல தும்மும் போது, கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.

​எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

​எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-
1.    மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2.    ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3.    உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4.    வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5.    முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6.    விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன்,       மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை,     உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8.    எக்காரணம் கொண்டும் காலை        உணவைத் தவிர்க்காதீர்கள்.
9.    நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10.   புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே     இருக்கட்டும்.
11.   வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.
25. உங்கள் தனிப்பட்ட           நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.
படித்ததில் பிடித்தது..

​சித்திரை1, ஆடி1, தை1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்…

​சித்திரை1, ஆடி1, தை1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்…
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிறுக்காங்க….!!!
Ok. Lets look at the science behind it…
“சூரியன் உதிக்கும் திசை கிழக்கு” னு school பசங்களுக்கு சொல்லிதறோம்….
என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா???!!! கண்டிபாக இல்ல… 

நம்ம education system அ design பன்னின வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல் அ அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று….
ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exact ah கிழ்க்கே உதிக்கும்…. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme point la, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்… அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்…
இப்படி correct ஆ கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correct ஆ கிழக்குக்கு வர ஆகிற time., Correct ah “1 year”…!!!!
சரி… இதுக்கும் தமிழ் மாததுக்கும் என்ன சம்பந்தம் னு தானே யோசிக்குறீங்க…. 
சூரியன் correct ah கிழக்கு ல start ஆகுற நாள் தான் #சித்திரை1.., புத்தாண்டு…!!! (In science it is called Equinox)
அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி1 …. (solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரது #ஐப்பசி1 (equinox) 
Going to extreme தென்கிழக்கு is #தை1 (solistice)
இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனணவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்…
சித்திரை (equinox) – புத்தாண்டு

ஆடி (summer solstice) – ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு

ஐப்பசி (equinox)- தீபாவளி

தை (winter solstice) – பொங்கல்
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்…

அதிசயம் என்றால் என்ன? 

​உலக

அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின்

அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது

என்பது தான் உலக அதிசயம்.
👉 நம் தமிழ்நாட்டின் *நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால்*

*” ச, ரி, க, ம, ப, த, நி “*

என்கிற ஏழு

இசை சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் *கல்லுக்குள் 7*

*ஸ்வரங்களை* வைத்தார்களே. அது உலக

அதிசயம்.
👉 திருப்பூரில் உள்ள *குண்டடம் வடுக நாத*

*பைரவர் கோவிலில்* *குழந்தை தாயின்*

*வயிற்றில் இருக்கும்* *பொழுது, குழந்தை*

*இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில்*

*இந்த விதமான Positions-ல் இருக்கும்*

என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே

கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அது

உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.
👉 இன்றும் நிறைய கோவில்களில்

குறிப்பிட்ட *ஒரு தேதி,* *நேரத்தில் பூ மாலை*

*போல் வந்து* *சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும்.* அப்ப

எவ்ளவு துல்லியமாக Measurement செய்து

ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று

பாருங்கள். சில கோவில்களில் தினமுமே

சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பூ மாலை

போல் வந்து விழும். 
👉 வட சென்னையில் உள்ள *வியாசர்பாடி* *ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3*

*வேளையும் சூரிய ஒளி* *சிவலிங்கத்தின் மீது*

*மாலை போல் வந்து* *விழும்*. இந்த கோவிலில்

உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள்

பழமையான லிங்கம் தெரியுமா? *ஐயாயிரம்*

*ஆண்டுகள்*. இது உலக அதிசயம். 
👉 *மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரியகோவில்* சிற்ப, கட்டிட வேலைபாடுகளில்

உள்ள அதிசயங்களை பற்றி முழுமையாக நமக்கு தெரியவேண்டுமென்றால் 

அதற்கு இந்த ஒரு பிறவி போதாது.
👉 *ஓசோன்* 20-ம் நூற்றாண்டில் கண்டு

பிடிக்கப்பட்ட படலம். *700 ஆண்டுகளுக்கு*

*முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன்* *கோவிலில்*

ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,

அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என்று அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது.

அது உலக அதிசயம். 
👉 *யாழி என்கிற மிருகத்தின்* சிலை பல பழங்கால கோவில்களில் இருக்கும்.

*டைனோசர் போல்.* அதுவும் உலகில் வாழ்ந்து

அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில

பழம்கால கோவில்களில் உள்ள யாழி

*சிலையின் வாயில் ஒரு உருண்டை*

*இருக்கும்*. அந்த உருண்டையை நாம்

உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள்

ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி

வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
👉 இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய

மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி

விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு

நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7

ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை எந்தநாட்டு கொம்பனாலும்  செய்ய முடியாது. வாயில்

உள்ள *உருண்டையை* *உருட்டலாம். ஆனால்*

*உருவ முடியாது*.இந்த வித்தையை இன்று

எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.
👉 மிகப்பெரிய பிரம்மாண்ட கற்கோவில்களை

அழகிய கலை வேலைபாடுகளோடு

உருவாக்குவது, இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.
👉 அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள *கங்கை*

*கொண்ட சோழபுரம்* கோவில் ஒரு வரலாற்று

சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள

கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம்

இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு

தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால்

*கிணற்றில் குளிக்கலாம். ஆனால்*

*மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது*

*தெரியாது.* அன்றைய ராணிகளுக்காகவே

கட்டப்பட்ட கிணறு அது.

அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில்

சுவர்களில் *மரகதகற்கள்* பதித்துள்ளனர். அதனால்

*வெளியே வெயில் அடித்தால் உள்ளே*

*குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே*

*கதகதப்பாக இருக்கும்.*

அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள்

பதுங்கும் உயரத்தில் *பாதுகாப்பு பெட்டகம்*

உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும்

படைவீரர்களும் பதுங்கும் வகையில்

கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.
மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.

தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.
*நமது முன்னோா்களின் திறமையையும்*

*கலைநயத்தையும்* *போற்றி* *தலைவணங்குவோம்*

இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம்

கொள்வோம்….!

நட்பு எப்படி உடைகிறது காரணங்கள்.*

​*நட்பு எப்படி உடைகிறது காரணங்கள்.*
*இரண்டு நண்பர்களில் ஒருவர்*, *மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம்.*

*எனவே அவரை தொடர்பு கொண்டு பேசினால் அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம்.*

*காலம் செல்லசெல்ல* *”நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்*..

*அவர் நம்மை தொடர்பு கொள்ளட்டுமே” என்ற சிந்தனை உருவாகும்.*

*மேலும் சிறிது காலம் செல்லும்போது இது மற்றொரு விதத்தில் தீவிரப்படும்.*

*அதாவது, அவர் நம்மை முதலில் தொடர்பு கொள்ளட்டும்*..

*பிறகு நாம் பேசுவோம் என்று நினைப்பு இருவரின் மனதிலும் பரஸ்பரம் தோன்றும்.*

*இங்கு என்ன ஆகிறது? நட்பால் விளைந்த அன்பு வெறுப்பாக மாறுகிறது*.

*இறுதியில் அவ்விரு நண்பர்களுக்குள் தொடர்பு இல்லாமல் போனதால்*, *நட்பால் விளைந்திருந்த பசுமை நினைவுகள் மறந்து போகிறது.*

*ஒருவர் மற்றொருவரை மறந்து போகிறார்.*

*எனவே நட்பு தொடர்ந்து நீடிக்க* *அடிக்கடி நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்.*

*நட்பு சிறக்க பத்து பொன் விதிகள்*:

1 . *நட்பு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க சோதனை ஏதும் வைக்காதீர்கள்.*

2 . *மேலும் நண்பரிடம் உதவி ஏதும் கேட்க நினைத்தால் அவரின் நிலை அறிந்து கேளுங்கள்.*

3. *நண்பரே குறிப்பறிந்து உதவி செய்தால் அதற்கு நன்றி தெரிவியுங்கள்.*

4. *ஆனால் அதே நேரத்தில் நாம்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறோமே என்று அவரிடமிருந்து பிரதி உதவி எதிர்பார்க்காதீர்கள்*.

5. *நண்பர் உதவவில்லையானால் “* *அவருக்கு என்ன சூழ்நிலையோ*,

*கஷ்டமோ தெரியவில்லை?*” *என்று நினைக்கப் பழகுங்கள்.*

6. *உதவ முடியாத நிலைக்கு நண்பர் வருத்தம் தெரிவித்தால், அதை ஏற்றுக்கொண்டு பழையபடி நட்பை தொடருங்கள்.*

7. *நண்பருக்கு கஷ்டம், துன்பம் என்று கேள்விப்பட்டால் அதை அறிந்து முடிந்த உதவி செய்யுங்கள். பக்கத்துணையாக நில்லுங்கள்.*

*நல் ஆலோசனை நல்குங்கள்.*

8 . *நண்பர் தன் கஷ்டத்தை முதலில் சொல்லட்டும், பிறகு உதவி செய்யலாம் என்று இருப்பது நட்புக்கு நன்று அல்ல*.

9 . *அதே போன்று நண்பர்களிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டால் அது பாதியாகும்.*

10 . *அவ்வாறே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாகும்.*

*வாழ்க நண்பர்கள் ! வளர்க நட்பு !!*

​உடல் பருமன் – சவாலைச் சமாளிப்போம்!

​உடல் பருமன் – சவாலைச் சமாளிப்போம்!

வான்மதி, பொது மருத்துவர்-
பருமனாக இருப்பவர்களை வேடிக்கையாகப் பார்த்து வியந்த காலம் மாறி, இன்று வீட்டுக்கொருவர் அப்படி இருப்பது வாடிக்கையாகி விட்டது. இன்றைய தலைமுறையினர் மத்தியில் ஃபாஸ்ட்ஃபுட்டும், குளிர்பானங்களும் ஃபேஷன் உணவுகளாகிவிட்டன.  அதுமட்டுமல்ல, உணவுவேளை என்றில்லாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதும், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதும் பலருக்கும் வாடிக்கை. ஆனால், பெரும்பாலானோர் பணிபுரியும் சூழல் உடல் உழைப்பு இல்லாமல்தான் இருக்கிறது. மாறிவிட்ட உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையுமே  ‘ஒபிஸிட்டி’ எனப்படும் உடல்பருமன் ஏற்படக் பெரிதும் காரணமாகின்றன.
`உடல்பருமன் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல… உலகளாவிய அளவில் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் பிரச்னை’ என்கிறார்கள் மருத்துவர்கள். அதை உறுதி படுத்தும்விதமாக உடல்பருமனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மூட்டுவலி போன்ற பல நோய்கள் உருவாகவும் உடல்பருமன் காரணமாகிறது. 
`உடல்பருமன் என்பது ஒரு சாதாரண பிரச்னையல்ல… பல நோய்களுக்கு அது வழி வகுக்கும். நாம் புரிந்துகொள்ளாதவரை, அதை நம்மால் தவிர்க்க முடியாது’ என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, உடல்பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள், வராமல் தடுக்கும் வழிகள் பற்றிப் பார்ப்போம்.
உடல்பருமன்
உடலின் ஆற்றலுக்குத் தேவையான கலோரி, நாம் உண்ணும் உணவின் மூலமே கிடைக்கிறது. தேவைக்கு அதிகமான கலோரி உடலில் கொழுப்பாகத் தேங்குகிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பதையே, `உடல்பருமன்’ என்கிறோம்.
உடல்பருமனுக்கான காரணங்கள்? 
அதிகளவு உணவு உண்ணுதல், ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடு, பரம்பரைக் காரணிகள், உடலுக்கு அதிக வேலை தராமலும்  உடற்பயிற்சி செய்யாமலும் இருப்பது, வாழ்க்கைச்சூழல், மனஅழுத்தம் போன்ற காரணங்களால் உடல்பருமன் ஏற்படுகிறது. 
உடல்பருமன் ஏற்படுவதற்கான காரணங்களைத்  தவிர்க்க இயலாத காரணங்கள், தவிர்க்கக்கூடிய காரணங்கள் என இரண்டு விதங்களாகப் பிரிக்கலாம். 
தவிர்க்க இயலாத காரணங்கள் 
பரம்பரைக் காரணிகள் 
பெற்றோருக்கு உடல்பருமன் இருக்குமானால், மரபணுக்கள் (Genes) மூலமாக அது குழந்தைகளுக்கும் வருகிறது. ஏனெனில் நமது உடலில் உள்ள மரபணுக்கள்தான் நமது உடலில் எவ்வளவு கொழுப்புச் செல்கள் இருக்க வேண்டும். அவை எங்கு அதிகமாகப் படிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. அதேபோல ஹார்மோன்களின் செயல்பாடு களையும் தீர்மானிக்கின்றன.
ஹார்மோன் மாற்றங்கள் 
க்ரெலின், லெப்டின் மற்றும் பாலியல் ஹார்மோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஹார்மோன்களில் ஏற்படும் எதிர்ப்பு மாற்றங்கள் உடலில் கொழுப்புச் செல்கள் அல்லது கொழுப்பு அதிகரிக்க முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. 
லெப்டின், க்ரெலின் 
நமது உடலின் பசியைச் சமநிலையில் வைக்கும் பணியை க்ரெலின் (Ghrelin), லெப்டின் (Leptin) என்ற இரு ஹார்மோன்கள் செய்கின்றன. அதாவது பசியுடன் வயிறு காலியாக இருந்தால் க்ரெலின் சுரக்கும். இது, மூளையில் உள்ள பசியைத் தூண்டும் மையத்தை (Appetite Center) உந்தச்செய்து பசி எடுக்க வைக்கும். இதன் காரணமாக நாம் சாப்பிடுவோம்; வயிறும் நிறையும். இதையடுத்து லெப்டின் சுரந்து மூளையில் உள்ள திருப்தி மையத்தை (Satiety Center) அலெர்ட் செய்யும். பசியையும் நிறுத்திவிடும். இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும்போது, மூளைக்குச் செல்லும் பசி குறித்த சிக்னல் தடைப்பட்டு, அதிகளவு உணவு உட்கொள்வதால் உடல்எடை அதிகரிக்கிறது. 
பாலியல் ஹார்மோன்கள் 
‘டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) என்பது ஆணின் பாலியல் ஹார்மோன். இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்போது தசை வளர்ச்சி அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். அளவு குறையும்போது தசை வளர்ச்சி குறைந்து கொழுப்பு அதிகரிக்க இது காரணமாகிறது. 
அதேபோல பெண்களுக்கு மாதவிடாய் நின்றபிறகு ஈஸ்ட்ரோஜென் (Estrogen) ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும். இது உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிறது. சில பெண்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு இந்த ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களாலும் உடல்எடை அதிகரிக்கும்.
தவிர்க்கக்கூடிய காரணங்கள்
சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளுதல், உடலுழைப்பு – உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைச்சூழல், பிற நோய்களுக்காக உட்கொள்ளும் ஸ்டீராய்ட் மருந்துகளின் பக்கவிளைவுகள், மனஅழுத்தம் போன்றவை ஹார்மோன் சுரப்பில் மாற்றங்களை உருவாக்குவதோடு, நேரடியாக உடல்பருமன் ஏற்படவும் காரணமாகின்றன.
எப்படித் தவிர்க்கலாம்?
உடல்பருமன் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை எல்லா வயதினருக்குமான பிரச்னை. எனவே, குழந்தைப் பருவத்திலேயே இதுபற்றி அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். 

பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால்தான் புகட்ட வேண்டும். இது தாய் – சேய் இருவருக்கும் நல்லது. ஏனெனில், குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது, இயல்பாகவே திருப்தி அடைந்துவிடுவார்கள். ஆனால், தாய்ப்பால் அல்லாத செயற்கைப் பாலை அளவுக்கு அதிகமாகக் குடிப்பதற்கான வாய்ப்பு உண்டு. இதனால் குழந்தைப் பருவத்திலேயே உடல்எடை அதிகரிக்கலாம். 
அதேபோல, கர்ப்பக் காலத்தில் பெண்கள் சாப்பிடும் அதிகப்படியான உணவால்  இயல்பாகவே எடை அதிகரிக்கலாம். குழந்தை பிறந்த பிறகும், பாலூட்டும் காரணத்தால் சாப்பிடும் அதிக உணவு, உடல் எடையைக் கூட்டுவது இயல்பே. இது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்காக உடனடியாக உண்ணும் உணவின் அளவைக் குறைக்காமல், படிப்படியாகக்  குறைக்கலாம். 
குழந்தைகள் திட உணவுகளை உண்ணத் தொடங்கும் வயதில் இருந்தே எண்ணெயில் பொரித்த உணவுகள், நொறுக்குத்தீனிகள் கொடுப்பதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் தம் குழந்தைகளை, தினசரி விளையாட அனுமதிக்க வேண்டும்.  
உடல் உழைப்பு இருக்குமாறு அன்றாடப் பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும். உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலையில் இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம். வறுத்த, பொரித்த, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, ஆவியில் வேகவைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
அசைவ உணவுப் பிரியராக இருந்தால், மீன், முட்டை, `வொயிட் மீட்’ எனப்படும் சிக்கன் சாப்பிடுவது நல்லது. `ரெட் மீட்’ எனப்படும் மட்டன் போன்றவற்றில் கிடைக்கும் புரதத்தில் நிறைய கொழுப்பும் இணைந்து வருவதால் முடிந்தவரை இதைத் தவிர்ப்பது நல்லது.
காலை, மாலை, இரவு என ஒவ்வோர் உணவு இடைவெளிகளிலும் இளநீர், மோர் போன்ற நீராகாரங்களைக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல அதிகம்பேர் செய்யும் தவறு, இரவில் அதிகமாக உண்பது. இதனைத் தவிர்க்க மாலை நேரங்களில் சுண்டல், கடலை போன்ற வேகவைத்த சிற்றுண்டிகளைச் சாப்பிடலாம்; இரவு நேரத்தில் அதிகம் பசி இருக்காது. 
உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதற்காகக் காலை உணவைத் தவிர்ப்பது கூடவே கூடாது.
உடல் ஆரோக்கியமாக இருக்க, உண்ணும் உணவு அளவோடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் அது சத்து மிகுந்ததாகவும் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்,  கனிமச்சத்து போன்றவைச் சமச்சீரான அளவில் இருக்க வேண்டும். எனவே வயது, உடல் எடை, உயரம், வேலையின் தன்மை, உடல்பருமன் அளவு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு ஒருவருக்குத் தேவையான கலோரி நிர்ணியக்கப்படுவதால், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப்படி உணவை உட்கொள்ளலாம்.
– ஜி.லட்சுமணன் @ Vigadan E mag.

தெரிந்து கொள்ளுங்கள்

​*தெரிந்து கொள்ளுங்கள்*
*தலைப்பு – மனித உடல்*
☦🅾மனித மூளையின் நிறம் சாம்பல் நிறம்.
☦🅾 ரத்தவகை ஆயுள் முழுவதும் மாறாது.
☦🅾 யோகாசனம் என்னும் பயிற்சி 21 வகைப்படும்
1. பத்மாசனம், 2. சித்தாசனம், 3. வஜ்ராசனம், 4. உட்கடாசனம், 5. பட்சி மோத்தாசனம், 6. வக்ராசனம், 7. உஷ்டிராசனம், 8. அர்த்த சிரசாசனம், 9. பாதஹஸ்தாசனம், 10. திரிகோணாசனம், 11. தனுராசனம், 12. விருட்சாசனம், 13. ஹனுமானாசனம், 14. தாடாசனம், 15. அர்த்த சக்கராசனம், 16. சோணாசனம், 17. புஜங்காசனம், 18. வீரபத்ராசனம், 19. சக்கராசனம், 20. அதோமுக சவாணாசனம் 21. நாற்காலி ஆசனம்.
☦🅾 மனித உடலில் வினாடிக்கு 15 மில்லியன் ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன. அதேசமயம் அழியவும் செய்கின்றன.
☦🅾 மனித உடலில் உள்ள ஐம்புலன்களின் உறுப்புகளில் கடைசியாகச் செயலிழப்பது காது.
☦🅾இடது நுரையீரலை விட அதிகமான காற்றை வலது நுரையீரல் உள் வாங்குகின்றது.
☦🅾 மனித மூளையின் நினைவுத்திறன் நான்கு டெராபைட் அளவை விட அதிகமானது.
☦🅾 நமது நாக்கின் நீளம் 10 செ.மீ. எடை 56 கிராம். சுவை அறியும் சுவை மொட்டுகள் நாக்கில் உள்ளன. அதன் மூலம் சுவை அறிய முடிகிறது. பேசும் சாதனம். உமிழ்நீர் சுரக்கும் இடம். நுனி நாக்கில் உப்பு சுவை மொட்டுகள், நடுவில் இனிப்பு சுவை அறியும் மொட்டுகள், உள் நாக்கில் கசப்பு சுவை மொட்டுகள், நாக்கின் ஓரத்தில் காரச்சுவை உணரும் மொட்டுகள் உள்ளன.
☦🅾 நமது தலையின் எடை அளவு 3,175 கிலோ கிராம்.
* நமது உடலில் 600 தசைகள் உள்ளன.
☦🅾நமது உடலில் இருக்கும் கொழுப்பைக் கொண்டு 7 சோப்புகள் செய்யலாம்.
☦🅾மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.
☦🅾மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும் தன்மையுடையது.
☦🅾 மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சத்துப்பொருட்கள் புரதச்சத்து ஆகும்.
☦🅾 தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்.
☦🅾‘மெலனின்’ என்று ஒரு ரசாயனப் பொருள்தான் நமது உடம்பின் தோலுக்கு நிறம் கொடுக்கிறது.
☦🅾 ஒரு நாளில் நமது இரத்தம் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.
நுரையீரல்கள் 23 ஆயிரத்து 40 தடவைகள் சுவாசிக்கின்றன.
இதயம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 689 தடவைகள் துடிக்கிறது.
☦🅾 குழந்தை பிறந்த போது 270 எலும்புகள் இருக்கும். பிறகு சேர்ந்து 206 எலும்புகள் நிலைக்கும்.
☦🅾 கைரேகையைப் போலவே நாக்கிலுள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
* மனித உடலில் சதை அழுத்தமாக உள்ள பகுதி நாக்கு.
☦🅾 மனிதர்களின் இரண்டு பக்க மூக்குத் துவாரங்களும் நுகர்வதர்கு வெவ்வேறாக செயல்படுகின்றன மனதுக்கு பிடித்த வாசனைகளை இடது பக்கத்தைக் காட்டிலும், வலது பக்கத் துவாரங்களே அதிகம் உணருகின்றன. எனினும், சரியான வாசனைகளைத் துல்லியமாக உணர இடது பக்கமே உதவுகிறது.
☦🅾மூக்கை அடைத்துக்கொண்டு ஆப்பிளையோ உருளைக்கிழங்கையோ வெங்காயத்தையோ சாப்பிட்டால் எல்லாம் ஒரே ருசியாகத்தான் தெரியும்.
☦🅾ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமக்கு வாசனை உணர்வுகள் ஏற்படாது.
☦🅾 கோபம் மிகும்பொது முகத்திலுள்ள சிறு நாளங்கள் விரிந்து அதிக இரத்தம் பாய்கிறது. அதனால் முகம் சிகப்பாகிறது.
☦🅾 நம் உடலில் அதிகம் உள்ள சுரப்பி வியர்வைச் சுரப்பிகளே. ஏறத்தாழ 20 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.
☦🅾 ‘ஆக்சிஜன் படகு’ எனப்படுவது ஹீமோகுளோபின்.
☦🅾 மனித உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.
☦🅾 நம் உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை 830.
☦🅾 நமக்கு களைப்பு ஏற்படும்போதும், மூளை சோர்வு அடையும்போதும், இதனை நமக்கு அறிவிக்கும் செயலே கொட்டாவி ஆகும்.
☦🅾 நாம் உண்ணும் உணவில் அதிகப்படியாக புரதப் பொருள் இருந்தாலும், புளிப்பு பொருள்கள் இருந்தாலும் இவற்றை சிதைக்கும்பொழுது ஏற்படும் வாயு ஏப்பமாக வெளிவருகிறது.
☦🅾உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாத போது ஏற்படும் சுவாச சிக்கலே விக்கலாக மாறுகிறது.
☦🅾 உணவுப் பாதையில் செல்லவேண்டிய உணவுத் துணுக்குகள் சுவாசப் பாதையில் பாதை மாறி நுழையும் பொது பொரை ஏறுதல் நிகழ்கிறது.
☦🅾சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் ஒவ்வொரு நிமிடமும் நம் மூளைக்குள் பாய்கிறது.
☦🅾 நம் கையின் கட்டை விரல் நகம்தான் மிகவும் மெதுவாக வளர்கிறதாம். வேகமாக வளர்வது நடு விரல் நகம்.
☦🅾 உடல் உறுப்புகளில் தானாகவே இயங்கும் உறுப்பு இதயம் ஆகும்.
☦🅾 மனித உடலில் இரத்தம் பாயாத இடம் விழி வெண் படலம். அதற்கு இரத்தமே செல்வதில்லை. தனக்குத் தேவையான ஆக்ஸிஜெனை அது காற்றிலிருந்து எடுத்துக் கொள்கிறது.
☦🅾 மனித உடலில் வியர்வைச் சுரப்பிகள் உண்டு. ஆனால் பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது அதனால் அதற்கு வியர்ப்பது இல்லை.
☦🅾 மனிதக் கண்களின் எடை 1.5 அவுன்சுகள் மட்டுமே ஆகும்.
☦🅾 நமது உடலிலிருந்து தினமும் 0.8 லிட்டர் வியர்வை வெளியேறுகிறது.
☦🅾 நமது உரோமம் 0.004285 சென்டி மீட்டர் வளர்கிறது.
☦🅾 பெண்களைக்காட்டிலும் 40 சதவீதம் அதிகமாக ஆண்களுக்கு வியர்க்கிறது.
☦🅾 நமது உடலில் வியர்க்காத பகுதி உதடு.
☦🅾 கை விரல்களில் சுட்டு விரலுக்கு உணர்வு அதிகம்.
☦🅾 சுவாசித்தல் சிதை மாற்றம் எனும் வழியின் கீழ் அடங்கும்.
☦🅾 நமது உடல் 866 டிகிரி வெப்பத்தை வெளியேற்றுகிறது.
☦🅾 நமது உரோமம் 0.04285 செ.மீ. வளர்கிறது.
☦🅾நமது விரல் நகம் 0.00115 செ.மீ. வளர்கிறது.
☦🅾 நமது இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.
☦🅾 நாம் 76,09,000 மூளை அணுக்களுக்கு வேலை தருகிறோம்.
☦🅾 உடலில் மிகத் துரிதமாக செய்தியைக் கடத்துவது நரம்பு மண்டலம்தான். இது ஒரு மணி நேரத்தில் 283 கி.மீ. வேகத்தில் செய்தியைக் கடத்துகிறது.
☦🅾 நாம் தூங்கும்போது எல்லா உறுப்புகளும் ஒரே

 நேரத்தில் ஓய்வெடுப்பதில்லை. முதலில் கண்கள், பின்பு காது, தோல் என ஒவ்வொன்றாக ஓய்வெடுக்கத் துவங்கும். 

அன்புடன் ARS PAINTS.

ராஜராஜ சோழனின் தொலைநோக்குச் சிந்தனையும் அறிவாட்சித்தரமும் – நம்முன்னோர்களின் கலையும் பண்பாடும்*

​*ராஜராஜ சோழனின் தொலைநோக்குச் சிந்தனையும் அறிவாட்சித்தரமும் – நம்முன்னோர்களின் கலையும் பண்பாடும்* 
1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.
தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு

தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.

அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.
தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.

சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).
1,30,000ton எடையுள்ள கற்களைக் கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும்,அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்) .விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.
1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.
தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர்,கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.
கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்,சற்று யோசித்து பாருங்கள்,இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம்  கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்,தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.
7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை,அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும்,மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.
சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள்,குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள்,ஓவியர்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.
இது மட்டுமா?…
7 வருடம் கோவில் கட்ட தேவையான பொருட்செலவை ஈடுகட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்கவேண்டும், வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும். அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்.
ஒரு வேலை ராஜராஜ சோழனோ இல்லை மற்ற முத்த கட்டிடக்கலை நிபுணர்கள் இறந்தாலும் கோவில் வேலை தடை இல்லாமல் தொடர சுமார் 1000 வரைப்படங்களை தயார் செய்து இருக்கிறார்கள்.
கிரானைட் கற்களை செதுக்க என்ன வகை உளி, இரும்பு பயன்படுத்த வேண்டும் என்று முன்பே கொல்லர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும். அதே போல் கற்களை நெம்பிதூக்க உதவும் கம்பிகளை தயார் செய்ய வேண்டும் என்றால் பழுக்கக்காய்ச்சி உரமேற்றும் உத்தியும் தெரிந்திருக்க வேண்டும்.
தஞ்சையை சுற்றி 50 கிலோமீட்டருக்கு க்ரானைட் கற்கள் கிடையாது, கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50km தூரத்தில் உள்ள நார்த்தாமலையில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றால் சோழதேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்.
இது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிக பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது.7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள் ( அதிகாரிச்சி ) அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது.
1000 வருடம் பல நிலநடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் வழிபாட்டு தலம் இல்லை.

மருத்துவம், பொருளாதாரம்,

கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எடுத்துக்காட்டு.

 ம
தஞ்சை பெரிய கோவில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்த அருள்மொழிவர்மன் (எ) ராஜராஜ சோழனின் பெருமையை 

அனைத்துலகும் அறிய அறிவிப்போம்
*வாழ்க வையகம்!!*