சீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம்?*🍹     

​*🌿சீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம்?*🍹

     

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
☦🅾சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
 *🌿வழி 1 :* 
 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
*🌿வழி 2 :* 
சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
*🌿வழி 3 :* 

சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம். அதேபோல் சூப்புடன் சீரகப் பொடி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
அதிலும் சீரகத்துடன் எலுமிச்சையும் இஞ்சியும் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம். குறிப்பாக சீரகம் தொப்பையைக் குறைக்கும்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.
இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம். 
சீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! ! 

​எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது…

1. புத்தகங்களை துணை கொள்.

2. உடலுழைப்பை அதிகரி.

3. சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.

4. குளிர் நீரில் குளி.

5. கொஞ்சமாய் சாப்பிடு.

6. தியானம் கைகொள்.

7. இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.

8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.

9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.

10. எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.

11. ஆத்திரம் அகற்று.

12. *கேலிக்கு புன்னகை தா.*

13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.

14. நட்புக்கு நட்பு செய்.

15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.

16. *அலட்சியப் படுத்தினால் விலகி நில்.*

17. அன்பு செய்தால் நன்றி சொல்.

18. இதமாகப் பேசு.

நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! ! 

வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.

​அதிக வட்டி..அதிக வருமானம்… இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

​அதிக வட்டி..அதிக வருமானம்… இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!
வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால், இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள். நம் பணத்தை அவர்களிடம் சுழற்சிக்குக் கொடுத்து நாம் அதற்கு கமிஷன் தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். பெரும்பாலும் பொதுமக்கள் வங்கியையே சேமிப்புத் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள நாடுகின்றனர். ஆனால், வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. 
`செல்வ மகள் சேமிப்புக் கணக்கு, பொன் மகன் பொது வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம்’ எனக் குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. 
1. செல்வ மகள் சேமிப்புக் கணக்கு! 
இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டம். 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக 1,000 ரூபாய் செலுத்தி அஞ்சலகங்களில் கணக்கைத் தொடங்கலாம். இந்திய அஞ்சலகத்தின் அனைத்துக் கிளைகளிலும் இத்திட்டத்தைத் தொடங்கலாம். ஒரு நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.
2. பொன் மகன் பொது வைப்பு நிதி! 
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் பொதுவான ‘பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்ச முதலீடாக 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 
3. தொடர் வைப்புக் கணக்கு! 
மாதாந்திர சேமிப்புக்காக தொடர் வைப்புக் கணக்கு (Recurring Deposit (RD) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.3 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம், அதிகபட்சம் என்று ஒன்றும் இல்லை, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை. 
4. கால வைப்புக் கணக்கு! 
குறைந்த கால சேமிப்புக்காகக் கால வைப்புக் கணக்கு (Time Deposit (TD) Account) தொடங்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேநேரம் 2 வருடங்களுக்கு 7.1 சதவிகிதமும், 3 வருடங்களுக்கு 7.3 சதவிகிதமும், 5 வருடங்களுக்கு 7.8 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 
5. முதியோருக்கான சேமிப்புத் திட்டம்! 
அதிகபட்ச வட்டியுடன் வருமான வரிச் சலுகையும் (80C) பெற முதியோருக்கான சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account)தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்
6. மாதாந்திர வருமானத் திட்டம்! 
நிலையான மாத வருமானத்துக்கு மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme (MIS) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 4.5 லட்சம் வரை முதலீடு மேற்கொள்ளலாம். 
7. தேசிய சேமிப்புப் பத்திரம்! 
வருமான வரிச் சலுகை (80C) பெறத் தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificates -NSC) திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்து வருடங்கள் வட்டி 8 சதவிகிதம் வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை. 
8. கிஸான் விகாஸ் பத்திரம்! 
112 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra – KVP) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை. 
`அதிக வட்டி, அதிக லாபம்’ தருகிறேன் என்று யார் சொன்னாலும், எந்த நிறுவனம் சொன்னாலும் நம்பாதீர்கள். அலசி ஆராய்ந்து அதன் பின்னே முதலீட்டினைத் தொடங்குங்கள். நம் ஊரில் வங்கிச் சேவை இல்லாத கிராமம்கூட இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அஞ்சல் அலுவலகம் இல்லாத எந்த ஒரு கிராமமும் இல்லை. இன்றும் ஏதோ ஒரு மூலையில் தனது சிறகினை விரித்து சேவையை வழங்கி வருகிறது. வங்கிகளைப்போல பரிவர்த்தனைக் கட்டணம், மினிமம் பேலன்ஸ் என்று எந்த ஒரு நெருக்கடியும் அஞ்சல் சேமிப்புக் கணக்கில் இல்லை.

50 ரூபாய்தான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் சேமிப்புக் கணக்குபோல, குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் துறையில் இருக்கின்றன. நாளைய பாதுகாப்புக்கு இன்றே சேமிக்கத் தொடங்குங்கள். உங்களுடைய ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். 

இயற்கையாக வளும் தேன் கூடுகளை அழிக்க வேண்டாம்*🐝🐝🐝

​🐝🐝🐝🐝*இயற்கையாக வளும் தேன் கூடுகளை அழிக்க வேண்டாம்*🐝🐝🐝
🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து

மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு

நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்

இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
இனிக்கும் செய்தியல்ல….!
🐝தேனீ…

 ………….உலகின் மிக சுவாரஸ்யமான,

நுணுக்கமான உயிரினம்.
🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான

மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்

தெரிந்துகொள்ளலாமா………….?
முதலில்… ஆச்சரியம். 
🐝தக்கனூண்டு

சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்

சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.
🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்

போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,

பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு

தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்

சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்

தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித

உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்

காரணம்.
🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,

வாட்ஸ்அப் முறைகளை விடத்

துல்லியமானது. 
🐝யானை, ஆமைகளுக்கு

ஞாபகசக்தி அதிகம் என்போம். 

ஆனால்,

அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி

கொண்டவை தேனீக்கள். 
🐝இதுபோல இன்னும்

பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு

உடம்பில் இருக்கின்றன. 
ஆனால், அதிர்ச்சி

தரும் விஷயம்… 
🐝அந்தத் தேனீக்கள் இப்போது

‘அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்

இடம்பிடித்திருக்கின்றன.
🐝ஆம்… ‘உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,

நிச்சயம் இதுதான். 
🐝ஒட்டுமொத்த மக்கள்

தொகையாலும் பூமிக்கு விளையாத

நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.
🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு

சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்

போர்வையைப் போத்துகிறது.
🐝தேனீக்களின் ‘லைஃப்ஸ்டைல்’ பற்றி

தெரிந்துகொண்டால்தான், அது

காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட

நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்

பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்

பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை

பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்

சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
🐝”உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.

மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்

தேனீ. 
🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும்

கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.
🐝 மத்த தேனீக்கள்

தானாகவே காட்டில் வளரும். 
🐝ஒரு

குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில

நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்

தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். 
🐝இதில் ஆண்

தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்

தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்

தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.
🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது

மட்டும்தான் வேலை. 
🐝ஆண் தேனீக்கு,

ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்

பாதுகாப்பதும் கடமை. 
🐝மற்ற எல்லா

வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.
🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,

தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்

சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா

வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்

கவனிக்கும்.
🐝தேனீக்களின் பொறியியல் அறிவு

அபாரமானது. 
🐝தேன் கூட்டை அறுங்கோண

வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு

சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம

முழுசாப் பயன்படுத்த முடியும். 
🐝ஆண்

தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய

அறுங்கோண செல் வடிவத்தில் கூடு

கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்

வடிவில் செல் கட்டும். 
🐝கூட்டின் கட்டுமானம்

திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்

தேனீ அதில் முட்டையிடும்.
🐝பூக்களின் மகரந்தம், மதுரம்… இரண்டும்தான்

தேனீக்களின் உணவு. 
🐝அப்போதைய பசிக்கு

அப்போதே சாப்பிட்டுவிடும். 
🐝அப்புறம் ஏன்

தேன் சேகரிக்கிறது? 
🐝குளிர் காலங்கள், பூ

பூக்காத காலங்களில் உணவுத்

தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்

சேகரிக்கிறது. 
🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்

பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த

உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,

பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்

இருக்கும் ‘தேன் பை’யில்

சேகரித்துக்கொள்ளும். 
🐝அந்த மதுரம்

முழுவதும் செரிக்காமல், தேனீயின்

வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்

சேர்ந்து திரவமாக மாறிவிடும்.
🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,

கூட்டின் வாசலில் காத்திருக்கும்

தேனீக்களிடம் அந்தத் திரவத்தை

ஒப்படைக்கும். 
🐝அதற்காக ஏப்பமிட்டு

ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து

திரவத்தை வெளியில் கொண்டுவந்து

எதிர் தேனீயின் வாயில் கொட்டும். 
🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். 
🐝கூட்டைப் பராமரிக்கும்

தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்

ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,

அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்

சேர்க்கும். 
🐝பிறகு அந்தத் திரவத்தில்

இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக

தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.
🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை

மெழுகைப் பூசிவைக்கும். 
🐝இத்தனை

நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்

சுவைக்கும் தேன் உருவாகும். 
🐝தேன்

எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை

தேனிக்களுக்கு எனக் கூட்டில்

விட்டுத்தான் எடுப்பார்கள். 
🐝அதுதான் தேன்

சேகரிக்கும் தர்மம் !
🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ

அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.
🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்

அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்

வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்

பறக்கும். 
அதை எந்த ஆண் தேனீ துரத்திப்

பிடிக்கிறதோ, அதோடுதான் இணை

சேரும் ராணி. 
🐝புணர்ச்சி முடிந்தவுடன்

ஆண் இறந்துவிடும். 
🐝அதன் பிறகு ராணித்

தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து

வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்

வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை

தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை

அட்டகாசமானது. 
🐝உணவுத் தேவை

ஏற்படும்போது ‘ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்

முன்னே சென்று பூக்கள் இருக்கும்

இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்

கூட்டுக்குத் திரும்பும். 
🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,

தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது

சோலை எந்தத் திசையில் எவ்வளவு

தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்

தெரிவிக்கும்.
🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட

நடனம் மற்றும் வாலாட்டு நடனம். 
வட்ட

நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்

இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.
🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை

ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே

பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு

நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது

என்றும் அர்த்தம். 
🐝வாலை வேகமாக

ஆட்டினால், சோலை அருகில் உள்ளது

என்றும், மெதுவாக ஆட்டினால்,

தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
🐝சூரியன், சோலையின் திசை, தங்கள்

கூட்டின் இருப்பிடம்… இந்த மூன்றையும்

சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.
🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்

கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்

கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு

கொடுத்தார்கள்.
🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்

காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்

மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்

உட்காரும்போது, விதவிதமான

கூட்டணியுடன் பரவும். 
🐝இதுதான்

காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்

காரணம். 
🐝தேனீக்களை அதிகம்

காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.
🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே

இயற்கையாகவே அடர்ந்த காடுகள்

உருவாகிவிடும்!”
🐝”அழியும் உயிரினம் பட்டியலில் இடம்

பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன

ஆபத்து?”
🐝”அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய

நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்

உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்

மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு

தேனீக்கள் அழிந்துவிட்டன. 

அதாவது,

தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42

சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 
🐝இன்னும்

இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.
🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை

வரலாம்.
🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,

Colony Collapse Disorder – சுருக்கமாக… CCD.

அதாவது கூட்டில் இருந்து உணவு

சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்

கொத்துக் கொத்தாகக்

காணாமல் போய்விடும். 
🐝ராணி மட்டும்

கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்

கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு

கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,

ராணித் தேனீ என்ன செய்வதெனத்

தெரியாமல் குழம்பி, சீக்கிரமே

இறந்துவிடும். 
🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும். 
🐝பணித்

தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. 
🐝அதில்

முக்கியமானது… செயற்கை உரம்,

பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட

பயிர்கள். 
🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ

நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,

தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து

அவற்றின் நினைவுத்தினை

மழுங்கடித்துவிடும். 
🐝இதனால்

கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்

பறந்துபோய் அலைந்து திரிந்து

இறந்துவிடும். 
🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்

பயிர்களின் விதைகளை ‘டெர்மினேட்டர்

சீட்ஸ்’ என்பார்கள். 

🐝அதாவது, அந்தப் பயிர்கள்

‘விதை தானியத்தை’ உருவாக்காது.

மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.
🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்

மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்

செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,

ஒரு கட்டத்தில் தேனீக்களைக்

கொன்றேவிடும்.
🐝இப்படி விவசாயத்தில் ‘வணிக

லாபத்துக்காக’ மனிதன் செய்த பல

மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.
🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து

வருடங்களாக விவசாய உற்பத்தி

பெருமளவு குறைந்து வருவதற்குக்

காரணம் தேனீக்களின் இறப்பு எனத்

தெரியவந்தது. 
🐝அதனால், அங்கு செயற்கை

உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்

போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.
🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து

தங்கள் வயல்களில் பறக்கவிட்டு

மகரந்தச்சேர்க்கை உண்டாக்க

முயற்சிக்கிறார்கள். 
🐝பல லட்சம் தேனீக்களை

அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு

தேனீயைக்கூட உருவாக்க முடியாது.
🐝இதை நாம் எப்போது உணர்வோம்?” என்று

வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
🐝’தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து

மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு

நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்

இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்
எனவே இயற்கையாக வளரும் தேன் கூடுகளை அழிக்க வேண்டாம்
🌾ORGANIC

FARMING 
Don’t hesitate   , please forward to all.

​உலகில் பல பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்களாம். 

​உலகில் பல பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்களாம். 
புற்றுநோய் வந்து விட்டது என்றாலே சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். சிங்கம் போல சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்றுநோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து, குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கிவிட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிபட்ட புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. 
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும், பாதிரியாருமாகிய ரோமனோ சகோ ஆவார். 
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்றுநோயால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும். 
இதற்கென எடுத்து கொள்ளவேண்டிய மருத்துவ பொருட்கள். சோற்று கற்றாழை 400 கிராம். சுத்தமான தேன் 500 கிராம். விஸ்கி அல்லது பிராந்தி 50 மி.லி (மருந்தாகமட்டும் எடுத்து கொள்ளவேண்டும்). 
தயாரிப்பு முறை:
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவேண்டும். அப்போது மருந்து தயாராகிவிடும்.
மருந்தை உட்கொள்ளும் விதம்:
இம்மருந்தை தினமும் மூன்று வேலை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மி.லி வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும். மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை சேர்த்து வைக்ககூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும். சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகை பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

​படித்ததில் பிடித்தது உங்களுக்காக…
நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.

• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் – எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.

• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எளிய இயற்கை வைத்தியம்

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.

54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

.

கற்பதும் கற்றதை பிறர்க்கு கற்பிப்பதும் வாழ்க்கை

உங்கள் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..

​*உங்கள் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..*

ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினாலும் நாம் அதனை செய்வதில்லை. அவ்வாறு தண்ணீர் குடிப்பதை தவிர்த்து வருபவர்களுக்கு உடல் வறட்சி ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தாலும் கூட சில உடல் உபாதைகள் உண்டாக வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர்.
எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்…
•• கட்டாயம் 20 கிலோவுக்கு மேல் உள்ள சிறுவர்கள் முதல் 45 கிலோ வரை உள்ளவர்கள் வரை கட்டாயம் 1.8 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
•• 45 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 1.9 லிட்டர்.
•• 50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2.1 லிட்டர்.
•• 55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2.3 லிட்டர்.
•• 65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2.7 லிட்டர்.
•• 70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2.9 லிட்டர்.
•• 75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3.2 லிட்டர்.
•• 80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3.5 லிட்டர். 
•• 85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3.7 லிட்டது.
•• 90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3.9 லிட்டர்.
•• 95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 4.1 லிட்டர்.
•• 100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 4.3 லிட்டர்.
•• 100 கிலோவுக்கு மேல் எடை கொண்டவர்கள் நிச்சயம் உடல் பருமனை குறைப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும்.

செட்டிநாடு எலும்பு குழம்பு*🍖

​🌿🍖 *இன்றையசமையல்* 🍖🌿

              🍖🥘 *22\02\16* 🥘🍖

 

       

                   🥘 *அசைவம்*🥘

🍖 *செட்டிநாடு எலும்பு குழம்பு*🍖

அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சமையல் தான் செட்டிநாடு. அதிலும் செட்டிநாடு அசைவ சமையல் மிகவும் சுவையாக இருக்கும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு எலும்பு குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வார விடுமுறையில் செட்டிநாடு எலும்பு குழம்பை செய்து சுவைத்து

மகிழுங்கள்
 *தேவையான பொருட்கள்:*
மட்டன் எலும்பு – 1/2 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1 கப்குழம்பிற்கு…வெங்காயம் – 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 (நீளமாக கீறியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்ழுன்

தேங்காய் – 1/2 கப் (துருவியது)

தக்காளி – 3 (நறுக்கியது)

உருளைக்கிழங்கு – 2 (துண்டுகளாக்கப்பட்டது)

முருங்கைக்காய் – 1 (நறுக்கியது)

தண்ணீர் – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது
*தாளிப்பதற்கு…*

எண்ணெய் – 1/4 கப்

பட்டை – 3 இன்ச்

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

ஏலக்காய் – 5

கிராம்பு – 5

பிரியாணி இலை – 1

கறிவேப்பிலை – சிறிது

*செய்முறை:*

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, மட்டனுக்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து, 15 நிமிடம் மீண்டும் வேக வைத்து, பின் அடுப்பில் இருந்து குக்கரை இறக்க வேண்டும்.பின்னர் மிக்ஸியில் தேங்காயைப் போட்டு பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.பின்பு அதில் வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் மற்றும் குக்கரில் உள்ள மட்டனை அப்படியே நீருடன் ஊற்றி, அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டையும் சேர்த்து கிளறி, 25-30 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லித் தூவி இறக்கினால் செட்டிநாடு எலும்பு குழம்பு ரெடி!!
🍖🥘🍖🍖🥘🍖🥘🍖🥘🍖🥘

​உடலின் கழிவுகளை வெளியேற்ற…!!!

​உடலின் கழிவுகளை வெளியேற்ற…!!!
12 தவறான பொருட்களை உணவாக உண்டதால் ஒரு மனிதனுக்கு செரிமானக் குறைவு ஏற்படுகிறது.  அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது*.
1.  உப்பு

2.  புளி

3.  வெள்ளை சர்க்கரை

4.  வெங்காயம், பூண்டு

5.  ஆங்கில மருந்து

6.  கெமிக்கல் உணவு

7.  உருளைக்கிழங்கு

8.  அசைவ கொழுப்பு

9.  பால் பதார்த்தங்கள்

10. பச்சை, வர மிளகாய்

11.  ரீபைண்டு ஆயில்

12.  மைதா, முட்டை
மேலே கொடுக்கப் பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால் தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா ? என்றால் நிச்சயம் முடியும். காய்கறிக்கு அந்த மகத்துவம் உண்டு.
*எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உண்டு பயன் பெறவும்*. 
*உப்பை வெளியேற்றும் விதி*
தீர்வு : காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி  பருகவும். 
*புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி*
தீர்வு : ஒரு வாழைக் காயை தோலை நீக்கிவிட்டு  பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
*வெள்ளை சர்க்கரையின் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி*
தினமும் காலை 200 கிராம் பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும். 
*வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டின் கழிவுகளை வெளியேற்றும் விதி*
தீர்வு : காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும்   நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.
*கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நஞ்சை உடலிருந்து வெளியேற்றும் விதி*
காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும். 
*கடைகளிலும், பாக்கெட்டிலும் உள்ள கெமிக்கல்  கொண்ட உணவு மற்றும் முக்கியமாக அரிசியில் கலந்துள்ள நஞ்சை வெளியேற்றும் விதி*
தீர்வு : இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதையுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பருகவும்.
*உருளைக்கிழங்கால் குடலில் அதிகம் தேங்கி ஒட்டியுள்ள மாவுச்சத்தை உடலிருந்து வெளியேற்றும் விதி* 
தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய் மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் விதை ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும். 
*நார்சத்தே இல்லாத அசைவ உணவானது குடலில் ஒட்டுக்கொண்டு வராமல் கட்டியாகிறது. அதனை வெளியேற்றும் விதி*
காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6 கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும். 
*அதிகமாக பால், தயிர், மோர் மற்றும் பால் பதார்த்தங்களை உண்ணுவதால் உடலில் புளிப்புத்தன்மை மிகுந்து குடலில் பூச்சிகள் உருவாகிறது. அதனை வெளியேற்றும் விதி*  
காலை, பிற்பகல், இரவு மூன்று முறை முற்றிய முருங்கை விதை இரண்டை உணவுக்கு பின் 15 நிமிடம் சப்பி விட்டு இறுதியில் மென்று முழுங்கவும். 
*பச்சை மிளகாய், வரமிளகாய் ஆகிய இரண்டின் உபயோகித்தல் ஏற்பட்ட இழப்பை மாற்றி மீண்டும் உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் விதி*
தினமும் காலையில் ஒரு முழு பீர்கங்காய் தோலுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும். 
*உடலுக்கு தேவையில்லாத ரீபைண்டு ஆயிலை உட்கொண்டதால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. அதனை வெளியேற்றும் விதி*
காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து பருகவும். 
*மைதா மற்றும் முட்டையை வெளியேற்றும் விதி*
தீர்வு : காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழு எலுமிச்சை பழத்தை பச்சையாக தோலுடன் மிக்சியில் நீர் விட்டு அரைத்து வடிக்காமல் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பொறுமையாக சப்பி குடிக்கவும்.