ஒரு மனிதர் ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து மிகவும் கோபமாக கத்தினார். இங்கு என் மனைவி உணவு வாங்க வரும் பொழுது யார் அவளை மோசமாக திட்டியது.
மிகவும் உயரமான ஒரு பலசாலியான ஒருவன் எழுந்து நின்று சொன்னான் நான்தான் உன் மனைவியை திட்டினேன் அதற்கு இப்பொழுது என்ன என்றான்.
இவர் சொன்னார் ஆமாம் நீ திட்டியது சரிதான் அதுதான் என்னுடைய கருத்தும் என்று அவனிடம் சொல்லிவிட்டு அவமானத்துடன் வெளியேறிவிட்டார்.
உங்கள் அவமானத்திற்கு அடுத்தவர் காரணம் அல்ல.நீங்களே காரணம்.உங்கள் காயத்தை நீங்களே சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.
யாருக்கும் உங்களை வேதனைப்படுத்த விருப்பமில்லை.யாரும் உங்களை அவமானப் படுத்த விரும்புவதில்லை.
நீங்களே உங்கள் காயத்தை பாதுகாத்துக்கொள்ள மும்முரமாய் இருக்கிறீர்கள்.
அடுத்தவர் அவமானப்படுத்துவதற்கு முன்பே நீங்கள் அவமானப்படுவதற்கு தயாராக இருக்கிறீர்கள். நீங்களே காரணம்.
கொஞ்சம் இறந்த காலத்திற்கு திரும்பிச் சென்று பாருங்கள் உங்கள் ஆசிரியர் உங்களை முட்டாள் என்று அழைத்து இருப்பார்.
உங்கள் தந்தை ஏதாவது சொல்லி இருப்பார்.
உங்கள் நண்பர்களிடம் ஏதாவது அவமானம் நிகழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவர்களே அதையெல்லாம் மறந்து இருப்பார்கள் ஆனால் நீங்கள் அதை ஞாபகத்தில் வைத்திருபீர்கள்.
உங்கள் காயத்தை புரையோட விட்டிருக்கிறீர்கள்.
நான் சொல்கிறேன் உங்கள் காயத்தை பற்றி விழிப்போடு இருங்கள். அதை குணமாக விடுங்கள். யாராவது உங்களை அவமரியாதை செய்கிறார்கள் என்பது இல்லை. நீங்கள் அவமானமாய் உணர்கிறீர்கள் என்பதுதான் உண்மை.
உடனே எப்படி பழிவாங்குவது என்று யோசிக்க தொடங்குகிறீர்கள்.
அந்த மனிதன் உங்களை கைப்பற்றி விட்டான்.
இப்போது நீங்கள் சுற்றி சுற்றி வருகிறீர்கள் நாள் கணக்காக, பல இரவுகளாக, பல மாதங்களாக, பல வருடங்களாக கூட உங்களால் தூங்க முடியாது.
உங்களுக்கு கெட்ட கனவுகள் வரும்.
மக்கள் சிறிய விஷயங்களுக்காக முழு வாழ்க்கையுமே வீணடிக்கிறார்கள். மற்றவர்கள் அவமரியாதை செய்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக. உங்கள் காயத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.
இருபத்தி நான்கு மணி நேரம் போதும். யாராவது உங்களை அவமரியாதை செய்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.பதிலுக்கு ஒன்றும் செய்யாதீர்கள் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்.
உடனே நீங்கள் இது வரை உணர்ந்திராத சக்தி உங்கள் மேல் பொழிவதை உணர்வீர்கள்.
காயத்தை வளர விடாதீர்கள். அதை புரையோட அனுமதிக்காதீர்கள்.
யாராவது உங்களை மண்ணில் தள்ளிவிட்டால் விழுங்கள் பிறகு எழுந்து வீட்டுக்குச் செல்லுங்கள்.
இருபத்தி நான்கு மணி நேரங்கள் மட்டுமே போதும் பதிலுக்கு எதுவும் செய்ய முயற்சிக்காதீர்கள் என்ன நிகழ்ந்தாலும்.
யாராவது உங்களை குட்டினால் தலையை குனிந்து நன்றியோடு ஏற்றுக்கொள்ளுங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். எதுவுமே செய்யாதீர்கள் 24 மணி நேரங்களுக்கு மட்டும் போதும்.பிறகு இதற்கு முன் உணர்ந்திராத ஒரு சக்தி உங்களுக்குள் எழுவதை பார்ப்பீர்கள்.
வேரிலிருந்து ஒரு புதிய புத்துணர்ச்சி எழும்பும்.
ஒருமுறை நீங்கள் தெரிந்துகொண்டால் அதை சுவைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை மாறுபடும். பிறகு நீங்கள் செய்துகொண்டிருக்கும் முட்டாள்தனங்களை பார்த்து சிரிப்பீர்கள்.
எல்லா வருத்தங்களையும் , எதிர்பார்ப்புகளையும் கொண்டு உங்களை நீங்களே அழித்துக் கொண்டிருப்பதை பார்த்து சிரிப்பீர்கள்.
எல்லாமே நீங்கள்தான்.
உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை அழிக்க முடியாது.
உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது.
எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு விட்டால் பிறகு நீங்கள் தான் யூதாஸ். நீங்கள் தான் இயேசு.
__ஓஷோ.